Skip to main content

அரசியலும் எழுத்தும்



எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது. அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது. எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை. ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, "எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை" என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது. கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, "நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்" என்று சொல்ல முடியுமா? சாத்திரியோ ,சயந்தனோ, குணா கவியழகனோ, ஷோபா சக்தியோ வேறானவர்கள். தனிப்பட்ட குணாம்சம் உள்ளவர்கள். அவர்களது படைப்புகள்தான் பேசப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் இல்லை.

நான் அண்மையில் புலோலியூரானை முகடு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் அரசியல் வெடிலை அள்ளி வீசியது. அதில் புலோலியூரான் தனது நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார். இது தேசிய கோப்பிசங்கள் ,சிலாகையள், தீராந்தியள், ஆணியள் போன்றோருக்கு இடியாக போய் விட்டது. உடனே சிவா ஏரம்பு என்ற தேசியம் என்னை ஈ பி டீ பி என்று சேறடிக்கின்றது.

ஒரு படைப்பை வாசிக்கின்ற வாசகன் அதில் முரண்கள் இருந்தால், அந்த படைப்புக்கு வாசகனானவன் பொது வெளியில் விமர்சனம் அல்லது எதிர்வினை வைக்க வேண்டும். அதுவே இலக்கிய மரபு. அதை விடுத்து எழுதியவரின் மீது வசைபாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனாலேயே நான் யாழ் இணையத்தை விட்டு விலக வேண்டி வந்தது. சிவா ஏரம்புவுக்கு கவிஞர் கருணாகரன் சொல்லியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் "பொதுவெளி என்பது துடக்குப் பார்க்கும் இடமல்ல ". உங்களுக்கு நேர்காணலில் முரண்கள் இருக்கா? நேரிடையாக முகடு சஞ்சிகைக்கு உங்கள் எதிர்வினையை வையுங்கள். அவர்கள் பிரசுரம் செய்வார்கள். அதுவே எழுத்து அறமாகும். அதை விடுத்து எனது நதிமூலம் ஆராய வேண்டாம்.

நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...