Skip to main content

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்



கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே,

“உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன?

‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிறுகதை. இதைநான் முன்னமே படித்திருந்தாலும் இங்கே ஏறுகளின் உணர்ச்சிகளை மிக அழகாக கற்பனை செய்திருக்கிறார்.

மாட்டுவண்டிச்சவாரி ஜல்லிக்கட்டு எல்லாவற்றையும் விட செயற்கை முறை சினைப்படுத்தல், லாடங்கட்டுதல், எல்லாவற்றிலும் எறிகணைச்சிதறல் பறந்தது. ஆனால் இவற்றில் சில இப்போது வழக்கொழிந்து வருகிறது என்பதால் கதை தனது காலத்தை கடந்து விட்டது.

டிலீப் டிடியே பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் காதலா காமமா அதில் பேசப்பட்டுள்ளது என்பது எப்போதும் எனக்குச் சந்தேகமாகவே உள்ளது.

‘பருப்பு’, ‘ஆக்காட்டி’ ரெண்டு சிறுகதைகளும் சமகாலத்தவை அவைபற்றிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு வெறாக இருக்கலாம். ஆனால் ‘சம்பவங்கள்’ என்னவோ ஒன்றுதான். ஏனைய இரு கதைகள் பற்றி நான் எனது பதிவை தருவதாயின். அதன் எழுத்துநடையில் எந்த மாறுதலுமின்றி கோமகனின் வழமையான நடையாக வே இருக்கிறது. சலிப்பின்று கடந்து போகமுடிகிறது. என்றாலும் அவை வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே தொகுப்பாக வருவதால் புதுமை குறைந்து போகிறது.

‘மாதுமை ‘ சிறுகதை ஒருபோதும் மனதைவிட்டகலாத கதை. ‘டைட்டானிக் அவலம்’ போல கணக்கில் அடக்காத மூழ்கிப்போன எத்தனையோ அகதிகளின் வரலாற்றின் ஒரு பகுதி. இருக்கிறத விட்டிட்டு பறக்கிறதைப்பிடிக்க முயலும் அப்பாவிகளின் அவலம். இதை அடுத்து நிற்கும் ‘சுந்தரிகள்’. வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டுப் பணபலத்தில் கொலோச்சுகிறார்கள். இதை எங்களாலும் மட்டுமல்ல எழுதுவதாலும் எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு லாவகமாக தானே மாட்டிக்கொண்டு தகவலைத் திரட்டினாரோ என்று சந்தேகம் வருமளவுக்கு பலே என்றுபாராட்டலாம். மொத்ததில் படித்த எனக்கே பரவசம் தரும் இந்த பொத்தகம் புதிதாக படிப்பவரை பரவசப்படுத்தும். பலவிடயங்களில் உடன்பாடில்லாவிட்டாலம் கூட………


தமிழ்க்கவி

கிளிநொச்சி-இலங்கை

25 ஆவணி 2018

பிற்குறிப்பு :

செம்மைப்படுத்தலுக்காக தொகுப்பை அனுப்பிய பொழுது தனது கருத்தையும் சேர்த்து தமிழ்க்கவி திருப்பி அனுப்பியிருந்தார்.


கோமகன்

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...