Skip to main content

நிலவு குளிர்சியாக இல்லை -திறனாய்வு நோயல் நடேசன்



கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.

சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.

நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

சமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப் வாசித்தபோது அதில் இஸ்ரேலிய ஹிப்ரு மொழியில் வந்த கதை சிறந்த கதை பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் எழுத்தாளர் மாப்பசான் சிறுகதைக்கு தலைமைக் குரு போன்றவர் அவரது புகழ்பெற்ற நெக்கிலஸ் என்ற சிறுகதையில் அழகான இளம் பெண் ஒரு சாதாரமணமான பதவி வகிக்கும் ஒருவரை திருமணம் முடிக்கிறாள் ஆனால் அவளது கனவுகளில் பணம் படாடோபமான விருந்துகள் அழகிய அலங்காரமான வீடு என்பன கனவாக இருக்கிறது. நிஜவாழ்கை, கனவுகளுக்கு எதிர்த் திசையில் அமைகிறது. அந்த தம்பதிகளுக்கு ஒரு பணக்கார விருந்திற்கு அழைப்பு வந்தபோது தனது செல்வந்த சினேகிதியின் விலை உயர்ந்த நெகலஸ்சை இரவல் வாங்கி அணிந்துகொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கிறாள். ஆனால் அந்த நெக்லஸ் தொலைந்துவிட்டது. பல இடங்களில் கடன்பட்டு அதைப்போல் புதிதாக நெக்லசை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்கள் அந்த தம்பதியினர். அந்த நெக்கிலசுக்காக பட்டகடனை அடைப்பதற்காக பத்துவருடங்கள், பல வேலைகள் செய்து கடனை அடைக்கிறார்கள். இந்த பத்துவருடங்களில் அந்த பெண் தனது அழகை, பொலிவை இழந்து போகிறாள். கடனைத் அடைத்த பின்பு எதிர்பாராமல் சந்தித்த பணக்கார சினேகிதியிடம்
உண்மையை சொன்னபோது அந்த சினேகிதி அந்த நெகல்ஸ் விலை குறைந்தது. போலி என்கிறாள். பத்து வருடங்கள் இரவு பகலாக சுகங்களை ஓய்வு நேரங்களை மறந்து கடுமையாக உழைத்தவளுக்கு எப்படி இருக்கும்? இந்த தம்பதியினரது வாழ்வின் தருணங்களை எடுத்துக் காட்டுவதோடு நேர்மை உழைப்பு என்பவற்றை இந்தக் கதை சொல்கிறது. கதைகேட்ட சந்தோசத்திற்கு அப்பால் பலவிடயங்களை இந்தக் கதை சிந்திக்கப் பண்ணுகிறது.

வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்சியாக இல்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் சில மணியான கதைகள் உள்ளன. பல சிறுகதைப் தொகுப்புகளை வாசிக்கும்போது ஒரு கதையாவது தேறாமல் இருபதைக் கண்டுள்ளேன்.

மிகவும் அழகான ஆனால் ஆடம்பரமற்ற புனைவு மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள். பெரும்பாலானவை கோப்பாய் பிரதேசத்தை சுற்றியவை. நில சூழலை மிகவும் அவதானிப்போடு எழுதப்பட்டடிருக்கிறது.. முக்கியமாக தாவரங்கள் பறவைகளின் உடல் மொழிகளை இந்தளவு விபரிப்பாக நான் எந்தக் தமிழ்க் கதையிலும் பார்க்கவில்லை.அவரது தம்பியோடு பேசியபோது விவசாயத்தில் டிப்பிளோமா செய்தவர் என அறிந்தேன்.

தலையங்கத்திற்கு உரிய கதை- ஒருவிதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து நனவிடைதோயும் கதை ஆனால் யாழ்ப்பாண கிடுவேலி நாகரிகத்தையும் பாவனைகள் எப்படி பெண்களை வாட்டி வதைத்கிறது என்பதை அழகாக சொல்கிறது.

