Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் -பாகம் 10


சுறுக்கரும் சம்பந்தனும் 



விடியக்காலமை குளிச்சு முழுகி நெத்தியிலை பெரிய சைசிலை திருநூறும் பூசி வீட்டு முன்விறாந்தையிலை இருந்த ஈசி செயரிலை ரெண்டு காலையும் கிழிச்சு போட்டுக்கொண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை உதயன் பேப்பர் பாத்துக் கொண்டு இருக்கிறார் .பனைக்கருக்காலை செய்த படலை திறந்து கேட்டது ஐயம்பிள்ளை அரைக்கண்ணாலை படலையை பாக்கிறார் சுறுக்கர் லைட்டான தள்ளாட்டத்தோடை என்றியாகிறார் . இனி .....

00000000000000000000000

சுறுக்கர்: மச்சான் ஐமிச்சம் என்னடாப்பா.......... எல்லா மாடும் ஒடீச்சுதெண்டு பாத்தால் சுப்பற்றை கொல்லைக்குள்ளை நிண்ட பேத்தை மாடும் ஒடீச்சுதாம் எண்ட கணக்காய் பேப்பர் படிச்சு கொண்டிருக்கிறாய் .

ஐயம்பிள்ளை: உங்களுக்கு என்னோடை தனகாட்டில் பத்தியப்படாதே சுறுக்கர் .

சுறுக்கர்: சரி....... சரி ......... உன்னோடைதானே தனகலாம் எல்லாரோடையும் செய்யேலுமே . என்ன பேப்பரிலை அவதியாய் படிக்கிறாய் ?

ஐயம்பிள்ளை: உங்களுக்கு விசயம் தெரியாதே? சம்பந்தர் எல்லோ எதிர்கட்சி தலைவராய் போட்டார் . உங்களுக்கு ஏதாவது எத்துப்படுதே ?

சுறுககர்: எனக்கு எத்துப்படுகிறது இருக்கட்டும் உனக்கு என்ன விளங்கினது அதை சொல்லு ?

ஐயம்பிள்ளை: என்ன அண்ணை விளையாடுறியள்? நான் ஐமிச்சத்துக்கெண்டே பிறந்தனான். எனக்கு உதெல்லாம் விளங்காது. நான் சும்மா பொழுதுபோக எழுத்து கூட்டி படிச்சு கொண்டிருக்கிறன். 

சுறுக்கர்: சரி அடம் பிடிக்கிறாய். எனக்கு உன்னாலைதான் இண்டைக்கு சனியோ தெரியாது. காலமை தவறணையிலை உதைப்பத்தி புசத்தினவங்கள்தான். உதைப்பத்தி எடுத்து விடு மச்சான் எண்டு கூட்டாளியளும் கேட்டவங்கள் தான். 

இப்ப............... 77 க்கு பிறகு ஒரு தமிழ் ஆள் எதிர்கட்சி தலைவராய் வந்திருக்கிறார் எண்டால் இலங்கையின்ரை பரிசுகேட்டை பாரன் . முதலாவது ஆள் அமுதர். அதுக்கு பிறகு சம்பந்தர். இதுக்கு கிட்டமுட்ட 38 வரியம் செண்டிருக்கு .அமுதர் அவற்றை பெஞ்சாதி சனத்துக்கு முன்னாலை தங்கடை நெத்தியிலை ரத்தப் பொட்டு வைச்சு பெடியளை ஜூவால் ஏத்தி நோகாமல் நொங்கு எடுத்தீச்சினம். இப்ப சம்பந்தர் வந்திருக்கிறார். அவற்றை அசுமாத்தத்தை பாத்தால் பழையபடிக்கு கோட்டு சூட்டு போட்ட ஜென்டில்மன் அரசியல் தான் செய்யப்போறார் போலை கிடக்கு. தன்ரை கூட்டிலை இருந்த இயக்கத்திலை இருந்து வந்து சவுண்ட் விட்ட பார்ட்டியள் எல்லாரையும் காய் வெட்டி போட்டார். மிச்சம் இருக்கிறது நம்ம சித்தார்த்தன் தான். ஆனால் ஒண்டு மச்சான்............ தமிழன்ரை பிரச்சனை முதல் அகண்ட தேசமாய் இருந்து, பேந்து வடக்கு வேறை கிழக்கு வேறையா போய் , பேந்து மாகாண சபையாய் போய் , இடையிலை ஒரு நாடு  ரெண்டு தேசம் எண்டு வந்து ,  இப்ப பார்லிமன்றிலை எதிர்கட்சி தலைவராய் கட்டெறும்பாய் போய் நிக்குது.

இருந்து பார் இன்னம் கொஞ்ச காலத்திலை "யாப்ப கடுவா" இல்லையெண்டால் "யாப்பா பட்டுணா" எண்டு பேர் மாத்துவாங்கள். பேந்தென்ன அகண்ட தமிழீழம் "யாப்ப பட்டுணா" வாய் போடும். கேட்டால் சமஸ்ட்டி எண்டுவாங்கள் எங்கடை ஜென்டிமன் பொலிற்றிசியன்ஸ். சரி மச்சான் ஐயம்பிள்ளை நான் வரப்போறன். 

சுருக்கு சுறுக்கர் 

September 03, 2015

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...