எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில்
ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான
, ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக்
குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு
இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு
தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில்
குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக
இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும்
தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும்.
ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு
சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது .
அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி,
நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால்
அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் விடக் கூடிய நீளம்
உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா
ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில்
நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் அல்லது பட்டை
கட்டப்பட்டும் கட்டப்பட்டும்.
பட்டை:
துலாவின் இந்தமுனையைத் தாழக்
கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம்
இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி
இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத்
துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.
நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன்
முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை
நிரப்புகின்றோம். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப்
பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.
இந்தத் துலா முறையானது அருகி சூத்திரக்கிணறு முறைக்கு மாறி , ( இது சம்பந்தமான போதிய விளக்கம் எனக்கு இல்லை யாரும்
விளங்கப்படுத்தினால் நல்லது ) , கப்பி முறையாகி , இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் மோட்டர் பம்மில் வந்து நிற்கின்றது
.
November 17, 2011


Comments
Post a Comment