Skip to main content

குரலற்றவரின் குரல்-வாசகர் குரல்



இன்றைய நாள் மிக அற்புதமானது. கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த காரணத்தால் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அவர் மீண்டுமொரு முறை அழைத்ததும் கட்டாயம் சென்று விடுவது என முடிவு செய்தேன்.

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் அறிவும்,பண்பாடும் நிரம்பி வழியும் மனிதர்களிடையே நான் அமர்ந்த முதலாவது நூல் வெளியீட்டு விழா. கோமகனின் அன்புடன் துவக்கப்பட்டது. விழாவை பூரணப்படுத்தாமல் நோன்பு திறக்க வேண்டி இருந்ததால் இடையில் வந்தது மிக வருத்தமடையச் செய்தது.

என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னைக் கவர்ந்த முறையில் பேசினார் அந்த மனிதர். அவர் யார்,இலக்கியத்தில் அவர் பங்கு என்பதை இன்னும் அறியவில்லை. ஆனால் பெயரை மாத்திரம் பாய்வா என அறிந்து கொண்டேன். இலக்கியத்தில் அடுத்த படைப்பிற்கான இடைவெளி எடுக்கும்போது படைப்பாளியின் சரக்கு தீர்ந்து விடுவதாக நினைப்பவர்கள் பற்றிய அவர் கூற்றும், மூத்த இலக்கியவாதிகள் பலர் புதியவர்களுக்கு வழிவிட்டு தங்கள் மகுடங்களை இறக்கி வைக்கும் மனநிலைக்கு பெரும்பாலும் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்…

அதே போல நவீன மேற்கத்திய இலக்கியபாணியுடன், தமிழ் இலக்கியத்தை கலந்ததான புதிய படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள் பெரும்பாலும் யோசிக்க மறுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். அவரின் குரல் வளத்தில் கொஞ்சம் லயித்துப் போயிருந்தேன் என்றும் சொல்லலாம். கோமகன் பதில் சொல்ல வேண்டுமென குரலற்றவர்களின் குரலில் இருந்து தலித்தியம் மற்றும் இலக்கிய சர்ச்சைகள் சார்பாக அவர் வைத்த சுவாரசியமான இரண்டு கேள்விகளுக்கும் கோமகன் என்ன பதிலளித்தார் என்று அறியும் ஆர்வமும் எனக்கிருக்கிறது.

எது எப்படியோ கோமகனை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. அவருக்கு எனது அரிந்த ஆப்பிளை அளித்ததும் பெரு மகிழ்ச்சி.

நஸீஹா முகைதீன்

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...