Skip to main content

பொது மன்னிப்புக்கேட்டுத் தற்கொலை செய்ய வேண்டியது தமிழ்க்கவியா இல்லை இணையப்போராளிகளா?



இலங்கையைச் சேர்ந்த தமிழ்க்கவி தமிழர் தாயகப் போராட்ட காலத்தில் நேரடிப்பங்காளியாகவும் போராட்டத்தில் தனது மகன்களைக் களப்பலி கொடுத்தவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் மகளிர் முன்னேற்ற செயல்ப்பாடுகளை முன்நின்று நடத்துபவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். கடந்த வாரத்தில் தமிழ்க்கவி மலையகத்தவர் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்று சமூகத்தளங்களில் அதிர்வலைகளையும் பெரும் குழப்பங்களையும் விழைவித்தது நடு வாசகர்கள் அறிந்ததே. அவரது மூலக்கட்டுரையைப் பெரும்பாலானவர் படித்தே பார்க்காது அவர் பொது வெளியில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தமிழ்க்கவி வாழவே தகுதியற்றவர் என்பதன் ஊடாக மறைமுகமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியவர் என்றும் இணையப்போராளிகள் விசத்தைக் கக்கியிருந்தனர்.

ஒருவர் தனது அனுபவங்களை சொல்லும் பொழுது அதற்கு யாருமே விளக்கம் கேட்கமுடியாது. தமிழ்க்கவி மலையக வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். தமிழ்க்கவி தனது அனுபவத்தை சொல்லும் பொழுது பொது மன்னிப்புக்கேள் என்பதும் அவர் வாழவே தகுதியற்றவர் என்பதும் பாஸசிசத்தின் உச்சக்கட்டம் மட்டுமில்லாது ஓர் பெண் படைப்பாளி என்றவகையில் அவரது கருத்துரிமையை முற்றுமுழுதாக மறுதலிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிந்தது .

சமகாலத்து இலத்திரனியல் இணைய வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை ஒரு பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் பிரதம ஆசிரியர் எனப்படுபவர் ஒரு ஆக்கத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு உரைகல்லாக தமிழ்க்கவியின் கட்டுரையில் ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கையே திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் ( விபச்சாரமும் ) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேவேளையில் “கரை எழில் ” நூலின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டுரையை செம்மைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும் செம்மைப்படுத்தலில் போதிய கவனம் செலுத்தப்படாததும் இக் கட்டுரை குறித்த சர்ச்சைகளுக்கு மூலகாரணிகளாகின்றனர். இதை கரைச்சி பிரதேச சபையின் வருத்தம் தெரிவித்த கடிதமும் விநியோகிக்கப்பட்ட பிரதிகள் மீளபெறப்பட்டு கட்டுரை இல்லாதே நூல் வெளியாகும் என்ற அறிவித்தலும் எமக்கு உறுதி செய்கின்றன.

அதே வேளையில் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளையும் பத்திகளையும் உற்று நோக்கும் பொழுது ஓர் விடயம் எமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. கிளிநொச்சியில் இருக்கின்ற தமிழ்க்கவி மீதான உள்ளூர் அரசியல்களும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி இருக்கின்ற படைப்பாளிகளில் பலர் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தையும் இந்த இடத்தில் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு தமிழ்க்கவியை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் “கரை எழில் ” நூலுக்காக எழுதிய கட்டுரையின் கைஎழுத்து வடிவம் இணையபிரதிக்கு ( வேர்ட் ) மாற்றியபொழுது கட்டுரையில் வந்த சொற்தொடரான ” காரணம் தேசப்பற்று மட்டுமல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்தும் தேவைப்பட்டதுதான். ” என்பதில் “மட்டுமல்ல” என்ற சொல் தன்னால் தவறவிடப்பட்டது என்பதனைக் கோடு காட்டினார்.


நடு குழுமம்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம