Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-கட்டுரை

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 01 - 'தமிழ்நாட்டில் வாழ்ந்த பௌத்த பெரியோர்கள்'

01 இளம் போதியார் இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ் மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி. பி. முதல், அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பாடல் பின்வருமாறு : ‘பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை ! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே ! கொண்கன் யான்யாய் அஞ்சுவல் ! எனினும் தானே பிரிதல் சூழான் ; மன்னே ! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும் ! அதனால், புலர்வது கொல் அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே!’ 2. அறவண அடிகள் இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலில் இருந்தும் அறியக் கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. ப

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்

வேலை நிறுத்தமும் பயணிகளும்

பிரான்ஸின் போக்குவரத்துப் பணிநிறுத்தம் மார்கழி 05 இல் தொடங்கி முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றது. குறிப்பாக பாரிஸ் நடைமுறை வாழ்வியலை இழந்து போய் விட்டது. தினமும் 20 மில்லியன் யூரோக்கள் அரசுக்கு வருமானமிழப்பு. குறிப்பாக சுற்றுலாத்துறை அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது. இந்த வருமானமிழப்பை அரசு பின்னர் இதே பணிநிறுத்தம் செய்பவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வரியாக மீட்டுக்கொள்ளும். அப்படியானால் இந்த பணிப்புறக்கணிப்பு யாருக்காக ? இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் ? என்ற பல மில்லியன் பெறுமதியான கேள்விகள் எழுகின்றன. பணிநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து துறை போக்குவரத்துப் பயணிகளை ஆட்டு மந்தைகளைப்போல் நடாத்துகின்றார்கள். ஒரு மனித உயிரிக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட தர மறுக்கின்றார்கள் . உதாரணமாக மின் தூக்கிகளை நிறுத்தி வைத்தல் , எஸ்கலேட்டர்களை நிறுத்தி வைத்தல் , பயணிகளை 10/15 மிட்டர் உயரத்தில் இருக்கும் சம தளத்திற்கு படிக்கட்டுகளால் ஏறவிடல். உப்புச்சப்பில்லாத நேரத்தில் நிலக்கீழ் தொடருந்தை இயக்குதல் .எல்லாத்திலும் கொடுமையாக பயணிகளை அடைத்து வைத்து பின் கூட்டமாக தொடர

பிரான்சின் பொதுவேலை நிறுத்தம் தொடருமா இல்லையா ?

கடந்த 05 ஆம் திகதியில் இருந்து இன்று வரை பொதுவேலை நிறுத்தம் பிரான்சின் பலபாகங்களிலும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது . அரசின் அனைத்து துறைகளும் ஏறத்தாழ 97 வீதமான பிரெஞ் மக்கள் அரசின் புதிய ஓய்வூதியத் திட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் எடுவார்ட் பிலிப் அரசின் புதிய ஓய்வூதியத்திட்டத்தை முன்னெடுத்து அரசின் நிலைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலும் 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி 1975 ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதியத்திற்கான உச்ச வயதெல்லை 64 ஆகின்றது. மற்றயவர்களுக்கு 62 வயதாகின்றது. போக்குவரத்து துறையை சேர்ந்த தொழிலாளர் குறிப்பாக தொடருந்ததை செலுத்துபவர்கள், போக்குவரத்து அலுவலக பணியில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவித்தவாறே 52 ஆவது வயதிற்குப் பின்னர் ஓய்வூதியம் எடுக்க முடிகிறது. ஆனால் மற்றைய துறைகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து துறையின் சலுகைகளும் தமது வருமானத்தைக் கொடு

நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போம் 03’ நிகழ்வு 07 ஆடி 2019

வணக்கம் வாசகர்களே நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போல் 03’ நிகழ்வில் அண்மையில் சென்னை புத்தகச்சந்தையில் எதிர்ப்பதிப்பகத்தால் வெளியாகியிருந்த கோமகனின் முரண் சிறுகதை தொகுதி கதைப்பதற்காக எடுக்கப்பட்டிருந்தது. கவிஞர் வாசுதேவன் நிகழ்விற்குத் தலைமையேற்க ஜெனி ஜெயச்சந்திரன் அர்விந் அப்பாத்துரை ஆகியோர் நூல் தொடர்பாகக் கதைத்தார்கள். இறுதியாக கோமகன் ஏற்புரையை வழங்கினார். அத்தான் பின்னர் நூல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து வெளியாகும் காலம் சஞ்சிகையும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்ட காணொளிகள் வாசகர்களுக்காக 01 வாசுதேவனின் தலைமையுரை 02 ஜெனி ஜெயச்சந்திரனின் கதையாடல் 03 அர்விந் அப்பாத்துரையின் கதையாடல் 04 கோமகனின் ஏற்புரை

