Skip to main content

ஒரு சில படைப்பாளிகளின் பார்வையில் பாலியல் தொழிலார்கள்



ஒரு சில படைப்பாளிகளின் சிந்தனைப்போக்குகளை பார்க்கையில் எனக்கு அவர்களின் அறியாமை மீது இரக்கமே ஏற்படுகின்றது. தங்கள் படைப்புகளில் பெண்களின் மீது உள்ள பார்வைகளை முற்போக்கு சிந்தனைகளாகக் காட்டும் இந்தப்படைப்பாளிகள், நடைமுறைகளில் அவ்வாறு காட்டிக்கொள்வதில்லை. அண்மையில் எனது சக படைப்பாளியான ஒரு கவிஞர் டெல்லியில் இருந்த பாலியல் தொழிலார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த மனிதாபிமான உதவிகளை எள்ளி நகையாடி இருந்தார்.அத்துடன் மற்றயவர்களுக்கு போதனையும் செய்திருந்தார். அதில் அவரது பெண்கள் மீதான இழி பார்வையும், ஆணாதிக்க மனோபாவவுமே மேலோங்கி இருந்தது .

குகைகளில் விலங்குகளுடன் விலங்குகளாக இருந்த மனிதனின் சிந்தனை போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களே நாகரீகங்களின் வளர்ச்சி நிலையும் அத்னூடாக வந்த இன்றைய வாழ்வு முறைமைகளும். ஆனால் ஒருசிலருக்கு இந்த வளர்ச்சிகள் ஒவ்வாமையாகக் காணப்படுகின்றது. மானுட வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் சம அளவிலான உயிரிகள். .ஆனால் மானுட நாகரீகப் போக்குகளிலே உடல்வலுவால் பலம் கொண்ட ஆண்களால் பெண்ணானவள் இரண்டாம் தரப்பிரஜையாக நடாத்தப்பட்டாள். இதற்கு உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே ஊக்கிகளாக செயல்பட்டு வந்தன. அதன் விளைச்சலே பாலியல் தொழிலார்கள்.

பாலியல் தொழில் என்பது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இன்றைய நிலையில் உள்ள மனிதநாகரீகம் பாலியல் தொழிலை இழிநிலையில் கருதாது அதனை சட்டவலு கொடுத்து சமூக அந்தஸ்த்தாக தரமுயர்த்தியுள்ளது. ஆனால் ஒரு சில படைப்பாளிகளோ இந்த நிலை தெரிந்தும் மதம் பிடித்தவர்களாக பாலியல் தொழிலாளர்களை தொடர்ந்தும் அவர்களின் உணர்வுகளை இழிநிலப்படுத்தியே வருகின்றார்கள்.

இப்படியான இரட்டை முகப்படைப்பாளிகளே!! உங்கள் சுயம் வெளிப்படும்பொழுது உங்கள் படைப்புகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை மறவாதீர்கள். உங்கள் படைப்புகள் குப்பைகளுடன் குப்பைகளாக கேட்பாரற்று கிடக்கும். இத்தகைய படைப்பாளிகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் நன்றி .




கோமகன்

December 10, 2015



Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...