Skip to main content

ரகசியத்தின் அரூப நிழல்கள் – டிலீப் டிடியே – ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்




‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு.

ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன்.

பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்கொள்வதென்பது நெதர்லாந்தில் சட்டபூர்வமான தொழில். தமிழகத்தில் பிக் – பொஸ் நடப்பதைப்போல நெதர்லாந்தில் நடைபெறுகின்ற மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவின் பெயர் அடம் அன்ட் ஈவ். யாருமில்லாத சிறு தீவொன்றில் நிர்வாணமாக இரு பெண்களையும் ஒரு ஆணையும் அல்லது இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அல்லது ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் படகு மூலம் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துவிடுவார்கள். தனக்கு தேர்ந்த துணைணை அவரவர் தேர்தெடுத்து காதல் செய்து வெற்றிகொள்ளவேண்டிய போட்டி இது. ஆகஇ காதல் என்ற கண்மூடித்தனமாக உணர்வில் விழுந்து காலப்போக்கில் நிர்வாணங்களை தரிசித்த பின்னர்இ உறவுகள் வெறுத்துப்போவதிலும் பார்க்கஇ நிர்வாணத்திலேயே காதலை ஆரம்பித்துக்கொண்டால், அந்த காதல் எவ்வாறானதாரு பாதையில் செல்கிறது என்பதை கண்டுகொள்வதற்கான பரிசோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அப்படியானால்இ இந்த நிகழ்ச்சியை தீவில் போய் நின்று வீடியோ எடுப்பவரும் ஒண்டுமில்லாமல்தான் நிற்பாரா என்ற அறிவுஜீவித்தனமான கேள்விகளை கேட்கப்படாது.

ஆக, உயிரின உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாக வழிபடப்படுகின்ற கலவிப்பொறிமுறைகளின் தற்கால நீட்சிளும் அவற்றின் இரகசிய பெறுமானங்களும் பொதுவெளிகளில் தாராளமாக பேசப்படுகின்ற விடயங்களாகிவிட்டன. அவற்றினால் சமூக மட்டங்களில் ஏற்படுகின்ற சமகால அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை. இவற்றினை பதிவுசெய்யவேண்டியதில் இலக்கியத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. அந்த வகையில் லக்ஷ்மி செய்திருப்பது துணிச்சலான கட்டுடைப்பு. பின்னிரவுகளில் சிறிய விண்டோக்களாக கணனித்திரைகளில் ஓரமாக வைத்து வாசித்து வந்த விடயங்களை – குனிந்த தலைகளுக்குள் மாத்திரம் ரகசியங்களாக அடைகாக்கப்பட்டுவந்த உண்மை கதைகளை – பொதுவெளியில் குலைத்துப்போட்டிருக்கிறார்.

இதேவேளை ‘வல்லினம்” இதழில் போன வாரம் கோமகன் எழுதியுள்ள ‘டிலீப் டிடியே” என்ற பாலியல் விரக்திகொண்ட பெண்ணில் மனநிலையை மையமாக கொண்ட கதையும் கவனத்தை ஈர்த்துள்ள சிறுகதை.

‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனது மனதில் தொந்தரவு செய்துகொண்டிருந்த கதைக்கருவொன்றை எழுதுவதற்கு இந்த சமூகம் உட்பட நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் ” – என்பதை நிரூபித்துள்ள இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரகசியத்தின் அரூப நிழல்கள்


http://malaigal.com/?p=10547

டிலீப் டிடியே


http://vallinam.com.my/version2/?p=4468

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம