Skip to main content

மனமே மலர்க - பாகம் 12.





உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது

0000000000000000000000000000000

இன்னும் ஒரே ஒரு நாள்...

ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று - அடிப்படையான ஆசைகள், ஆதாவது, குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது - அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ?

இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் ! அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில் மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்று தெரிந்தால், இன்னும் ஒரே ஒரு நாளாவது கூடுதலாக நாம் உயிர்வாழ மாட்டோமா ? என்று ஓர் ஆசை எல்லோருக்குமே பிறக்கும். இதுதான் முதல் ஆசை !

இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக்.. . நான் முதன் முதலாகக் கீதையைப் பற்றிச் சொற்பொழிவாற்றப் போனபோது, இந்தக் கூட்டத்தில் முதல் நாள் பேச்சை முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டேன். அன்றிரவு நான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது, ஓர் இளம்பெண் எதிரில் நின்றிருந்தாள் ! நான் என்ன ? என்று கேட்பதற்கு முன்பே, அந்தப் பெண் படபடவென்று பேச ஆரம்பித்தாள். நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இன்று என் கொடுக்மைக்கார மாமியாரின் வீட்டைவிட்டுக் கிளம்பினேன் ! கடற்கரையில் ஜனசந்தடியாக இருந்தது. சரி இன்னும் ஒன்று இரண்டு மணி நேரம் கழித்துத் தற்கொலை செய்து கொண்டால் யாரும் என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இனி ஒரே ஒருநாள் கூட வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை ! என் உயிரை மாய்த்துக் கொள்ள, இப்போது நேராக கடகற்கரைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன்.. . என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே நடக்க ஆரம்பித்தாள். சந்நியாசியான என்னை ஓர் இளம்பெண் நள்ளிரவில் சந்தித்துவிட்டு, நேரடியாகக் கடற்கரைக்குப் போய்த் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்.. .?

வேகமாகக் கிளம்பி அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, நான் சொல்ல வந்ததில் பாதியைத்தான் இன்று சொற்பொழிவில் சொன்னேன்.. . சொல்ல வேண்டியது இன்னும் மீதி இருக்கிறது ! நாளை வரை காத்திருந்து நான் சொல்லப் போவதையும் கேட்டுவிடு.. . என்றேன்.

அடுத்த நாள் கீதை சொற்பொழிவை, நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். அங்கே நான் சொன்ன விஷயம் இதுதான் -

எல்லோருக்குமே ஒரே நாள் கூடுதலாக வாழ்ந்துவிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதை நமது வேதம் சத் என்று குறிப்பிடுகிறது. ஆனால், கூடுதலாக வாழப்போகிற அந்த நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் ஆசைப்படுகிறோம் ! இதை வேதம் ஆனந்தம் என்கிறது. நிரந்தர தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் என்னைச் சந்தித்த பெண் உட்பட ! (அதன் பிறகு நான் அந்தப் பெண்மணியைப் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.)

மனிதனுக்கு உள்ள மூன்றாவது நிரந்தர ஆசை, தனது வாழ்நாளில் நிறைய தகவல்களை - அறிவைச் சேகரிக்க வேண்டும் என்பது ! இந்தக் கருத்தை எங்கே சொன்னாலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்புவது வழக்கம் ! என் மகனுக்குப் பத்து வயதுதான் ஆகிறது. அவனுக்குப் பள்ளிக்கூடப் பாடங்களிலேயே ஈடுபாடு இல்லை ! ஆனால் நீங்களோ, ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ! என்கிறீர்கள். அது எப்படி ? என்று சிலர் கேட்கலாம். ஒருவனுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு அர்த்தம், எந்த வகையான அறிவைச் சேகரிப்பதிலுமே அவனுக்கு ஆசை இல்லை என்பது கிடையாது. ஒரு முக்கியமான ரகசியம் ! இது உனக்குத் தெரியக்கூடாது ! என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிப் பாருங்கள் ! அது என்ன ரகசியம் என்று அறிய, அடுத்த நாள் வரை அவரால் காத்திருக்க முடியாது. புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான், மூன்றாவது நிரந்தரமான ஆசை ! இந்த ஆசையைத்தான் நமது வேதங்கள் சித் என்று குறிப்பிடுகின்றன !

ஆக - சத் எனப்படும் வாழ்கிற ஆசை. அடுத்து ஆனந்தம் என்ற ஆசை.. . வாழ்கின்ற நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது. மூன்றாவதான சித் எனப்படும் அறிவைச் சேகரிக்கும் ஆசை. இதைத்தான் நமது வேதம் சத்-சித்- ஆனந்தம் என்று மொத்தமாகச் சொல்கிறது ! பேச்சுத் தமிழில் சொன்னால், சச்சிதானந்தம் !

