Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 09


தவறணையில் தத்துவ விசாரணை -தேர்தல்



லொக்கேசன் : பருத்தித்துறை (கூவில்)

முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர் ஆகின்றார்.

ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன? 

சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு .

ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் நீ கிறுங்க மாட்டாய் . உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது?

சுறுக்கர் : இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு .

ஐயம்பிள்ளை: அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ?

சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்சான், ஒருத்தனை சனம் எல்லாம் ஒண்டு கூடி ரகசியமாய் வாக்கு போட்டு எங்கடை அடுத்த நாட்டாம்மை நீதான் எண்டு முடிக்கிறது தான் லெக்சன். ஆனால் இப்ப என்னடாவெண்டால் சனங்களை வெறும் மடயராக்கி சனங்களுக்கே தெரியாத முதலாளியளும், பெரிய பெரிய வங்கியளும், வேறை நாடுகளும் தான் எங்கடை நாட்டிரை நாட்டாமையை டிசைட் பண்ணுகினம். இதுகள் விளங்காமல் இங்கத்தையான் சனங்கள் எதோ தங்கடை கோயில் திருவிழா மாதிரி கூடி கும்மியடிக்கிறதும், ஒருத்தனை ஒருத்தன் டக்கால்ட்டி பண்ணுறதும் தாங்கேலாமல் கிடக்கடா ஐயம்பிள்ளை. இல்லாட்டில் எப்பிடி சுமந்திரன் வரேலும் ? சொல்லு பாப்பம்? அதோடை பார் அடுத்த கூத்தை, சிவாஜி லிங்கம் மகிந்தரோடை கேம் கேட்டு கவிண்டு கொட்டிண்டிருக்கிறார். அதோடை கண்டியோ பிள்ளைப் பெறப்போறவள் சும்மா கிடக்க பக்கத்திலை கெல்ப்புக்கு நின்டவள் வயித்து வலியிலை ஊரைக் கூட்டின மாதிரி உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் பட்ட பாட்டை பாத்தியே ? விட்டால் இவையே எங்களுக்கு தமிழ் ஈழம் எடுத்து தந்து போடுவினம் எண்ட மாதிரி பேஸ் புக்கிலை அவையின்ரை டான்சுகள். இங்கை சனம் படுற பாடுகளை பத்தி அவைக்கு அக்கறை இல்லை. தங்கடை குடும்பத்திலை இங்கை இருக்கிறவையை வைச்சு கொண்டு வடக்கு கிழக்கு சனம் எல்லாம் சோக்காய் இருக்கினம் எண்ட நினைப்பு அவைக்கு . இதெல்லாம் எனக்கு பண்டி விசர் கண்டியோ. உதுகள் எல்லாம் சந்தனம் மெத்தின கேசுகள். இல்லாட்டில் சும்மா கிடந்த சைக்கிளுக்கு காத்து அடிச்சு விட்டிருப்பினமே?

அதோடைமச்சான் ஐயம்பிள்ளை, சனம் எல்லாம் இப்ப எல்லாம் வலு முன்னேத்தம் கண்டியோ. அவைக்கு முந்தின மாதிரி அமுதர் மங்கையர்கரசி மாமி, இங்காலை சிவசிதம்பரம் மாதிரி டக்கால்ட்டி பேச்சுகள் எல்லாம் எடுபடாது. என்னத்துக்கு கூட்டத்துக்கு போய் மினைக்கெடுவான் எண்ட நினைப்பு சனத்துக்கு. சனம் எல்லாம் வெள்ளனவே டிசைட் பண்ணிப் போட்டு எல்லாற்றையும் உரு ஆட்டத்தைப் பாத்து சிரிச்சு கொண்டு நிண்டுதுகள். ஆனாலும் மச்சான், மைத்திரி சும்மா இருக்காமல் பொலிஸ் காணி அதிகாரத்தோடையாவது பிரச்சனயை சோட் அவுட் பண்ண வேணும். அதோடை வீட்டுக்காறர் உள்ளுக்கை போய் கடிபடாமல் வெளியாலை நிண்டு மைத்திரிக்கு சப்போர்ட் பண்ணவேணும் கண்டியோ. இதுதான் இண்டையான் சுறுக்கன்ரை தவறணை பேச்சு மச்சான் ஐயம்பிள்ளை .

சுருக்கு சுறுக்கர்

18/08/2015 

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...