Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-குறுநாவல்.

வாடாமல்லிகை- இறுதிப்பாகம்

அந்த அதிகாலை வேளையில் வல்லிபுரத்தாழ்வாரின் சன்னதி மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் வல்லிபுரத்தாழ்வார் அனந்த சயனமாகியிருந்தார். மனைவி கோயிலின் உள்ளே செல்ல நான் வெளியே இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்தேன். காலைவேளையின் சீரான தென்றல் முகத்தில் அடித்தது. தூரத்தே கடல் அலையோசை மெதுவாகக் கேட்டது. நான் நின்ற மரத்தின் மேலே புலுனி ஒன்று தனியாக குரல் கொடுத்துக்கொண்டது. அதற்கும் என்னைப்போல யாரும் இல்லையோ என்னவோ. அதன் குரலில் ஒருவித சோகம் இளையோடியிருந்தது. அந்த சந்தடியில்லாத அமைதியான சூழல் மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ஒருவிதத்தில் பயம் தருவதாகவே இருந்தது. தூரத்தே பச்சைப் படையணி ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தது .பச்சைக்கச்சான் வறுக்கும் மணமும், தோசை சுடுகின்ற மணமும் ஒரேசேர மூக்கில் நுழைந்தன. மனதில் பலவிதமான சிந்தனைகள் ஒரேநேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பின்னிப்பிணைந்தன. அதில் ஒர் சிந்தனை என்ற பாம்பு "எதுவாகினும் நீ ஒரு அந்நியன் தானே .இந்த மண் உனக்கு சொந்தமானதா? வீண் ஆசைகளை ஏன் வளர்க்கின்றாய் "? என்று என் மனதில் ஓங்கி ஓர் கொத்து கொத்தியது. ம

வாடாமல்லிகை - பாகம் 15

அந்த அதிகாலை வேளை பருத்தித்துறை பஸ்நிலையம் பல சோலிகளை கொண்ட மக்களால் திணறியது. வவுனியா செல்லும் பஸ் புறப்பட நேரம் இருந்ததால் பஸ் சனங்களின்றி வெறுமையாக இருந்தது நான் வழக்கமாக செல்லும் தேநீர்கடையினுள் நுழைந்து ஓர் வடையையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு கடைவாசலில் நின்று தேநீரை அருந்தியவாறே பஸ்நிலையத்தை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். ஐரோப்பாவின் இறுகிய வாழ்க்கை சூழலும் தலைதெறித்த பரபரப்பும் இல்லாத இந்த சூழல் என்னை கொள்ளை கொண்டது. இருந்தால் போல் என் மனதோ உன்னால் இங்கு தொடர்ந்து இருக்க முடியுமா? நீ இந்த விடயத்தில் நடிக்கின்றாய்தானே? என்று என்னை நக்கலாக கேட்டது. மனதுடன் பேச எனக்கு ஓர் சிகரட் தேவைப்பட்டது. கடையின் பின்னால் போய் அதில் இருந்த மா மரத்து நிழலில் நின்று கொண்டு சிகரட்டை பற்ற வைத்தேன் . என்மனமோ பதிலுக்கு காத்திதிருந்தது. சிகரட் புகையை ஆழமாக இழுத்து பின் பிடரி முழுவதும் தடவி மூக்கால் வெளிவிட்டுக்கொண்டே நான் மனத்திடம் பேச ஆரம்பித்தேன்.  " இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலனவர்கள் காசை தேடவே போனார்கள். அப்படி போன இடத்தில் காசை தேட வசதிகள் வந்தது. அவர்கள் அதில் ச

