Skip to main content

வாசிப்பு அனுபவம் “கேரளா டயரீஸ்” ஐ முன்வைத்து





மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்தியல் ரீதியாக நிரூபணம் செய்ய விழைகின்றது. இந்த வேளையில் ஈழத்தின் மூத்த குடிகளான இயக்கர்கள் நாகர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி என் மனதில் தோன்றுகின்றது.

“கேரளா டயரீஸ்” கொலனித்துவ நாடுகளின் அதிகாரத்தில் இருந்த ஈழத்துத்தமிழரது வாழ்வியலை அமெரிக்க மிஷனரிகள் எவ்வாறு புரட்டிப் போட்டன என்றும், அவர்களது கல்விப் பாரம்பரியம் எவ்வாறு உச்சம் பெற்றிருந்தன என்பதையும் சொல்ல விழைகின்றது. இந்த மிஷனரிகளுக்கு எதிராக ஆறுமுக நாவலரின் “சைவ எழுச்சி” கருத்தியல் யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் நேர் எதிர் விழைவுகளை சமரசத்துக்கு இடமின்றி சொல்கின்றது. இதுவரையில் யாழ்ப்பாணிகள் ஆறுமுக நாவலரது சமையத்தொண்டையும் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைகளையும் முன்நிலைப்படுத்தினரே ஒழிய ஆறுமுக நாவலரது சாதீயம் தொடர்பான கறுப்புப் பக்கங்களை மறந்தும் தொட்டது கிடையாது. ஆனால் அருளினியன் மிகவும் துணிச்சலாக ஆறுமுக நாவலரின் சைவ எழுச்சியும் அதனுடாக உச்சம் பெற்ற யாழ்ப்பாணிகளது மேட்டிமைகளை “வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்” என்று ஒரேயடியாகப் போட்டு தாக்கியுள்ளார். அதன் உச்சக்கட்டமாக ஓரிடத்தில் அருளினியன் பின்வருமாறு கூறுகின்றார்,

“தமிழ் ஈழம் கிடைத்திருந்தால்; அது நிச்சயமாக சாதிய வேறுபாடு இல்லாமல்தான்இருந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால், புலிகள்கடும் இனவாதிகளாக இருந்தனர். ஆனால், சாதியவாதிகளாக அவர்கள் என்றைக்குமேஇருந்ததில்லை. ”

அருளினியானது பார்வையான இந்த இடம் மிகவும் சர்ச்சைக்குரியது. இனவாதத்தின் தோற்றுவாய் என்பதே சாதியம் என்ற ஆணிவேருடன் தொடர்புபட்டது. புலிகளது காலத்தில் “சாதிய வேறுபாடுகள்” என்ற கருத்தியல் வாதத்தை அவர்கள் ஓரளவுதான் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அதில் அவர்கள் முற்றுமுழுதாக வெற்றிபெற முடியவில்லை என்பதை ஈழத்தின் போரியல் எழுத்துக்கள் எம்முன்னே வரலாற்று சாட்சிகளுடன் நிறுவி இருக்கின்றன.அதேவேளையில் ஈழத்தமிழர் யுத்தத்தில் வரலாறுகாணாத பாரிய அழிவுகளை சந்தித்திருந்தாலும் சாதிய வேறுபாடுகளைக் களைவதற்கு அவர்கள் என்றுமே தயாராக இல்லை என்பதை சமகாலத்தில் சாதீயம் தொடர்பான தாயக நிகழ்வுகள் எம்முன்னே உரைகல்லாகக் காட்டி நிற்கின்றன.

“கேரளா டயரீஸ்” -ஐ வாசித்ததில் ஈழவர் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை மலபாரில் கண்டடைவதில் வெற்றி கண்டுள்ளது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. அருளினியனின் இலகு சொல்லாடல் நகர்த்துகை அதை மேலும் இலகுவாக்கியிருக்கின்றது என்றே சொல்வேன். “கேரளா டயரீஸ்” -ஆனது வராலற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுபோன்ற ஈழத்தவர் வரலாறுகள் இன்னும் இன்னும் தோற்றுவிக்கப்படல் வேண்டும் என்பதே என்போன்றவர்களது வேணவா.

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...