Skip to main content

பிரான்சின் பொதுவேலை நிறுத்தம் தொடருமா இல்லையா ?


கடந்த 05 ஆம் திகதியில் இருந்து இன்று வரை பொதுவேலை நிறுத்தம் பிரான்சின் பலபாகங்களிலும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது . அரசின் அனைத்து துறைகளும் ஏறத்தாழ 97 வீதமான பிரெஞ் மக்கள் அரசின் புதிய ஓய்வூதியத் திட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் எடுவார்ட் பிலிப் அரசின் புதிய ஓய்வூதியத்திட்டத்தை முன்னெடுத்து அரசின் நிலைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலும் 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி 1975 ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதியத்திற்கான உச்ச வயதெல்லை 64 ஆகின்றது. மற்றயவர்களுக்கு 62 வயதாகின்றது.

போக்குவரத்து துறையை சேர்ந்த தொழிலாளர் குறிப்பாக தொடருந்ததை செலுத்துபவர்கள், போக்குவரத்து அலுவலக பணியில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவித்தவாறே 52 ஆவது வயதிற்குப் பின்னர் ஓய்வூதியம் எடுக்க முடிகிறது. ஆனால் மற்றைய துறைகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து துறையின் சலுகைகளும் தமது வருமானத்தைக் கொடுத்து தமது 62 ஆவது வயது வரைக்கும் முழுமையான ஓய்வூதியத்திற்காக காத்திருக்க வேண்டியதாகின்றது. ஆக இங்கு இருவேறு பட்ட பாரபட்சங்கள் இருக்கின்றன.

எனக்கு இந்த அறிவிப்பை கேட்டவுடன் சந்திரிக்காவின் நேர மாற்ற அறிவிப்பே நினைவில் வந்தது. ஒருகாலத்தில் சந்திரிக்கா மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இலங்கையின் நேரத்தில் மாற்றத்தை கொண்டுவந்தார். அப்பொழுது சாதாரணப்பட்ட சனங்கள் இது பழைய நேரமா இல்லை சந்திரிகா நேரமா என்று கேட்டு தமது நேரத்தை கணக்கீடு செய்த காலமும் இலங்கையில்இருந்தது .

மேலோட்டமாக பார்க்கும்பொழுது குழப்பமான அறிவிப்பாக இருந்தாலும் நடைமுறை அரசு, அரசின் போக்குவரத்து துறைக்கு வைத்த ஆப்பாகவே இதை பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அறிவித்த பொதுவேலை நிறுத்தம் நாளையும் தொடருமா இல்லையா என்பது மில்லியன் யூரோ பெறுமதியான கேள்வி .

இந்த பொதுவேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு விரிவான கட்டுரையை வரும் தை மாத நடு இதழில் வாசுதேவன் எழுத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


கோமகன்


11/12/2019


Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...