Skip to main content

அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்


வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள்.

யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது.

ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர்
அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு. தமிழக சிறப்பிதழில் எல்லோரையும் கௌரவம் செய்ய வேண்டும் என்று எண்ணித்தான் செயற்படுகின்றோம். ஆனால் இப்படியான குறுகிய புத்தி உள்ளவர்களும் தங்களை அறியாது தங்களை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு. ஒருவேளை நடுவின் தலைமையாசிரியர் கோமகனை அசிங்கப்படுத்தியதாக இந்தப்பெருந்தகை எண்ணலாம் ஆனால் அசிங்கப்பட்டது சாருவே ஒழிய நடு குழுமம் இல்லை. ஏனெனில் சாருதான் தமிழகம் இல்லை. திட்டமிட்டவாறு ‘தமிழக சிறப்பிதழ் வெளியாகும். நன்றி.

கோமகன்

26 ஆனி 2019

நடு குழுமத்துக்காக

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம