Skip to main content

அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்


வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள்.

யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது.

ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர்
அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு. தமிழக சிறப்பிதழில் எல்லோரையும் கௌரவம் செய்ய வேண்டும் என்று எண்ணித்தான் செயற்படுகின்றோம். ஆனால் இப்படியான குறுகிய புத்தி உள்ளவர்களும் தங்களை அறியாது தங்களை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு. ஒருவேளை நடுவின் தலைமையாசிரியர் கோமகனை அசிங்கப்படுத்தியதாக இந்தப்பெருந்தகை எண்ணலாம் ஆனால் அசிங்கப்பட்டது சாருவே ஒழிய நடு குழுமம் இல்லை. ஏனெனில் சாருதான் தமிழகம் இல்லை. திட்டமிட்டவாறு ‘தமிழக சிறப்பிதழ் வெளியாகும். நன்றி.

கோமகன்

26 ஆனி 2019

நடு குழுமத்துக்காக

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...