Skip to main content

மகளிர் தினம் ஓர் நோக்கு – கட்டுரை



சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள் உறுதி செய்துகொண்டுதான் இருக்கின்றன. தந்தை வழி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஆசிய சமூகம் இந்த விடயங்களில் தீவிரப்போக்கை கொண்டிருக்கின்றது. என்னதான் பாரதியும் பெரியாரும் தொண்டைகிழியக்கத்தினாலும் ஆண் சமூகத்தின் உளப்பாங்கில் பெரிய மாற்றங்கள் வரவில்லை.

ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸிலும் இதே நிலை தான் தொடர்கின்றது. குடும்ப வன்முறைகளும் சிறுவர் பாலியல் வன்புணர்வுகளும் அதிகரித்த படியே இருக்கின்றன. பிரான்ஸின் குடும்ப வன்முறை பற்றி சமீபத்தைய புள்ளிவிபரங்கள் 10 நாட்களுக்கு ஒரு பெண் இறப்பதாக சொல்கின்றது. இந்தக்குடும்ப வன்முறைகள் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் அதிகரித்துள்ளதாக சொல்கின்றது. என்னைப்பொறுத்தவரை யில் வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது புலம்பெயர் தேசத்து ஆசிய சமூகத்தில் மாறுகின்றதோ அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம்.

நீண்ட பெரும் போரை சந்தித்த தாயகத்தில் கூட பெண்களின் நிலை ஆரோக்கியமானதாக இல்லை. ஒருகாலத்தில் போரை முன்னெடுத்த பெண் போராளிகளை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூகம்ததான் இன்று அவர்களை அனாதைகளாக தெருவில் விட்டு பாலியல் தொழிலார்களாகப் பார்க்கின்றது. ஆக மொத்தத்தில் இந்தப்போரானது எமது பண்பாட்டுத்தளத்தில் பாரிய மாற்றத்தினைக் கொண்டுவரவில்லை. போர் நடைபெற்ற பொழுதில் மகளிர் சகல மட்டத்திலும் விடுதலையடைந்து இருந்தார்களே என்ற கேள்விக்கு அது ஓர் சந்தர்ப்பவாத முன்னெடுப்பாகவே என்னால் கருதக் கூடியதாக இருக்கின்றது.

பெண்களின் விடுதலைக்கு உண்மையில் ஆண்கள் மட்டுமா தடையாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பங்குடன் குறிப்பிட்டளவு பெண்களும் தடைகளாக இருக்கின்றார்கள் என்பேன். நான் செய்த நேர்காணல்களில் பல மகளிர்கள் பெண்விடுதலைக்கு பெண்களே முக்கிய எதிரிகளாக இருக்கின்றார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள். விடுதலை அல்லது சுதந்திரம் என்பது யாசித்துப் பெறுவதல்ல மாறாக அது உளரீதியிலான மாற்றங்களுடன் எதிர்தரப்புக்கு வழங்கப்படுவது. எங்களுடன் கூட வருகின்ற பெண்ணை ஓர் சக உயிரியாக அவளுடைய உணர்வுகளை மதிக்கின்ற உளவளத்தை ஆண்தரப்பு ஏற்படுத்த வேண்டும். ஓர் குடும்பத்தில் அம்மா என்ற பெண்ணாலயே அந்தக்குடும்ப அங்கத்தவர்கள் வளர்க்கப்படுகின்றார்கள். பாலியியல் அவமதிப்புகள் அல்லது வேறுபாடுகளை அம்மா என்ற கதாபாத்திரம் தூக்கி உடைக்குமானால் பெண்ணானவள் சுதந்திரமாக உலாவருவாள்.அவள் வருங்காலங்களில் அவளது இருப்பு அங்கீகாரம் போன்றவற்றில் விடுதலையடைந்து இருப்பாள்.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...