திரும்பிப் பார்க்கின்றேன் – நடுவுக்கு வயது 03 – பிறப்பு 10 ஆடி 2016

வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே ! இன்று நடு இணைய சிற்றிதழுக்கு வயது 03. இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடு தனது இலக்கை அடைந்திருக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் கையில் விட்டு விட்டு நாங்கள் இதுவரையில் எதை விதைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் பார்க்கலாம் என எண்ணுகின்றேன். நடு இணைய சிற்றிதழ் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை தனது ஒரு முகத்தை மட்டுமே வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் காட்டி வந்திருக்கின்றது. அதன் மறுபக்கம் சோதனைகளும் வேதனைகளும் எம்மவர் மத்தியில் எழுகின்ற ‘காழ்ப்புணர்வு’ மற்றும் புறங்கூறல்’ போன்றவற்றை எதிர்கொண்டது . ஆரம்பத்தில் தாயகத்தை சேர்ந்த எனதருமைத்தம்பி மதுரன் ரவீந்திரனே இந்த தளத்தை வடிவமைத்து தரவேற்றம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வகித்து வந்த வேலையினால் எம்மைக் கவனிப்பதில் அவருக்குப் பெரும் நேரச்சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர் இல்லாது விட்டால் நடு பிறந்திருக்க முடியாது. அவரை இந்த வேளையில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். நடுவை இயக்குவதில் நாம் தொழில் நுட்பரீதியாக தனித்து விடப்பட்டோம். நடுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. இதை ஒரு ச

‘மறுத்தோடி’ இணைய சிற்றிதழ் ஒரு நோக்கு

அண்மையில் வெளியாகியிருந்த மறுத்தோடி இணைய சிற்றிதழ் வாசிக்க முடிந்தது. ஆக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஆசிரியர் குழுமம் தீயாக வேலை செய்திருக்கின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் கவர்ச்சி முக்கியம். அப்பொழுதுதான் அது வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இது இணைய சிற்றிதழுக்கும் பொருந்தும். அதில் இருக்கின்ற பொருள் தரமானதாக இருந்தாலும் அது இருக்கின்ற இடம் அழுகுணி இடமாக இருந்தால் யாரும் அதனை திரும்பியும் பார்க்க மாட்டார்கள். பின்வரும் விடயங்களை ஆசிரியர் குழுமம் உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். தளவடிவமைப்பு இன்னும் மெருகேற்றப்படல் வேண்டும். அப்பொழுதுதான் அது பொதுவெளியில் நிலைத்து நிற்க முடியும். தமிழ் பதிப்பில் வருகின்ற மறுத்தோடிக்கு தலையங்கங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. இது முரண்நகையாக உள்ளது. தளத்தில் இருக்கின்ற எழுத்துருக்களை விசேட பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. இவைகள் எல்லாம் சிறிய விடயங்களே. ஆனால் அவை வாசகருக்கு முக்கியமான விடயம். எழுத்துருவில் கோளாறு என்றால் வாசகர் மறுத்தோடியை மறுத்தோடிவிடுவர் . ஆனால் மூன்று மொழிகளிலும் கிழக்கில் இருந்து வெள

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

அரசியலும் எழுத்தும்

எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது. அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது. எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை. ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, "எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை" என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது. கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, "நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்" என்

ஒரு சில படைப்பாளிகளின் பார்வையில் பாலியல் தொழிலார்கள்

ஒரு சில படைப்பாளிகளின் சிந்தனைப்போக்குகளை பார்க்கையில் எனக்கு அவர்களின் அறியாமை மீது இரக்கமே ஏற்படுகின்றது. தங்கள் படைப்புகளில் பெண்களின் மீது உள்ள பார்வைகளை முற்போக்கு சிந்தனைகளாகக் காட்டும் இந்தப்படைப்பாளிகள், நடைமுறைகளில் அவ்வாறு காட்டிக்கொள்வதில்லை. அண்மையில் எனது சக படைப்பாளியான ஒரு கவிஞர் டெல்லியில் இருந்த பாலியல் தொழிலார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த மனிதாபிமான உதவிகளை எள்ளி நகையாடி இருந்தார்.அத்துடன் மற்றயவர்களுக்கு போதனையும் செய்திருந்தார். அதில் அவரது பெண்கள் மீதான இழி பார்வையும், ஆணாதிக்க மனோபாவவுமே மேலோங்கி இருந்தது . குகைகளில் விலங்குகளுடன் விலங்குகளாக இருந்த மனிதனின் சிந்தனை போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களே நாகரீகங்களின் வளர்ச்சி நிலையும் அத்னூடாக வந்த இன்றைய வாழ்வு முறைமைகளும். ஆனால் ஒருசிலருக்கு இந்த வளர்ச்சிகள் ஒவ்வாமையாகக் காணப்படுகின்றது. மானுட வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் சம அளவிலான உயிரிகள். .ஆனால் மானுட நாகரீகப் போக்குகளிலே உடல்வலுவால் பலம் கொண்ட ஆண்களால் பெண்ணானவள் இரண்டாம் தரப்பிரஜையாக நடாத்தப்பட்டாள். இதற்கு உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே ஊ

பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும்

என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட .. இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  ந

மறைந்தான் ஈழத்தின் மாபெரும் கலைஞன்

எனக்கும் வில்லிசை மன்னர் சின்னமணிக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது சிறுவயதில் இவரின் வில்லிசையை முன்வரிசையில் இருந்து பார்த்திருக்கின்றேன் இவர் வில்லிசையில் கதை சொல்லும் பொழுது இவர் சிரித்தால் நான் சிரித்திருக்கின்றேன் , இவர் அழுதால் நானும் அழுதிருக்கின்றேன். இவர் கோவிக்கும் முகபாவம் வந்தால் நானும் கோவித்திருக்கின்றேன். இப்படி ஒரு அதிசயத்தை சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இவரது வில்லிசை நடைபெறும் பொழுது உணர்ந்திருக்கின்றேன். இவரது வில்லிசை திறனுக்கு ஈழத்தில் யாருமே மாற்றீடாக இருக்கவில்லை. இவரது வில்லிசை ஈழத்தில் மட்டும் முடங்கி விடாது உலகில் தமிழர் செறிந்து வாழும் நகரங்களில் எல்லாம் ஓங்கி ஒலித்து இருக்கின்றது . சின்னமணி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவரின் உண்மையான பெயர் க. நா. கணபதிப்பிள்ளை ஆகும். இவர் மார்ச் மாதம் 30 ஆம் திகதி 1936 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் மாதனை என்ற கிராமத்தில் பிறந்தார். சின்னமணி தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். இவர் வில்லிசைக்கலையில் மட்டுமல்ல

தங்க ஓலை விருதிற்கான 67 வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் 15.05.2014 அன்று ஆரம்பமாகியுள்ளது. உலகில் மிக முக்கியமான திரைப்படங்களை அரங்கில் திரையிட்டு, அதில் சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும், சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும் மேலும் குறும்படங்களிற்கான விருதுகள் மட்டுமல்லாது போர்ணோ கிராபி நடிகர்களையும் அழைத்து அவர்களிற்கான ஒரு அங்கீகாரத்தினை கொடுத்து கெளரவிக்கின்ற நிகழ்வும் பல வருடங்களாக நடந்தது ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அதனை நிறுத்தியுள்ளார்கள்..அண்ணளவாக ஒர் ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன. உலக சினிமா வரலாற்றில் முதன்முதலாக வெனிஸ் நகரத்தில் 1932 ஆம் ஆண்டில் சர்வதேச திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது. இன்றைய உலகில் மிக முக்கியமான திரைப்பட விழாக்களாக கேன்ஸ் திரைப்பட விழா,பெர்லின் திரைப்பட விழா,வெனிஸ் திரைப்பட விழா,டொரன்டோ திரைப்பட விழா,சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழா,மெல்போர்ன் திரைப்பட விழா ,மொன்றியல் திரைப்பட விழா ,எடின்பர்க் திரைப்பட விழா ,இந்திய சர்வதேச திரைப்பட விழா என்பன இடம் பெறுகின்றன . இன்றைய உலகில் ஒஸ்

நாங்களும் மகப்பேறும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் ( IN VITRO FERTILIZATION ,-IVF) குழந்தை முறையே ஆகும். முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ( TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ ( TRIPILE BABY) ( இதற்கு எனக்கு சரியான தமிழ் தெரியவில்லை) பெற்றுக்கொள்ள முடியும். குறைகளாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணுவும் செயற்கைமுறையில் கருத்தரிக்கப்பட்டு தாயின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை உருவாகுவதில் பிரச்சனைகள் இல்லை.மாறாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணவும் வங்கிகளில்( SPERM BANK) பெறப்படும் பொழுத