Skip to main content

பொது மன்னிப்புக்கேட்டுத் தற்கொலை செய்ய வேண்டியது தமிழ்க்கவியா இல்லை இணையப்போராளிகளா?



இலங்கையைச் சேர்ந்த தமிழ்க்கவி தமிழர் தாயகப் போராட்ட காலத்தில் நேரடிப்பங்காளியாகவும் போராட்டத்தில் தனது மகன்களைக் களப்பலி கொடுத்தவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் மகளிர் முன்னேற்ற செயல்ப்பாடுகளை முன்நின்று நடத்துபவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். கடந்த வாரத்தில் தமிழ்க்கவி மலையகத்தவர் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்று சமூகத்தளங்களில் அதிர்வலைகளையும் பெரும் குழப்பங்களையும் விழைவித்தது நடு வாசகர்கள் அறிந்ததே. அவரது மூலக்கட்டுரையைப் பெரும்பாலானவர் படித்தே பார்க்காது அவர் பொது வெளியில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தமிழ்க்கவி வாழவே தகுதியற்றவர் என்பதன் ஊடாக மறைமுகமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியவர் என்றும் இணையப்போராளிகள் விசத்தைக் கக்கியிருந்தனர்.

ஒருவர் தனது அனுபவங்களை சொல்லும் பொழுது அதற்கு யாருமே விளக்கம் கேட்கமுடியாது. தமிழ்க்கவி மலையக வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். தமிழ்க்கவி தனது அனுபவத்தை சொல்லும் பொழுது பொது மன்னிப்புக்கேள் என்பதும் அவர் வாழவே தகுதியற்றவர் என்பதும் பாஸசிசத்தின் உச்சக்கட்டம் மட்டுமில்லாது ஓர் பெண் படைப்பாளி என்றவகையில் அவரது கருத்துரிமையை முற்றுமுழுதாக மறுதலிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிந்தது .

சமகாலத்து இலத்திரனியல் இணைய வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை ஒரு பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் பிரதம ஆசிரியர் எனப்படுபவர் ஒரு ஆக்கத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு உரைகல்லாக தமிழ்க்கவியின் கட்டுரையில் ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கையே திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் ( விபச்சாரமும் ) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேவேளையில் “கரை எழில் ” நூலின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டுரையை செம்மைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும் செம்மைப்படுத்தலில் போதிய கவனம் செலுத்தப்படாததும் இக் கட்டுரை குறித்த சர்ச்சைகளுக்கு மூலகாரணிகளாகின்றனர். இதை கரைச்சி பிரதேச சபையின் வருத்தம் தெரிவித்த கடிதமும் விநியோகிக்கப்பட்ட பிரதிகள் மீளபெறப்பட்டு கட்டுரை இல்லாதே நூல் வெளியாகும் என்ற அறிவித்தலும் எமக்கு உறுதி செய்கின்றன.

அதே வேளையில் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளையும் பத்திகளையும் உற்று நோக்கும் பொழுது ஓர் விடயம் எமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. கிளிநொச்சியில் இருக்கின்ற தமிழ்க்கவி மீதான உள்ளூர் அரசியல்களும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி இருக்கின்ற படைப்பாளிகளில் பலர் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தையும் இந்த இடத்தில் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு தமிழ்க்கவியை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் “கரை எழில் ” நூலுக்காக எழுதிய கட்டுரையின் கைஎழுத்து வடிவம் இணையபிரதிக்கு ( வேர்ட் ) மாற்றியபொழுது கட்டுரையில் வந்த சொற்தொடரான ” காரணம் தேசப்பற்று மட்டுமல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்தும் தேவைப்பட்டதுதான். ” என்பதில் “மட்டுமல்ல” என்ற சொல் தன்னால் தவறவிடப்பட்டது என்பதனைக் கோடு காட்டினார்.


நடு குழுமம்

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...