Skip to main content

ரகசியத்தின் அரூப நிழல்கள் – டிலீப் டிடியே – ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்




‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு.

ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன்.

பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்கொள்வதென்பது நெதர்லாந்தில் சட்டபூர்வமான தொழில். தமிழகத்தில் பிக் – பொஸ் நடப்பதைப்போல நெதர்லாந்தில் நடைபெறுகின்ற மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவின் பெயர் அடம் அன்ட் ஈவ். யாருமில்லாத சிறு தீவொன்றில் நிர்வாணமாக இரு பெண்களையும் ஒரு ஆணையும் அல்லது இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அல்லது ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் படகு மூலம் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துவிடுவார்கள். தனக்கு தேர்ந்த துணைணை அவரவர் தேர்தெடுத்து காதல் செய்து வெற்றிகொள்ளவேண்டிய போட்டி இது. ஆகஇ காதல் என்ற கண்மூடித்தனமாக உணர்வில் விழுந்து காலப்போக்கில் நிர்வாணங்களை தரிசித்த பின்னர்இ உறவுகள் வெறுத்துப்போவதிலும் பார்க்கஇ நிர்வாணத்திலேயே காதலை ஆரம்பித்துக்கொண்டால், அந்த காதல் எவ்வாறானதாரு பாதையில் செல்கிறது என்பதை கண்டுகொள்வதற்கான பரிசோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அப்படியானால்இ இந்த நிகழ்ச்சியை தீவில் போய் நின்று வீடியோ எடுப்பவரும் ஒண்டுமில்லாமல்தான் நிற்பாரா என்ற அறிவுஜீவித்தனமான கேள்விகளை கேட்கப்படாது.

ஆக, உயிரின உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாக வழிபடப்படுகின்ற கலவிப்பொறிமுறைகளின் தற்கால நீட்சிளும் அவற்றின் இரகசிய பெறுமானங்களும் பொதுவெளிகளில் தாராளமாக பேசப்படுகின்ற விடயங்களாகிவிட்டன. அவற்றினால் சமூக மட்டங்களில் ஏற்படுகின்ற சமகால அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை. இவற்றினை பதிவுசெய்யவேண்டியதில் இலக்கியத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. அந்த வகையில் லக்ஷ்மி செய்திருப்பது துணிச்சலான கட்டுடைப்பு. பின்னிரவுகளில் சிறிய விண்டோக்களாக கணனித்திரைகளில் ஓரமாக வைத்து வாசித்து வந்த விடயங்களை – குனிந்த தலைகளுக்குள் மாத்திரம் ரகசியங்களாக அடைகாக்கப்பட்டுவந்த உண்மை கதைகளை – பொதுவெளியில் குலைத்துப்போட்டிருக்கிறார்.

இதேவேளை ‘வல்லினம்” இதழில் போன வாரம் கோமகன் எழுதியுள்ள ‘டிலீப் டிடியே” என்ற பாலியல் விரக்திகொண்ட பெண்ணில் மனநிலையை மையமாக கொண்ட கதையும் கவனத்தை ஈர்த்துள்ள சிறுகதை.

‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனது மனதில் தொந்தரவு செய்துகொண்டிருந்த கதைக்கருவொன்றை எழுதுவதற்கு இந்த சமூகம் உட்பட நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் ” – என்பதை நிரூபித்துள்ள இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரகசியத்தின் அரூப நிழல்கள்


http://malaigal.com/?p=10547

டிலீப் டிடியே


http://vallinam.com.my/version2/?p=4468

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...