Skip to main content

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்



கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே,

“உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன?

‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிறுகதை. இதைநான் முன்னமே படித்திருந்தாலும் இங்கே ஏறுகளின் உணர்ச்சிகளை மிக அழகாக கற்பனை செய்திருக்கிறார்.

மாட்டுவண்டிச்சவாரி ஜல்லிக்கட்டு எல்லாவற்றையும் விட செயற்கை முறை சினைப்படுத்தல், லாடங்கட்டுதல், எல்லாவற்றிலும் எறிகணைச்சிதறல் பறந்தது. ஆனால் இவற்றில் சில இப்போது வழக்கொழிந்து வருகிறது என்பதால் கதை தனது காலத்தை கடந்து விட்டது.

டிலீப் டிடியே பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் காதலா காமமா அதில் பேசப்பட்டுள்ளது என்பது எப்போதும் எனக்குச் சந்தேகமாகவே உள்ளது.

‘பருப்பு’, ‘ஆக்காட்டி’ ரெண்டு சிறுகதைகளும் சமகாலத்தவை அவைபற்றிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு வெறாக இருக்கலாம். ஆனால் ‘சம்பவங்கள்’ என்னவோ ஒன்றுதான். ஏனைய இரு கதைகள் பற்றி நான் எனது பதிவை தருவதாயின். அதன் எழுத்துநடையில் எந்த மாறுதலுமின்றி கோமகனின் வழமையான நடையாக வே இருக்கிறது. சலிப்பின்று கடந்து போகமுடிகிறது. என்றாலும் அவை வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே தொகுப்பாக வருவதால் புதுமை குறைந்து போகிறது.

‘மாதுமை ‘ சிறுகதை ஒருபோதும் மனதைவிட்டகலாத கதை. ‘டைட்டானிக் அவலம்’ போல கணக்கில் அடக்காத மூழ்கிப்போன எத்தனையோ அகதிகளின் வரலாற்றின் ஒரு பகுதி. இருக்கிறத விட்டிட்டு பறக்கிறதைப்பிடிக்க முயலும் அப்பாவிகளின் அவலம். இதை அடுத்து நிற்கும் ‘சுந்தரிகள்’. வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டுப் பணபலத்தில் கொலோச்சுகிறார்கள். இதை எங்களாலும் மட்டுமல்ல எழுதுவதாலும் எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு லாவகமாக தானே மாட்டிக்கொண்டு தகவலைத் திரட்டினாரோ என்று சந்தேகம் வருமளவுக்கு பலே என்றுபாராட்டலாம். மொத்ததில் படித்த எனக்கே பரவசம் தரும் இந்த பொத்தகம் புதிதாக படிப்பவரை பரவசப்படுத்தும். பலவிடயங்களில் உடன்பாடில்லாவிட்டாலம் கூட………


தமிழ்க்கவி

கிளிநொச்சி-இலங்கை

25 ஆவணி 2018

பிற்குறிப்பு :

செம்மைப்படுத்தலுக்காக தொகுப்பை அனுப்பிய பொழுது தனது கருத்தையும் சேர்த்து தமிழ்க்கவி திருப்பி அனுப்பியிருந்தார்.


கோமகன்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...