Skip to main content

உயர்தர பரீட்சை முடிவுகள் சொல்கின்ற சங்கதிகள் -ஒரு கதையாடல்




உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதும் தோற்றவர்கள் மனமொடிந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்தக்கதையாடல் தோற்றவர் பக்கமே சார்ந்து செல்கின்றது.ஏனெனில் தோல்விகளே எந்த இடத்தில் நாம் தவறுகளை செய்தோம்? அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற பல இன்னோரன்ன கேள்விகளை எமக்குள் எழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்கு எம்மைப் பக்குவப்படுத்த வல்லது.பரீட்சையில் தோற்றவர்கள் மனமொடிந்து போகாது தங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்மறை கருத்துக்களை கேட்காது தங்களுக்கு எது முடியகூடியதோ அதனைத் தேர்வு செய்வதே வினைகளை அதிகரிக்கும் செயலாகும்.பரப்பளவிலும் குடிப்பரம்பலிலும் கொண்ட ஒரு சிறிய நாட்டில்

எல்லோருமே மருத்துவராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டுமானால் அந்த நாடு அது தொடர்பான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது? இரண்டாவதாக இந்த இரு துறைகளை முடிப்பதற்கு எடுக்கின்ற காலம். அதற்கு செலவாகின்ற நிதி. சமகாலத்தில் மருத்துவத்துறையில் படிக்கின்ற மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 20000 ரூபாய்கள் தேவைப்படுவதாக அறிய முடிகின்றது. இதை ஒரு அடிப்படை சம்பளம் எடுக்கின்ற தாய் தந்தையரால் ஈடு கட்ட முடியுமா? ஆக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது தொடர்கின்ற மாணவரே வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டுகின்றார்.ஏனையோர் இல்லாததிற்குப் பாலம் கட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள்.ஆகவே தோல்விகளை கண்டு மனமுடையாது கிடைக்கின்ற குறுக்குத் தெருவில் புகுந்து நடந்தால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கை என்ற பிரதான விதிக்குக் குறுகிய காலத்தில் வந்தடையலாம்.

நான் மேலே சொன்ன பந்திக்கு உதாரணமாக எனது சங்கதிகளை சொல்கின்றேன்.

நான் 1983 ல் வர்த்தகத்துறையில் உயர்தரம் எடுத்தேன். அப்பொழுது தேசவிடுதலைக்காக இளையவர்கள் இணைந்து கொண்டிருந்த காலம். என்னுடன் படித்தவர்களில் இறுதியாக 10 பேரே பரீட்சைக்கு தோற்றினோம். எனக்கு 2 B 2 C கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு உரிய புள்ளிகள் கிடைக்கவில்லை.எல்லோருமே திரும்பவும் படிக்கச் சொல்லி ஒற்றைக்காலில் நின்றார்கள்.நான் முடியாது என்று சொல்லி இந்தியாவிற்கு சென்று கணனி மென்பொருள் துறையில் இரண்டு வருடங்கள் படித்து விட்டு எனது 23 ஆவது வயதில் இங்கு வந்துவிட்டேன்.

ஆகவே மாணவர்களே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.செய்கின்ற வேலை எதுவுமே கேவலமானது அல்ல.இந்த மனப்பான்மையை வளர்த்து எடுங்கள். போரினால் பல இழப்புகளை சந்தித்த எமது சமூகத்துக்கு குறுகிய காலத்து உழைப்பாளிகளே தேவை. வசதி உள்ளவர்கள் மருத்துவராகவோ பொறியியலாளராகவோ வரலாம்.உழைப்பே மூலதனம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

கோமகன்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம