Skip to main content

Posts

Showing posts from December, 2019

முகநூலின் "ஓசை .........."-பத்தி

இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது. நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் , "கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்க

வேலை நிறுத்தமும் பயணிகளும்

பிரான்ஸின் போக்குவரத்துப் பணிநிறுத்தம் மார்கழி 05 இல் தொடங்கி முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றது. குறிப்பாக பாரிஸ் நடைமுறை வாழ்வியலை இழந்து போய் விட்டது. தினமும் 20 மில்லியன் யூரோக்கள் அரசுக்கு வருமானமிழப்பு. குறிப்பாக சுற்றுலாத்துறை அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது. இந்த வருமானமிழப்பை அரசு பின்னர் இதே பணிநிறுத்தம் செய்பவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வரியாக மீட்டுக்கொள்ளும். அப்படியானால் இந்த பணிப்புறக்கணிப்பு யாருக்காக ? இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் ? என்ற பல மில்லியன் பெறுமதியான கேள்விகள் எழுகின்றன. பணிநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து துறை போக்குவரத்துப் பயணிகளை ஆட்டு மந்தைகளைப்போல் நடாத்துகின்றார்கள். ஒரு மனித உயிரிக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட தர மறுக்கின்றார்கள் . உதாரணமாக மின் தூக்கிகளை நிறுத்தி வைத்தல் , எஸ்கலேட்டர்களை நிறுத்தி வைத்தல் , பயணிகளை 10/15 மிட்டர் உயரத்தில் இருக்கும் சம தளத்திற்கு படிக்கட்டுகளால் ஏறவிடல். உப்புச்சப்பில்லாத நேரத்தில் நிலக்கீழ் தொடருந்தை இயக்குதல் .எல்லாத்திலும் கொடுமையாக பயணிகளை அடைத்து வைத்து பின் கூட்டமாக தொடர

பிரான்சின் பொதுவேலை நிறுத்தம் தொடருமா இல்லையா ?

கடந்த 05 ஆம் திகதியில் இருந்து இன்று வரை பொதுவேலை நிறுத்தம் பிரான்சின் பலபாகங்களிலும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது . அரசின் அனைத்து துறைகளும் ஏறத்தாழ 97 வீதமான பிரெஞ் மக்கள் அரசின் புதிய ஓய்வூதியத் திட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் எடுவார்ட் பிலிப் அரசின் புதிய ஓய்வூதியத்திட்டத்தை முன்னெடுத்து அரசின் நிலைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலும் 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி 1975 ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதியத்திற்கான உச்ச வயதெல்லை 64 ஆகின்றது. மற்றயவர்களுக்கு 62 வயதாகின்றது. போக்குவரத்து துறையை சேர்ந்த தொழிலாளர் குறிப்பாக தொடருந்ததை செலுத்துபவர்கள், போக்குவரத்து அலுவலக பணியில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவித்தவாறே 52 ஆவது வயதிற்குப் பின்னர் ஓய்வூதியம் எடுக்க முடிகிறது. ஆனால் மற்றைய துறைகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து துறையின் சலுகைகளும் தமது வருமானத்தைக் கொடு