மனவுரியும் மரவுரியும்- ஒரு வேப்பமரத்தின் கதை அதாவது வைத்த வேப்பமரத்தை அழிக்க சுற்றி பட்டையை எடுத்த பினபும் அது மீண்டும் தழைப்பது கண்டு அதை அழிக்க மறுத்தவரது மனம் பறறிசொல்லும் கதையது. வாடும் பயிரைக் கண்டு வாடும் உள்ளம் எமக்கு வருபோது எம்மை சுற்றி உள்ள மரங்களை பாதுகாத்து எமது உறவினர்போல் அன்பு செலுத்வோம

எனது கிளினிக்கை சுற்றி பெரிய யூகலிக்கப்ரஸ மரங்கள் உள்ளது அவைகள் முன்பகுதியை மறைகின்றன என்பது எனது கவலை. ஆனால் அந்த மரங்களை எனக்குத் தெரிந்த ஒருவர் பாத இரசத்தை செலுத்தி காய்ந்துபோக செய்யவா எனக் கேட்டபோது மறுத்தேன். அப்படி செய்து விட்டு கவுன்சிலிடமிருந்து தப்பினாலும் அந்த மரங்களும் அந்த மரங்களில் வந்து தங்கும் பறவைகள் என்ற சொந்தம் என்னுடன் 18 வருடங்களாக தொடர்கிறது

ஒரு கதை அரேபியநாட்டில் பேச்சுத் துணையற்று இருந்தவன் ஒரு சிற்றெறும்புக் கூட்டத்தை கண்டு ஏதோ இலங்கை எறும்பென அவற்றைப் பார்த்து ஆறுதல் அடைவது தனிமையை விளக்குகிறது.

உப்பு என்பது என்னை மிகவும் கவர்ந்தது. சிறுமி உப்பு அள்ளப்போய் அந்த உப்பு நீருக்குள் உடை நனைந்து அவளது தேகம் எரிவதும் பின்பு உப்பளக் காவலர்களிடம் அடிவாங்கிய பின் வீடு சென்றால் தாய் உப்புக் கொண்டு வந்தாயா என கேட்கும்போது சிறுமி அழுகிறாள். அவள் கண்ணீரில்தான் உப்பு என முடிப்பது மிகவும் கவித்துவமான தருணம்.

கதைகள் எல்லாம் முப்பது வருடத்திற்கு முன்னானவை ஒரு இடத்தில் மட்டும் நண்பன் இறந்த சுவரெட்டி ஆயுதப்போரட்டத்தை நினைவு படுதினாலும் தற்கால கதைகள்போல் இரத்தவாடை இல்லை. 80 முன்னான யாழ்பாண மண்ணின் புழுதிவாசம் பெரும்பாலான கதைகளில் மணக்கிறது.

இந்தக்கதையில் எனக்கு ஏதாவது குறை சொல்ல நினைத்தால் வாசிபவரது ஊகங்களுக்கு இடமில்லை. பெரும்பாலான விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகிறது. வாசகர்களை குழந்தையாக நினைத்து சத்தான உணவை கரண்டியால் ஊட்டியுள்ளார்.

ஒருவிதத்தில் தமிழர்கள் பலவிடயங்களில் குழந்தைகள் என்பதை அறிந்து எழுதினாரோ என நினைக்கிறேன்

கோப்பாய் வடக்கில் வாழுகின்ற வடகோவை வரதராஜன் யாழ் மத்தியகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் குண்டகசால விவசாயக்கல்லூரியில் விவசாயக்கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார் பின்னர் சிறிது காலம் சவூதி அரேபியாவில் லாண்ட் ஸ்கேப் போர்மன் ஆக கடமையாற்றி விட்டு தாயகம் திரும்பி பல இடங்களில் கிராமசேவையாளராக இருந்திருக்கின்றார் இப்பொழுது சிறுப்பிட்டி பகுதிக்கு கிராம சேவையாளராக கடமையாற்றுகின்றார் .மல்லிகை சிரித்திரன் வீரகேசரி கணையாழி அலை என்று பல பத்திரிகைகளில் எழுதிவந்த இவரது பல படைப்புகள் போர் மற்றும் இடப்பெயர்வுகளால் தொலைந்து விட்டன இருந்தவைகளை தொகுத்ததே இந்த சிறுகதை தொகுதி.


நோயல் நடேசன்

December 06, 2015

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...