வாடாமல்லிகை - பாகம் 14

வியர்வையை அவ்வப்பொழுது கண்டு வந்த எனக்கு இந்த வெய்யிலும் அதனால் வரும் வியர்வையும் நன்றாகவே பிடித்துக்கொண்டது. சூரியக்கண்ணாடியை அணிந்து கொண்டு அருகே இருந்த மரத்தின் கீழே ஒதுங்கிக் கொண்டேன். ஊரையே கொழுத்திய எறிகணைகளின் நடுவே இந்த மரங்கள் சில தப்பிப் பிழைத்தது அதிசயம்தான். துரத்தே 751 பஸ் வருவது தெரிந்தது. பஸ்ஸில் அதிகம் கூட்டம் இருக்கவில்லை . நான் இடம் பார்க்க வசதியாக முன்பக்கத்தில் ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ்ஸில் இப்பொழுது வேலைக்கு செல்லும் ஆட்கள் ஏறத்தொடங்கினார்கள். பஸ் கப்பல் கட்டும் தொழிற்சாலையை கடந்து சென்று, நாவலடி சந்தியில் வியாபாரி மூலைப்பக்கமாக திரும்பியது.  வியாபாரி மூலை காணுமிடமெல்லாம் பச்சைகளைப் போர்த்தி செழிப்பாகவே இருந்தது. புகையிலையும், வெங்காயமும், வாழைகளும் போட்டி போட்டு அந்த மண்ணை நிரவியிருந்தன. சிறிது நேர ஓட்டத்தின் பின்பு கடற்கரை சாலையில் திரும்பிய பஸ் இன்பிருட்டியினூடாக வேகமெடுத்தது. கடற்கரை காற்று உப்புக்கமறலுடன் என் முகத்தில் வீசியது. இன்பிருட்டி அடிப்படையில் மீனவக்கிராமமாகவே இருந்தது. இடதுபக்கம் தென்னை மரங்களுடன் கூடிய பெரும் கல்லு வீடுகளும

வாடாமல்லிகை - பாகம் 13

எங்களை தபால்பெட்டி இறக்கத்தில் இறக்கிவிட்டு இ போ சா பருத்தித்துறையை நோக்கி நகர்ந்தது. மாலை நேரம் நெருங்கியதால் வெய்யிலின் கொடுமை தணிந்திருந்தது. நான் வீட்டினுள் நுழைந்ததும் நேரடியாக கிணற்றடிக்கு சென்றேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை அள்ளி அள்ளி உடலில் ஊற்றினேன். உடம்பில் ஒட்டியிருந்த புழுதியும் வியர்வைப் பிசுபிசுப்பும் ஒரேசேர சவர்க்கார நுரையில் கறுப்பாகக் கரைந்தன. குளிர்ந்த நீர் உடலில் பட்டதும் உடலும் மனமும் ஒரேசேரப் புத்துணர்வாயின. மனைவி தந்த தேநீரை எடுத்துக்கொண்டு முற்றத்து மாமர நிழலில் அமர்ந்துகொண்டேன். மாமரத்தில் புலுனிகள் கலகலத்துக் கொண்டிருந்ததன. தூரத்தே இருந்து வந்த ஒற்றைக்குயிலின் கூவலில் என்மனதைப்போலவே ஒருவித சோகம் இழையோடியிருந்ததது. வானம் மீண்டும் சிவக்கத் தொடங்கியிருந்தது. ஒழுங்கையினால் மேச்சலுக்குப் போன மாடுகள் பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் தனக்கு பின்னேரப்பூசை ஆரம்பமாகப் போவதை கோயில் மணிமூலம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ பிள்ளையாரிடம் போய் குசலம் விசாரிக்கத் தோன்றவில்லை. தனது தம்பிக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்ற இந்தப் பிள்ளையார்

வாடாமல்லிகை - 12

நானும் மருமகளும் மீண்டும் வீடு நோக்கி சென்ற பொழுது ஒழுங்கையை இருட்டு ஓரளவு தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. ஒருவரை ஒருவர் அடயாளம் காணும் அளவுக்கே வெளிச்சம் இருந்தது. தூரத்தே வீட்டு வாசலில் மனைவியும் தங்கைச்சியும் நின்று கதைதுக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை கண்டவுடன் எனது கைகளில் இருந்த மருமகளின் பிடி விலத்திக்கொண்டது. அவள் அவர்களை நோக்கி ஓடத்தொடங்கினாள். ஒன்று கிடைத்தவுடன் மற்றையதை மறக்கும் இயற்கை வகுத்த சட்டத்துக்கு மருமகள் மட்டும் விதிவிலக்கா என்ன?  கிணற்ரடியில் வியர்த்து கசகசத்து இருந்த உடலை நன்றாக கழுவி விட்டு வேறு உடைகளுக்கு தாவிக்கொண்டு வீட்டு முன் முற்றத்தில் இருந்து கொண்டேன். மருமகள் எனக்கு பகோடாவும் தேநீரும் கொண்டு வந்து தந்தாள். தேநீரின் இனிப்பும் பகோடாவின் உறைப்பும் வித்தியாசமான சுவையை எனக்கு தந்தன. தேநீருடன் லயித்துக்கொண்டிருந்த என்னை அண்ணையின் பிள்ளைகளது குரல்கள் கலைத்தன. எனது லயத்தைக் கலைக்காது கண்களால் என்னவென்று கேட்டேன். நான் அவர்களை யாழ்ப்பாணம் கூட்டிச் செல்வதாகச் சொன்னதை நினைவு படுத்தினார்கள். அவர்கள் எல்லோருமே தோளுக்கு மேல் வளர்ந்திருந்தார்கள். ந

வாடாமல்லிகை 09

பொட்டலங்களாக பிரிந்து இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார்கள். எனது பார்வையில் இருந்து பரந்தன் மெதுவாக மறைய தொடங்கியது. தூரத்தே ஆனையிறவு வருவதற்கு சாட்சியாக உப்புக்கலந்த காற்று என் முகத்தில் அடித்தது. எமது வாழ்விலும் ஆனையிறவு பல திருப்பங்களை தந்த இடமாகும். மாற்றங்கள் என்பதனை மாறும் களங்களே தீர்மானிக்கின்றன என்பது போல நாங்கள் எடுத்த வியூகங்களும் பல மாறும் களங்களை எடுத்து தந்தன. அதுவே பலர் எம்மீது உறக்கத்தை தொலைத்த ஒரு காலமும் இருந்தது. உறக்கத்தை தொலைத்தவர்கள் நிதானமாக உறக்கத்தில் இருந்து மீள , நாங்களோ வெற்றி தந்த மிதப்பில் மீள முடியாத உறக்கத்துக்கு சென்ற காலப் பிறழ்வும் இங்கேயே ஆரம்பித்தது. இரு பக்கமும் ஆழம் குறைந்த கடல் ஆணை கட்ட. அதன் நடுவே இருந்த ஏ 9 பாதையால் பஸ் விரைந்து சென்றது . கடலில் அங்காங்கே திட்டுத்திட்டுகளாக வெள்ளையாக உப்பு படர்ந்து கொண்டு இருந்தது. இடையில் இருந்த குட்டைகளில் ஒரு மீனாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பல கொக்குகள் ஒற்றைக்காலில் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தன. அந்த வெளியில் இருந்த ஒரே ஒரு படை முகாமையும் தாண்டி அந்த பஸ் இயக்கச்சியை ஊடறுத்து

வாடாமல்லிகை - 08

அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக ஓடத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது.  பஸ் கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் விரைந்து சென்றது . நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களைச்  சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த வாசத்தை நெஞ்சார இழுத்து விட்டேன். புலத்தில் பலவருடங்களை தொலைத்த

வாடாமல்லிகை பாகம் 06

கோட்டே தொடரூந்து  நிலையம் தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல  இருந்தது. மக்கள் தொடரூந்து நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம். நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக  தொடரூந்து மேடை இருந்தது. நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி தொடரூந்து மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. தொடரூந்தில்  இடம் பிடிப்பதற்காகப்  பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர் வடை விற்பவர்களது குரல்கள் பலவேறு அலைவரிசையில் எனது காதுகளை அடைத்துக்கொண்டு இருந்தன.  இந்த தொடரூந்துப்  பயணம் என்றால