Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-கட்டுரை.

“சமகால ஈழத்துப் படைப்புகள்” ஒரு நோக்கு

பத்திரிகை குறிப்பை வைத்து நாவல் / சிறுகதை எழுதலாமா என்ற கேள்விக்கு சர்வதேச எழுத்தாளர்களை எல்லாம் துணைக்கு அழைக்கின்றார் “கானல் தேசம் ” நுலாசிரியர் நடேசன். பத்திரிகை குறிப்பை வைத்து படைப்பை எழுதலாம் தவறில்லை. ஆனால் ஆதாரமான பத்திரிகை குறிப்பை எப்படியாக / எத்தகைய பார்வையில் தனது புனைவினுடாக அந்தப்படைப்புக்கு நூலாசிரியர் மாற்றியமைத்தார் என்பதை வைத்தே அந்தப்படைப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதை இன்னும் சற்று விரிவாக்கப் பார்க்கப்போனால் பத்திரிகையை ஆதாரமாக வைத்து எழுதுவதற்கு இலக்கியம் ஒன்றும் மொய் விருந்து அல்ல. மாறாகப் படைப்பு நேர்மையும் புனைவுண்மையும் முதலில் படைப்பாளிக்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்துகொண்ட ‘ரொபி’க் கதைகளையெல்லாம் இலக்கியத்துக்குள் கொண்டுவந்து அதனை உமிந்துகொண்டிருப்பது ஏறக்குறைய ஒரு சுயமைதுனம் போன்றதே. அதற்கு பத்திரிகை குறிப்பை ஆதாரமாகப் பிடிப்பது எப்படியென்றால் வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல ‘குத்துவிளக்கில் சிகரெட் பற்றியதுபோலானது’. எங்கே ஈழத்து படைப்புகள் எல்லாம் இந்தவகையான சட்டகங்களை நோக்கிச் செல்கின்றனவோ

உயர்தர பரீட்சை முடிவுகள் சொல்கின்ற சங்கதிகள் -ஒரு கதையாடல்

உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதும் தோற்றவர்கள் மனமொடிந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்தக்கதையாடல் தோற்றவர் பக்கமே சார்ந்து செல்கின்றது.ஏனெனில் தோல்விகளே எந்த இடத்தில் நாம் தவறுகளை செய்தோம்? அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற பல இன்னோரன்ன கேள்விகளை எமக்குள் எழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்கு எம்மைப் பக்குவப்படுத்த வல்லது.பரீட்சையில் தோற்றவர்கள் மனமொடிந்து போகாது தங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்மறை கருத்துக்களை கேட்காது தங்களுக்கு எது முடியகூடியதோ அதனைத் தேர்வு செய்வதே வினைகளை அதிகரிக்கும் செயலாகும்.பரப்பளவிலும் குடிப்பரம்பலிலும் கொண்ட ஒரு சிறிய நாட்டில் எல்லோருமே மருத்துவராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டுமானால் அந்த நாடு அது தொடர்பான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது? இரண்டாவதாக இந்த இரு துறைகளை முடிப்பத

நடு சஞ்சிகையின் “கிழக்கிலங்கை சிறப்பிதழ்” பற்றி இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்

தமிழில் வெளியாகும் இணைய இதழ்களில் வெளியாகும் எழுத்துகள் அனைத்தையும் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் பிரான்சிலிருந்து வரும் நடு இதழின் முக்கால்வாசியை வாசித்துவிடுவதுண்டு. லண்டனிலிருந்து வரும் எதுவரை இதழும் அப்படி வாசிக்கும் இதழ். தமிழ் இலக்கியத்தின் உலகப்பரப்பை அறியவிரும்பினால் இவற்றை வாசித்தே ஆகவேண்டும். ஆம் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டிலிருந்து கழண்டுபோய் வெகுகாலமாகிவிட்டது.இப்போது வந்திருக்கும் நடு-வின் விவரங்கள் இங்கே. 00000000000000000000000000000 இதழ் 05 கிழக்கிலங்ககை சிறப்பிதழ். இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள் ஓவியம் கட்டுரை கலைக்கூடம் கவிதை , குறுநாவல். சிறப்புக்கதை சொல்லி, சிறப்புக்கவிதை சொல்லி, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், பத்தி, புகைப்படம், மொழிபெயர்ப்பு, விமர்சனம். எழுத்தாளர்கள் : அனார் இசாத் றெஹானா, உமா வரதராஜன், உமையாழ் பெரிந்தேவி, எம் .ஏ . ஷகி, ஏ.நஸ்புள்ளாஹ், கோ நாதன், சாஜீத் அஹமட், சாம்சுடீன் நளீம், ஜிஃப்ரி ஹாஸன், ஜெம்சித் ஸமான், தேவகி கணேஷ், பரீட்சன், றஷ்மி, லறீனா அப்துல் ஹக், லலித கோபன், விஜய் எட்வின், ஸர்மிளா ஸெய்யித். நன்றி : பேராசிய

மகளிர் தினம் ஓர் நோக்கு – கட்டுரை

சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள் உறுதி செய்துகொண்டுதான் இ