சத், சித் ஆனந்தம் என்ற மூன்று ஆசைகளையும்தான் வாழ்க்கைப் பெருங்கடலில் மூச்சை இழுத்தப் பிடித்துக்கொண்டு முத்தெடுப்பவன் போல தேடிக் கொண்டேயிருக்கிறோம்.

000000000000000000000000000000000000000

பிரச்சனைகளை பிரித்தால் பிரச்சனை தீரும்

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை . யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்றுஅமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' 

என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு,யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத் தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான் . எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு,அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்துமுடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

0000000000000000000000000000000

சாதுரிய மனிதர்கள்.

சாதுரியமாக நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் தங்களைத் தலைவர்களாகவும் செல்வந்தர்களாகவும் உயர்த்திக்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வார்கள். யாரும், தங்கள் மீது கருத்தைத் திணிப்பதை விரும்புவதில்லை. ஒருவன் தான் விரும்புவதை மற்றவர்களின் கருத்தாக அவர்களிடம் இருந்தே வெளிவரும்படி சாமர்த்தியமாகப் பேசுவதுதான் சாதுரியம்.சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவதும், செய்வதும் சாமர்த்தியமே. மற்றவர்கள் கோபம் கொள்ளாதபடி தன கருத்துக்களை அமைதியாக மென்மையாக எடுத்து சொல்லும் கலையே சாதுரியம்.

சாதுரியக்காரர்கள் தங்கள் பேச்சினாலும் செய்கையாலும் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் தங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களாக மாற்றிக் கொண்டு விடுவார்கள். இவர்கள் யாருடைய மனமும் புண்படும்படி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள். யாருடைய சுய கௌரவத்தையும் பாதிக்கும்படியாக ஒரு சிறு செய்கை கூட செய்ய மாட்டார்கள். மற்றவர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் மதித்து நடப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடன் பேசி மகிழும் சந்தர்ப்பத்தை மற்றவர்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அனைவரும் ஓடி வருவார்கள்.

சாதுரியமாக நடந்து கொள்வது என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல. கடுமையான பயிற்சி கொண்டு அனைவரும் அடைய முடியும்.தன வாயிலிருந்து ஒரு வார்த்தை வருமுன் , ஒரு செய்கை செய்யுமுன்,அவற்றின் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து கெடுதல் தரும் வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பவர்கள் அனைவரும் சாதுரிய மனிதர்களே!

00000000000000000000000000000

வாழ்க்கையில் ஒப்பீடு வேண்டாமே

இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போது,அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

அவரை அருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம். இந்த உதிரி பாகங்கள்அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப்போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய்; உங்களுக்கோ பல ஆயிரங்கள்''என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப்பொருமினான். அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், ''உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சைதான் செய்யறே! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும்போது செஞ்சு பாரு!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

வாழ்வில், உண்பதும் உறங்குவதும்போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல்தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு! பொறாமை அகற்றி மனத்தை தூய்மையாக வைத்திருந்தால், அதுவே தெய்வம் வாழும் ஆலயமாகும்!

000000000000000000000000000000000

டென்ஷன் டென்ஷன்.

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன. இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது. ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன்!

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால்தான் உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .

பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.

அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை. சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை...

அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம் என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள். ஆனால், கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை. அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர், கவலைப்படாதீர்கள்... பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீங்கள் போய்விடலாம் என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார். அதற்கு அந்தப் பேராசிரியர், "அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம், அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால், இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள்" என்றார்.

இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயங்களைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன. நாம் பதட்டத்தில் இருக்கும்போது, எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி, அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும். ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள், வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும் எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை. ஆனால் பரிசல் மட்டும் இருந்தது. பரிசலைத் தாங்களே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை. அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து... போதையும் மெல்லத் தளிய... அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்த குடிகாரர்கள் கவனித்தார்கள். குடிகாரர்கள் கண்களை போதையும் இருட்டும் மறைத்தது போல,

பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது. புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் ஜென் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது.

ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால், ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார். ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து,

”என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர் ”

என்று அறிவித்தார். முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார். மறுநாள் அரசவையில். . . கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார்பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால், கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம் பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல், சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

000000000000000000000000000

குதிரையும்……. ஆடும்………

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து,

"எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்

"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்."

என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

0000000000000000000000000000

கால்பந்து

யானைகளுக்கும், பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன. இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான் (நூறு கால் பூச்சி) இறங்கியது. உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது. ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானைக் குழுவின் தலைவன், பூச்சிக் குழுவின் தலைவனிடம்,

''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''

பூச்சித்தலைவன் சொன்னது,

''அதுவா, பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''



April 11, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம