Skip to main content

“சமகால ஈழத்துப் படைப்புகள்” ஒரு நோக்கு




பத்திரிகை குறிப்பை வைத்து நாவல் / சிறுகதை எழுதலாமா என்ற கேள்விக்கு சர்வதேச எழுத்தாளர்களை எல்லாம் துணைக்கு அழைக்கின்றார் “கானல் தேசம் ” நுலாசிரியர் நடேசன். பத்திரிகை குறிப்பை வைத்து படைப்பை எழுதலாம் தவறில்லை. ஆனால் ஆதாரமான பத்திரிகை குறிப்பை எப்படியாக / எத்தகைய பார்வையில் தனது புனைவினுடாக அந்தப்படைப்புக்கு நூலாசிரியர் மாற்றியமைத்தார் என்பதை வைத்தே அந்தப்படைப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதை இன்னும் சற்று விரிவாக்கப் பார்க்கப்போனால் பத்திரிகையை ஆதாரமாக வைத்து எழுதுவதற்கு இலக்கியம் ஒன்றும் மொய் விருந்து அல்ல. மாறாகப் படைப்பு நேர்மையும் புனைவுண்மையும் முதலில் படைப்பாளிக்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்துகொண்ட ‘ரொபி’க் கதைகளையெல்லாம் இலக்கியத்துக்குள் கொண்டுவந்து அதனை உமிந்துகொண்டிருப்பது ஏறக்குறைய ஒரு சுயமைதுனம் போன்றதே. அதற்கு பத்திரிகை குறிப்பை ஆதாரமாகப் பிடிப்பது எப்படியென்றால் வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல ‘குத்துவிளக்கில் சிகரெட் பற்றியதுபோலானது’. எங்கே ஈழத்து படைப்புகள் எல்லாம் இந்தவகையான சட்டகங்களை நோக்கிச் செல்கின்றனவோ என்று அச்சமாக இருக்கின்றது.

ஒரு பிரதிக்கு விமர்சனம் என்று வரும்பொழுது புலி ஆதரவு இலக்கியத்தளம் தனது அரசியல்களுக்கு ஏற்றவாறு தேற்ரங்களையும் நிறுவல்களையும் போடுகின்றது. அதே போல் மாற்றுக்கருத்து இலக்கியத்தளம் தனது அரசியல்களுக்கு ஏற்றவாறு தேற்ரங்களையும் நிறுவல்களையும் போடுகின்றது. இறுதியில் வாசகனுக்கு அயற்சியே ஏற்படுகின்றது. எப்பொழுது இவற்றையெல்லாம் கடந்து இயல்பாக “நடு”வினுடாக பாய்ந்து செல்லும் படைப்புகளின் குறுக்கு வெட்டுகளை பார்க்கப் போகின்றோம் என மனம் அவாவுகின்றது. அதாவது கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் இரவுகளை போலவோ’,காலம் செல்வத்தின் ‘ எழுதித்தீரா பக்கங்கள் போலவோ’, கோமகனின் ‘முரண்’ போலவோ, தீரனின் ‘கொல்வதெழுதல்’, ‘நட்டுமை’,’தீரதம்’ போலவோ, சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ போலவோ படைப்புகளை படிக்கவே மனம் ஆவலாக இருக்கின்றது.

கோமகன்

17 மாசி 2019

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...