Skip to main content

Posts

Showing posts from August, 2019

‘என்னளவில் நானொரு சமகாலத்தை ஆவணப்படுத்தும் ஓர் எளிய கடத்தி’-நேர்காணல்-பாலைவன லாந்தர்-கோமகன்

“எனக்கு வசப்பட்டிருக்கும் எழுத்துக்கள் முதலில் என்னை திருப்தி செய்யவேண்டும். இந்த சுயநலமான விதிதான் எனது நிலையில் நான் கண்டடைந்த பொருளும் கூட. எண்ணிலடங்கா எழுத்தாளர்களுக்கு மத்தியில் நான் ஒப்பிட்டு மதிப்பிட்டு பார்க்க எழுதுவதை விட என்னை ஆற்றுப்படுத்தும் எழுத்துக்களே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கலைகளுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதை அதற்கான தன்போக்கில் செலுத்தும் தன்வித்தையை கையாளும் உளப்பாங்கே”. என்று போர் சிந்து படிக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பாலைவன லாந்தர், ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்’,’லாடம்’,’சிகப்புத்தடங்கள்’ என்று இதுவரையில் மூன்று நூல்களை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு தந்திருக்கின்றார். நடுவின் தமிழக சிறப்பிதழுக்காக நான் பாலைவன லாந்தருடன் செய்து கொண்ட கதையாடல் இது . கோமகன் 00000000000000000000000 ஒரு சிறிய அறிமுகத்துடன் இந்த நேர்காணலை தொடருவோமே …… என்னுடைய இயற்பெயர் நலிஜத், பிறந்தது காயல்பட்டிணம் தூத்துக்குடி, வளர்ந்தது சென்னை, பள்ளிப்படிப்பை முழுவதும் முடிக்கும் முன்பே திருமணம். சிறிய வயதில் இருந்தே தரைமட்ட சமூகத்தின் மீதான அக்கறைகளுடன

யார் இலக்கியப் போலிகள் ? அ.யேசுராசா என் மீது வைத்துள்ள அவதூறுக்கு எதிர் வினை

கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது : ” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக……. கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர்

நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போம் 03’ நிகழ்வு 07 ஆடி 2019

வணக்கம் வாசகர்களே நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போல் 03’ நிகழ்வில் அண்மையில் சென்னை புத்தகச்சந்தையில் எதிர்ப்பதிப்பகத்தால் வெளியாகியிருந்த கோமகனின் முரண் சிறுகதை தொகுதி கதைப்பதற்காக எடுக்கப்பட்டிருந்தது. கவிஞர் வாசுதேவன் நிகழ்விற்குத் தலைமையேற்க ஜெனி ஜெயச்சந்திரன் அர்விந் அப்பாத்துரை ஆகியோர் நூல் தொடர்பாகக் கதைத்தார்கள். இறுதியாக கோமகன் ஏற்புரையை வழங்கினார். அத்தான் பின்னர் நூல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து வெளியாகும் காலம் சஞ்சிகையும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்ட காணொளிகள் வாசகர்களுக்காக 01 வாசுதேவனின் தலைமையுரை 02 ஜெனி ஜெயச்சந்திரனின் கதையாடல் 03 அர்விந் அப்பாத்துரையின் கதையாடல் 04 கோமகனின் ஏற்புரை

திரும்பிப் பார்க்கின்றேன் – நடுவுக்கு வயது 03 – பிறப்பு 10 ஆடி 2016

வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே ! இன்று நடு இணைய சிற்றிதழுக்கு வயது 03. இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடு தனது இலக்கை அடைந்திருக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் கையில் விட்டு விட்டு நாங்கள் இதுவரையில் எதை விதைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் பார்க்கலாம் என எண்ணுகின்றேன். நடு இணைய சிற்றிதழ் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை தனது ஒரு முகத்தை மட்டுமே வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் காட்டி வந்திருக்கின்றது. அதன் மறுபக்கம் சோதனைகளும் வேதனைகளும் எம்மவர் மத்தியில் எழுகின்ற ‘காழ்ப்புணர்வு’ மற்றும் புறங்கூறல்’ போன்றவற்றை எதிர்கொண்டது . ஆரம்பத்தில் தாயகத்தை சேர்ந்த எனதருமைத்தம்பி மதுரன் ரவீந்திரனே இந்த தளத்தை வடிவமைத்து தரவேற்றம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வகித்து வந்த வேலையினால் எம்மைக் கவனிப்பதில் அவருக்குப் பெரும் நேரச்சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர் இல்லாது விட்டால் நடு பிறந்திருக்க முடியாது. அவரை இந்த வேளையில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். நடுவை இயக்குவதில் நாம் தொழில் நுட்பரீதியாக தனித்து விடப்பட்டோம். நடுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. இதை ஒரு ச