Skip to main content

சுறுக்கரின் இலக்கிய ரசம்- பாகம் 01


அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி பட்டாவது காயை மடக்கி போடவேணும் எண்டு கனக்க றிக்கியளை இந்தகாலத்து பெடியள் வைச்சிருக்கிறாங்கள் கண்டியளோ. பெடிச்சிக்கு பெடிச்சியின்ர பேரை இல்லாட்டில் படத்தை பச்சை குத்தி காட்டிறது. இடையில ஏதாவது ரெண்டு பேருக்கும் ராட்டல் எண்டால் கையிலை பிளேட்டாலை வெட்டிறது ( இதை ரெண்டு பேரும் செய்வினம்). பேந்து தாய் தேப்பனுக்கு மாற்றர் லீக் ஆச்சுதெண்டால் பெடிச்சியை கிளப்பி கொண்டு ஓடுறது எண்டு இவையள் செய்யிற அலப்பரையள் சொல்லி வேலையில்லை கண்டியளோ. உது ஊரிலையும் அப்பிடித்தான் இங்கையும் அப்பிடித்தான். இங்கை கொஞ்சம் கொஞ்சம் டெவலப் எண்டு தான் சொல்ல வேணும் . இங்கை பெடிச்சிக்கு பிள்ளையையும் குடுத்துப்போட்டு பெடிச்சியை கிளப்பி கொண்டு வேறை நாடுகளுக்கு போய் அங்கை இருந்து கொண்டு தாய் தேப்பனோடை கேம் ஐ கேக்கிறது. இது இந்தக்காலத்தியான் பெடி பெட்டையளின்ரை சேட்டையள்.

அந்த காலத்திலை பெடிச்சியை கிளப்பிக்கொண்டு ஓடினாலும் பெடிக்கு ஒரு பயம் எண்ட ஒண்டு இருக்கு. இந்த பாட்டிலை பெடி சொல்லுறான், “எடி ஆத்தை காட்டுக்குள்ளாலை போறம். பயப்பிடாமல் வா . இதுக்குள்ளை வாற அனிமல்ஸ் எண்டாலும் சரி கள்ளர் காடையர் எண்டாலும் சரி அவங்களோட ஏக் மானாய் மல்லுக்கு நிண்டு உன்னை காப்பாத்துவன். ஆனா உன்ரை சொந்தம் பந்தம் ஆராவது சண்டை பிடிக்க வந்தினம் எண்டால் நீ வீணாய் கவலைப்படுவாய். அது என்னாலை பொறுக்கேலாது கண்டியோ. அதாலை நான் எங்கையாவது ஓடி ஒளிச்சு போடுவன்” எண்டு சொல்லுறான் . இந்த சிற்றுவேசனை நற்றிணையிலை 362-ம் பாட்டிலை நம்ம கூட்டாளி மதுரை மருதனிள நாகனார் இப்பிடி சொல்லி இருக்கிறார் எண்டால் பாருங்கோவன் . 

வினையமை பாவையின் இயலி நுந்தைமனைவரை இறந்து வந்தனை யாயின்தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலிஅணிமிகு கானத்து அகன்புறம் பரந்தகடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கைமணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்திஅமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

நற்றிணை -362 மதுரை மருதனிள நாகனார்


உரை : சுருக்கு சுறுக்கர்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம