Skip to main content

பொது மன்னிப்புக்கேட்டுத் தற்கொலை செய்ய வேண்டியது தமிழ்க்கவியா இல்லை இணையப்போராளிகளா?



இலங்கையைச் சேர்ந்த தமிழ்க்கவி தமிழர் தாயகப் போராட்ட காலத்தில் நேரடிப்பங்காளியாகவும் போராட்டத்தில் தனது மகன்களைக் களப்பலி கொடுத்தவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் மகளிர் முன்னேற்ற செயல்ப்பாடுகளை முன்நின்று நடத்துபவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். கடந்த வாரத்தில் தமிழ்க்கவி மலையகத்தவர் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்று சமூகத்தளங்களில் அதிர்வலைகளையும் பெரும் குழப்பங்களையும் விழைவித்தது நடு வாசகர்கள் அறிந்ததே. அவரது மூலக்கட்டுரையைப் பெரும்பாலானவர் படித்தே பார்க்காது அவர் பொது வெளியில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தமிழ்க்கவி வாழவே தகுதியற்றவர் என்பதன் ஊடாக மறைமுகமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியவர் என்றும் இணையப்போராளிகள் விசத்தைக் கக்கியிருந்தனர்.

ஒருவர் தனது அனுபவங்களை சொல்லும் பொழுது அதற்கு யாருமே விளக்கம் கேட்கமுடியாது. தமிழ்க்கவி மலையக வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். தமிழ்க்கவி தனது அனுபவத்தை சொல்லும் பொழுது பொது மன்னிப்புக்கேள் என்பதும் அவர் வாழவே தகுதியற்றவர் என்பதும் பாஸசிசத்தின் உச்சக்கட்டம் மட்டுமில்லாது ஓர் பெண் படைப்பாளி என்றவகையில் அவரது கருத்துரிமையை முற்றுமுழுதாக மறுதலிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிந்தது .

சமகாலத்து இலத்திரனியல் இணைய வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை ஒரு பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் பிரதம ஆசிரியர் எனப்படுபவர் ஒரு ஆக்கத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு உரைகல்லாக தமிழ்க்கவியின் கட்டுரையில் ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கையே திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் ( விபச்சாரமும் ) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேவேளையில் “கரை எழில் ” நூலின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டுரையை செம்மைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும் செம்மைப்படுத்தலில் போதிய கவனம் செலுத்தப்படாததும் இக் கட்டுரை குறித்த சர்ச்சைகளுக்கு மூலகாரணிகளாகின்றனர். இதை கரைச்சி பிரதேச சபையின் வருத்தம் தெரிவித்த கடிதமும் விநியோகிக்கப்பட்ட பிரதிகள் மீளபெறப்பட்டு கட்டுரை இல்லாதே நூல் வெளியாகும் என்ற அறிவித்தலும் எமக்கு உறுதி செய்கின்றன.

அதே வேளையில் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளையும் பத்திகளையும் உற்று நோக்கும் பொழுது ஓர் விடயம் எமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. கிளிநொச்சியில் இருக்கின்ற தமிழ்க்கவி மீதான உள்ளூர் அரசியல்களும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி இருக்கின்ற படைப்பாளிகளில் பலர் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தையும் இந்த இடத்தில் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு தமிழ்க்கவியை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் “கரை எழில் ” நூலுக்காக எழுதிய கட்டுரையின் கைஎழுத்து வடிவம் இணையபிரதிக்கு ( வேர்ட் ) மாற்றியபொழுது கட்டுரையில் வந்த சொற்தொடரான ” காரணம் தேசப்பற்று மட்டுமல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்தும் தேவைப்பட்டதுதான். ” என்பதில் “மட்டுமல்ல” என்ற சொல் தன்னால் தவறவிடப்பட்டது என்பதனைக் கோடு காட்டினார்.


நடு குழுமம்

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...