‘நடு’வுக்கு இன்று வயது ஒன்று

நடு இணைய சிற்றிதழானது இன்று தனது ஒரு வயதை கடக்கின்றது. இந்த ஒரு வயதில் வரவிருக்கும் கிழக்கிலங்கை சிறப்பிதழுடன் இரண்டு சிறப்பிதழ்களையும் மூன்று இதழ்களையும் நடு வாசகர்களுக்காகப் பதியமிட்டிருக்கின்றோம். ஐந்து இதழ்களிலும் எம்முடன் தோளோடு தோள் நின்று பயணித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகள். நடுவானது மேலும் மேலும் வளர்ந்து விரீட்சமாக வளரவேண்டுமானால் படைப்பாளர்களது பங்களிப்பும் வாசகர்களது ஊக்கமும் எமக்கு அவசியமாகின்றது. இந்த ஒரு வருடத்தில் நடுவின் வளர்ச்சிபற்றி தீர்மானிக்க வாசகர்களாகிய உங்கள் கைகளிலேயே விடுகின்றோம். நடு பிறந்த பொழுது அது பற்றி வெளியாகிய கருத்துக்களை வாசகர்கள் கீழே வாசிக்கலாம் .நன்றி . நடு குழுமம் 000000000000000000000000 “நடு” காலாண்டு இணைய இதழின் முதலாவது பதிப்பு தமிழ் இலக்கிய பரப்பில் தனது பிஞ்சுக்கால்களால் அடி எடுத்து வைத்திருக்கிறது. “தமிழ் இலக்கியத்தின் சிரியா” எனப்படும் பிரான்ஸிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த புதிய இதழை தோழர் கோமகன் நெறிப்படுத்துகிறார். இப்போது தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி தடக்கி விழுந்தால் இலக்கியவாதி

ஐரோப்பாவில் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் விதமும் சொல்லும் விதமும்-கட்டுரை

ஐரோப்பாவில் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர்களது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றே சொல்வேன். இதை இன்னும் இலகுவாக சொன்னால் ஆணுக்கு தந்தையின் வழி பெயர் தொடர்ச்சியும் ( பரம்பரையை நினைவு கூரல் ) அதே போல் பெண்ணுக்கு அவர்களது தந்தையின் பெயரை சொல்லி அழைப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது முதற் பெயரில் தந்தையின் பெயரும் , பெயரில், மகன் அல்லது மகளது பெயரும் இணைத்து எழுதுவது அழைப்பது வழமை. இந்த நடைமுறை திருமணமானாலும் தொடரும். ஆனால் இவர்களது தேசிய அடையாள அட்டையில் இன்னாரின் மனைவி அல்லது இன்னாரின் கணவன் என்ற இன்னுமொரு பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த அழைப்பு முறையானது குடும்பங்களின் தொடர்ச்சியினை பாதுகாப்பதற்கு உகந்தது. ஆசிய குடும்ப முறைமையில் பெண் திருமணமானவுடன் இதுவரைகாலமும் பேணப்பட்டு வந்த அவளது தந்தையின் பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் அவளது கணவனின் பெயர் ஒட்டிக்கொள்ளும். இந்த முறையானது அவளது அடையாளப்படுத்துகின்ற அடிப்படை உரிமையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது . ஆனால் ஆணுக்கு மட்டும் அப்படி நேராது கட்டியமைக்கப்பட்டியமைக்கப்பட்டதுதான் ஆசிய குடும்ப அமைப்பு

சர்வதேச மகளிர் தினமும் பெண்விடுதலையும் ஒரு பார்வை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனது மனதில் தோன்றிய சில எண்ணசிதறல்களைப் பகிரலாம் என எண்ணுகிறேன். முதலில் இந்த விடயத்தை அலச முதல் பெண் விடுதலை அல்லது பெண்ணியம் தொடர்பாக நான் நேர்காணல் செய்த புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் பதிவு செய்த கருத்துக்களைப் பார்வையிடலாம். 000000000000000000000000000 " எங்கள் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச நாட்களுக்குமுன், அமெரிக்க இராணுவப் பிரிவில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும் அதிர்வடையச் செய்தன. இந்தப் பெண்களுக்கு மேலான பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால் பாலியல் சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டனர்.  மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண் என்ற காரணத்துக்காகப் பெண்கள் பலவழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில் பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு ஒரு மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும் தன்பாட்டில் கேட்பாரி

செத்த ஒப்பாரி - கட்டுரை .

தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாசாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச்சம் தான் வருகின்றது . ஒப்பாரியைப் பற்றிய இந்தக் கட்டுரையினது நோக்கம் வாசகர் மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே .  ஒப்பாரிப் பாடல்களைச் செத்த வீட்டிலே படிப்பின் வாசம் அறியாத ஆச்சிகள் தங்களுடைய சோக எண்ணங்களைக் கவிதை வடிவில் பாடுவார்கள் . இதன்பொழுது அந்தக் குடும்பத்தில் நடந்த நல்ல விடயங்களோ அல்லது கெட்ட விடயங்களோ இந்த ஒப்பாரி மூலம் பூடகமாக வருவது ஓர

கப்பல் கட்டுங்கலையில் ஈழத்து தமிழர்கள்.

தமிழர்களின் கப்பல் கட்டுங்கலை சம்பந்தமாக எனது கண்ணில் பட்ட தகவல்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் ஈழத்து தமிழர்கள் அன்றைய கால கட்டத்தில் மூன்று கப்பலைக் கட்டினார்கள் அவைகளாவன , 01 அன்னபூரணி : இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது "நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேஸ்திரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் " கட்டப்பட்டது. அடிப்படையில் அன்னபூரணி ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு எம்மவர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 - 133 அடிகள் , அகலம் 19 அடி . இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன. இந்தக் கப்பலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது இந்த வரலாற்றை சிறீ சிறீதரன் பின்வருமாறு கூறுகின்றார் : “வல்வை மக்கள் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் திரு டீ.எஸ். சேனநாயக்காவும் குறிப்பிட்டுள்ளதை மறக்க முடி