Skip to main content

அரசியலும் எழுத்தும்



எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது. அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது. எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை. ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, "எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை" என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது. கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, "நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்" என்று சொல்ல முடியுமா? சாத்திரியோ ,சயந்தனோ, குணா கவியழகனோ, ஷோபா சக்தியோ வேறானவர்கள். தனிப்பட்ட குணாம்சம் உள்ளவர்கள். அவர்களது படைப்புகள்தான் பேசப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் இல்லை.

நான் அண்மையில் புலோலியூரானை முகடு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் அரசியல் வெடிலை அள்ளி வீசியது. அதில் புலோலியூரான் தனது நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார். இது தேசிய கோப்பிசங்கள் ,சிலாகையள், தீராந்தியள், ஆணியள் போன்றோருக்கு இடியாக போய் விட்டது. உடனே சிவா ஏரம்பு என்ற தேசியம் என்னை ஈ பி டீ பி என்று சேறடிக்கின்றது.

ஒரு படைப்பை வாசிக்கின்ற வாசகன் அதில் முரண்கள் இருந்தால், அந்த படைப்புக்கு வாசகனானவன் பொது வெளியில் விமர்சனம் அல்லது எதிர்வினை வைக்க வேண்டும். அதுவே இலக்கிய மரபு. அதை விடுத்து எழுதியவரின் மீது வசைபாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனாலேயே நான் யாழ் இணையத்தை விட்டு விலக வேண்டி வந்தது. சிவா ஏரம்புவுக்கு கவிஞர் கருணாகரன் சொல்லியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் "பொதுவெளி என்பது துடக்குப் பார்க்கும் இடமல்ல ". உங்களுக்கு நேர்காணலில் முரண்கள் இருக்கா? நேரிடையாக முகடு சஞ்சிகைக்கு உங்கள் எதிர்வினையை வையுங்கள். அவர்கள் பிரசுரம் செய்வார்கள். அதுவே எழுத்து அறமாகும். அதை விடுத்து எனது நதிமூலம் ஆராய வேண்டாம்.

நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...