Skip to main content

பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும்



என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட .. இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  நேரடியான வருகையுமே .

இந்த நிகழ்வை புறக்கணித்த அந்த சில நண்பர்கள், நிகழ்வுக்கு நேரடியாக வந்து என்னென்ன காரணங்களுக்காக இதை புறக்கணிக்கின்றோம் என்று ஓர் துண்டுப் பிரசுர வாயிலாக சொல்லியிருந்தால் அந்தப் புறக்கணிப்பு உண்மையில் அர்த்தமுடையதாக இருந்திருக்கும். இதுவே இலக்கியப்பரப்பில் உள்ள அறமுமாகும். இறுதியில் அவர்களது புறக்கணிப்பானது ஐந்து பேர் கூடியிருந்து ஈர் பேன் பார்த்து பரஸ்பரம் முதுகு சொறிதலிலேயே முடிந்துவிட்டது. தங்களது கருத்துக்களை பொதுவெளியில் சொல்வதற்கு தில்லும், தினாவெட்டும் இல்லாத இவர்கள் இனி வருங்காலங்களில் பாரிஸ் இலக்கியப்பரப்பில் இலக்கியம் பற்றி பேசுவதற்கு எதுவித அருகதையும் யோக்கியத்தையும் அற்றவர்களாகின்றர். அத்துடன் ஆயுத எழுத்துக்கு அருகிலே ஆக்காட்டி எட்டாவது இதழும் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் ஆக்காட்டி தலைமை ஆசிரியர் மற்றயவர்களுடன் சேர்ந்து ஈர் பேன் பார்த்துகொண்டு பரஸ்பரம் முதுகு சொறிந்தது ஆக்காடியின் பறப்பின் மீதான சந்தேகங்களை ( ஓர்  குறிப்பிட்ட தளத்தின் கைப்பொம்மையாக மாறுதல் ) வலுப்படுத்துகின்றது . மேலும், ஆயுத எழுத்து நாவலானது யாழ்ப்பாணத்தில் மட்டுமே பலத்த ஆதரவுடன் பல்வேறு தளங்களில் இருந்து வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பில் வெற்றிகரமாக நடந்தது . அங்கு இருக்கின்ற நாகரீகத்தை கடக்க புலம்( ன் ) பெயர்ந்தவர்களுக்கு நீண்டகாலம் .எடுக்கும் போல் தெரிகின்றது. இந்த ஐந்தாறுபேர் இல்லாவிடிலும் நிகழ்வு உண்மையான இலக்கிய ஆர்வலர்களுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. நன்றி

பிற்குறிப்பு :

எனது நிகழ்வுக்காக இவர்கள் வரவில்லையே என்ற காழ்புணர்வில் எழுதப்பட்ட ஓர் நிலைத்தகவல் இல்லை. இலக்கியப்பரப்பில் உள்ள வறுமை நிலையில் உள்ள இவர்களது பார்வையை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

கோமகன்

25 ஐப்பசி 2015

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே