Skip to main content

பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும்



என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட .. இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  நேரடியான வருகையுமே .

இந்த நிகழ்வை புறக்கணித்த அந்த சில நண்பர்கள், நிகழ்வுக்கு நேரடியாக வந்து என்னென்ன காரணங்களுக்காக இதை புறக்கணிக்கின்றோம் என்று ஓர் துண்டுப் பிரசுர வாயிலாக சொல்லியிருந்தால் அந்தப் புறக்கணிப்பு உண்மையில் அர்த்தமுடையதாக இருந்திருக்கும். இதுவே இலக்கியப்பரப்பில் உள்ள அறமுமாகும். இறுதியில் அவர்களது புறக்கணிப்பானது ஐந்து பேர் கூடியிருந்து ஈர் பேன் பார்த்து பரஸ்பரம் முதுகு சொறிதலிலேயே முடிந்துவிட்டது. தங்களது கருத்துக்களை பொதுவெளியில் சொல்வதற்கு தில்லும், தினாவெட்டும் இல்லாத இவர்கள் இனி வருங்காலங்களில் பாரிஸ் இலக்கியப்பரப்பில் இலக்கியம் பற்றி பேசுவதற்கு எதுவித அருகதையும் யோக்கியத்தையும் அற்றவர்களாகின்றர். அத்துடன் ஆயுத எழுத்துக்கு அருகிலே ஆக்காட்டி எட்டாவது இதழும் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் ஆக்காட்டி தலைமை ஆசிரியர் மற்றயவர்களுடன் சேர்ந்து ஈர் பேன் பார்த்துகொண்டு பரஸ்பரம் முதுகு சொறிந்தது ஆக்காடியின் பறப்பின் மீதான சந்தேகங்களை ( ஓர்  குறிப்பிட்ட தளத்தின் கைப்பொம்மையாக மாறுதல் ) வலுப்படுத்துகின்றது . மேலும், ஆயுத எழுத்து நாவலானது யாழ்ப்பாணத்தில் மட்டுமே பலத்த ஆதரவுடன் பல்வேறு தளங்களில் இருந்து வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பில் வெற்றிகரமாக நடந்தது . அங்கு இருக்கின்ற நாகரீகத்தை கடக்க புலம்( ன் ) பெயர்ந்தவர்களுக்கு நீண்டகாலம் .எடுக்கும் போல் தெரிகின்றது. இந்த ஐந்தாறுபேர் இல்லாவிடிலும் நிகழ்வு உண்மையான இலக்கிய ஆர்வலர்களுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. நன்றி

பிற்குறிப்பு :

எனது நிகழ்வுக்காக இவர்கள் வரவில்லையே என்ற காழ்புணர்வில் எழுதப்பட்ட ஓர் நிலைத்தகவல் இல்லை. இலக்கியப்பரப்பில் உள்ள வறுமை நிலையில் உள்ள இவர்களது பார்வையை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

கோமகன்

25 ஐப்பசி 2015

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...