Skip to main content

வாசிப்பு அனுபவம் “கேரளா டயரீஸ்” ஐ முன்வைத்து





மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்தியல் ரீதியாக நிரூபணம் செய்ய விழைகின்றது. இந்த வேளையில் ஈழத்தின் மூத்த குடிகளான இயக்கர்கள் நாகர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி என் மனதில் தோன்றுகின்றது.

“கேரளா டயரீஸ்” கொலனித்துவ நாடுகளின் அதிகாரத்தில் இருந்த ஈழத்துத்தமிழரது வாழ்வியலை அமெரிக்க மிஷனரிகள் எவ்வாறு புரட்டிப் போட்டன என்றும், அவர்களது கல்விப் பாரம்பரியம் எவ்வாறு உச்சம் பெற்றிருந்தன என்பதையும் சொல்ல விழைகின்றது. இந்த மிஷனரிகளுக்கு எதிராக ஆறுமுக நாவலரின் “சைவ எழுச்சி” கருத்தியல் யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் நேர் எதிர் விழைவுகளை சமரசத்துக்கு இடமின்றி சொல்கின்றது. இதுவரையில் யாழ்ப்பாணிகள் ஆறுமுக நாவலரது சமையத்தொண்டையும் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைகளையும் முன்நிலைப்படுத்தினரே ஒழிய ஆறுமுக நாவலரது சாதீயம் தொடர்பான கறுப்புப் பக்கங்களை மறந்தும் தொட்டது கிடையாது. ஆனால் அருளினியன் மிகவும் துணிச்சலாக ஆறுமுக நாவலரின் சைவ எழுச்சியும் அதனுடாக உச்சம் பெற்ற யாழ்ப்பாணிகளது மேட்டிமைகளை “வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்” என்று ஒரேயடியாகப் போட்டு தாக்கியுள்ளார். அதன் உச்சக்கட்டமாக ஓரிடத்தில் அருளினியன் பின்வருமாறு கூறுகின்றார்,

“தமிழ் ஈழம் கிடைத்திருந்தால்; அது நிச்சயமாக சாதிய வேறுபாடு இல்லாமல்தான்இருந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால், புலிகள்கடும் இனவாதிகளாக இருந்தனர். ஆனால், சாதியவாதிகளாக அவர்கள் என்றைக்குமேஇருந்ததில்லை. ”

அருளினியானது பார்வையான இந்த இடம் மிகவும் சர்ச்சைக்குரியது. இனவாதத்தின் தோற்றுவாய் என்பதே சாதியம் என்ற ஆணிவேருடன் தொடர்புபட்டது. புலிகளது காலத்தில் “சாதிய வேறுபாடுகள்” என்ற கருத்தியல் வாதத்தை அவர்கள் ஓரளவுதான் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அதில் அவர்கள் முற்றுமுழுதாக வெற்றிபெற முடியவில்லை என்பதை ஈழத்தின் போரியல் எழுத்துக்கள் எம்முன்னே வரலாற்று சாட்சிகளுடன் நிறுவி இருக்கின்றன.அதேவேளையில் ஈழத்தமிழர் யுத்தத்தில் வரலாறுகாணாத பாரிய அழிவுகளை சந்தித்திருந்தாலும் சாதிய வேறுபாடுகளைக் களைவதற்கு அவர்கள் என்றுமே தயாராக இல்லை என்பதை சமகாலத்தில் சாதீயம் தொடர்பான தாயக நிகழ்வுகள் எம்முன்னே உரைகல்லாகக் காட்டி நிற்கின்றன.

“கேரளா டயரீஸ்” -ஐ வாசித்ததில் ஈழவர் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை மலபாரில் கண்டடைவதில் வெற்றி கண்டுள்ளது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. அருளினியனின் இலகு சொல்லாடல் நகர்த்துகை அதை மேலும் இலகுவாக்கியிருக்கின்றது என்றே சொல்வேன். “கேரளா டயரீஸ்” -ஆனது வராலற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுபோன்ற ஈழத்தவர் வரலாறுகள் இன்னும் இன்னும் தோற்றுவிக்கப்படல் வேண்டும் என்பதே என்போன்றவர்களது வேணவா.

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...