Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-- கவிதை.

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய

சுவைத்தேன் - பாகம் 07

 01 ஆண்ட பரம்பரைக்கு  எமதூதன் மன்னவரை எங்கேனும் கண்டீரோ? வான முகட்டில் வழி தெரியாச் சேனைப் புலத்தில் காடுகளில் ஊர்ப் புறத்துத் திண்ணைகளில் அவருலவும் அந்தப் புரங்களில். பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி  வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார். கோடிப் புறமிருக்கும் குதிரை லாயங்களில் இரவுகளில் வந்து தங்குவாரோ? பிடியும், சேணம் இட்டுவையும். தொலைநீளக் கடற்பரப்பில் நீந்தித் தொலைத்தாரோ? மறுகரையில், இன்னும் ஒருதடவை அழுது தொலைத்தாரோ? பொழுதின் இருட்டோடு இராவணனின் புஷ்பகத்தில் போய்ச் சேர்ந்து விட்டாரோ? சிம்மாசனம் அமர்ந்த மாபெரிய மன்னவனின் படையெடுப்பை விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ? பாவம்தான். அக்கரையின் அரண்மனையில் வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து வேர்வையற்று, உண்டு களித்து வாழ்கிறாரோ? ஓய்வுக்கு, வில்லெடுத்து வெளிக்கிளம்பிக் காடுகளைத் திணறடித்து (அவர் வீரம் தொலையாதா?) வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ? மன்னவன் தேரோடிய வீதிகளில் கோடையிலோ பாளம் வெடிக்கிறது. வெடிப்புகளில் எங்களது ப

சுவைத்(தேன்) -பாகம் 06

01 நேற்றைய மாலையும் இன்றைய காலையும் நேற்று மாலை நாங்கள் இங்கிருந்தோம். சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில் வாகன நெரிசலில் சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம். பூபால சிங்கம் புத்தகநிலைய முன்றலில் நின்றோம். பத்தி¡ரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம். பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப் பார்த்தவா றிருந்தோம். பலவித முகங்கள் பலவித நிறங்கள் வந்தும் சென்றும் ஏறியும் இறங்கியும் அகல்வதைக் கண்டோம். சந்தைவரையும் நடந்து சென்றோம். திருவள்ளுவர் சிலையைக் கடந்து தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி பண்ணை வெளியில் காற்று வாங்கினோம். 'றீகலின்' அருகே பெட்டிக் கடையில் தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம். ஐ¡க் லண்டனின் 'வனத்தின் அழைப்பு' திரைப்படம் பார்த்தோம். தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில் சைக்கிளில் ஏறி வீடு திரும்பினோம். இன்று காலை இப்படி விடிந்தது. நாங்கள் நடந்த நகரத் தெருக்களில் காக்கி உடையில் துவக்குகள் தி¡ரிந்தன. குண்டுகள் பொழிந்தன. உடலைத் துளைத்து உயிரைக் குடித்தன. பஸ்நிலையம் மரணித் திருந்தது. மனித வாடையை நகரம் இழந்தது. கடைகள் எரிந்து புகைந்து கிடந்

சுவைத்(தேன்) - பாகம் 05

01 ஆராதனை உனது ரசனைகள் எவை என்பது எனக்குத் தெரியாமலே போய்விட்டது. பறவைகளின் வீரக ஒலி, வெளிறிய வானில் சுடரும்  ஒற்றை நட்சத்திரம் காற்றின் சிறு சலசலப்பு: சில சமயம் அதன் சங்கீதம், தூரத்தில்… வெகுதூரத்தில் தெளிவற்றுக் கேட்கும் மழலைச் சொல். பிரியமான உனது விழிமலரின் மருட்சி. கழுத்தோரம் தெரியும் சிறுமச்சம் என்று இவை எல்லாம் எனக்கு…. எனக்கானவை உனக்கு…..? கால தாமதமாய்தான் அந்த செய்தி எனக்குத் தெரியவந்தது. நீ என்னை விரும்பினாயாம்! மரணப்படுக்கையில் நீ கிடந்தபோது உனது மஞ்சள் பாரித்த உடம்பின் அணுக்கள் தோறும் உனது காதல் நிரம்பி வழிந்தது. உனது மூச்சின் வாசனையில் அது இருந்தது. கால தாமதமானாலும் உனது காதலை கண்ணீருடன் நான் ஆராதிக்கிறேன். 000000000000000000000000000 02 படிமம் புழுதி படிந்த வெளித் திண்ணையில்தான் நீ படுத்துக்கிடந்தாய். உனது உடலில் எல்லாமே உலர்ந்து போய்க் கிடந்தன. விரல்கள் ஓலை நெட்டியாய்…. கழுத்து நரம்புகள் புடைத்து, பட்ட வேரின் பழுப்பு நிறத்தில். கண் உறையுள், சோர்ந்து கிடக்கும் விழிகள். கிழிந்த புள்ளிச்சட்டையின்கீழாகக் குர

சுவைத்(தேன்)- பாகம் 04

01 கருணாகரன் கவிதைகள்  கொல்லப்பட்ட தேன்கூடு கொன்ற பிணத்தை மொய்த்துக் கொண்டிருந்தன வண்ணத்துப்பூச்சிகள் . அந்த பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன். ஊன்றிக் கவனித்த போது அது ஒரு தேன் கூடாக மாறிக் கொண்டிருந்தது. பிணத்தை அலங்கரிக்க வந்தவன் , தேனை எடுத்துச் செல்லலாம் என்று எண்ணியபோது அந்த கணமே துக்கத்தின் வேர்கள் அவனுடைய தொண்டையில் இறங்கின. "பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில் தேனெடுக்க வந்ததுன் யோகம்" என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன . தான் இப்போது என்ன செய்யலாம் என்று அந்த பிணத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் நெடுநேரமாய் . கொல்லப்பட்ட பிணம் சட்டத்தின் பிடியிலிருந்து எப்போது விடுபடும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு தேன்கூடு எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பது எதிர்காலத்தில் கேள்வியாக எழக்கூடிய சாத்தியமும் உண்டு. 0000000000000000000000000 முறிவு அகன்ற தெருக்களை அமைப்பதற்காக எங்கள் தெருக்கரையில் நின்ற புளியமரத்தைச் சீனர்கள் வெட்டி வீழ்த்தியபோது காலைச் சூரியன் ஒஸ்லோவில் ஊடுருவ முடியாமல் திணறியது. அப்பொழுது அமெரிக்கத் தூதுவர் இலங்கையில் ஆட்சி மாற்றத்த

சுவைத்(தேன்)-பாகம் 03

வ. ஐ .செ ஜெயபாலன் கவிதைகள்  01  பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் குளக்கரையின் மான் குட்டி. நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா. இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற திருட்டுச் சிறு பயலா. அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து நீந்த முயன்றதெல்லாம் எண்ணில் மேனி இன்பத் துணுக்குறுதே. எறிகுண்டாய் வானத்தியமன் கூரை பிரித்துன் பின்வீட்டில்