Skip to main content

Posts

Showing posts from June, 2019

அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்

வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள். யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது. ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர் அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு

அறத்துப்பால்- இல்லறவியல்- புதல்வரைப் பெறுதல்-The Obtaining of Sons -Procréation des fils - 61-70

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. 61 பெறுகின்ற செல்வங்களுள் , அறிவுடைய மக்களைப் பெறுவதிலைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை எனது பார்வையில்: எல்லாம் சரி......... நல்ல அறிவைக் குடுத்து பிள்ளைகளை வளர்த்தாலும் அதுகள் பிற்காலத்திலை எங்களை முதியோர் இல்லத்தில் விட்டால் இந்தப்பிள்ளைகள் சிறந்த பேறுகளா? என்ற கேள்வியும் எனக்கு வந்து துலைக்குது . Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain. De tous les bonheurs, nous ne connaissons pas de plus grand que celui d’avoir des enfants doués de discernement. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். 62 மாசற்ர பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது எனது பார்வையில்: பிள்ளை பிறக்கும்பொழுது வெள்ளையாகத் தான் பிறக்கிது. ஆனால் அது வளர்றது மாசடைஞ்ச சூழல். இதில் எப்பெடி நல்லபண்புள்ள பிள்ளையள் வருவினம்? ஆக துன்பம் ஏழுதலைமுறை காலத்துக்கு பொறுக்கத் தேவையில