Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 13




கிலிசை கெட்ட காசை வாங்கப்படாது  


ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ் ,

காலங் காத்தாலை எழும்பி குளிரிலை நடுங்கின உடம்புக்கு சுடுதண்ணியாலை சுளுக்கெடுத்து திருனூத்தை அள்ளி பூசிக்கொண்டு ஒரு தேத்தண்ணியோடை பெட்டியை துறந்தன். ஐ மீன் கொம்பியூட்டரை . அட ஹப்பியாய் லீவு நாளிலை இருப்பமெண்டு பெட்டியை திறந்தால் அங்கை சனி நிண்டு தைய்யா தக்கா போடுது. சுறுக்கருக்கு ஒரு கூட்டாளி பெடி ஒருத்தன் முகனூலிலை இருக்கிறான். பெடி கவிதையள் எழுதிறதிலை ஆள் விச்சுழியன் கண்டியளோ. அவன் ஒரு பதிவை போட்டிருந்தான். நானும் என்ன ஏது எண்டு ஒருக்கால் எட்டிப் பாத்தன். பெடிக்கு என்ன கிரகமாற்றமோ தெரியேலை அப்பிடியொரு பதிவு. அவன்ரை பதிவை பாத்து எனக்கு மண்டை விறைச்சுப்போச்சுது. பிரச்சனை என்னவெண்டால் டில்லியிலை இருந்து பாலியல் தொழிலாளியள் காசு செத்து குடுத்தது பெடிக்கு குடைச்சலாய் போச்சுது. அது துடக்கு காசு. அவை எப்பிடி குடுக்கேலும்? அதோடை அவை விபச்சாரியள் ( நாங்கள் ஊரிலை சொல்லுவம் சைவேயள் , டிமூக்கள் ) எண்டு பெடி கொதிக்குது.

அப்ப நான் சொன்னன், மோனை ஒருக்காலும் செய்யற வேலையை கிலிசை கெடுத்தாதை. எல்லாருக்குமே செய்யிற வேலை கடவுள் மாதிரி. அதோடை பாலியல் தொழில் செய்யிற பெட்டையளுக்கு  அவையின்ரை உடம்பாலை தான் தூசி பிடிச்சதே ஒழிய மனசாலை இல்லை. அவை குடுத்த காசுக்கு புறட்டணியம் படியாதை. அவையள் தாற காசை உப்பிடி ஆம்பிளைத்தனமாய் பாக்காதை எண்டு சொன்னன். அதுக்கு பெடி சுறுக்கரை பாத்து என்ன சொல்லுறான் எண்டால், விபச்சாரியை விபச்சாரியெண்டு சொல்லாமல் வேறை என்னவெண்டு சொல்லுறது. விபச்சாரியை எங்கடை சனம் ஏத்து கொள்ளுறேலை. நீங்கள் என்ன விசர் கதை கதைக்கிறியள்?  எண்டு என்னைப் பாத்து கேக்கிறான். இதாலை இண்டைக்கு இவன் ஐயம்பிள்ளையோடை கொட்டில்லுக்கு போற புறோக்கிறாமை நிப்பாட்டிப் போட்டன்.

பெடியள் எனக்கு இப்ப ஒரு விசயம் தெரியவேணும். உலகம் இப்ப மாறி எங்கையோ போட்டுது. பெடி சொன்ன சொல்லுக்கு பதிலாய் பாலியல் தொழிலார்கள் எண்டு சொல்லு இப்ப வந்திருக்கு. அதோடை பாலியல் தொழிலை ஒரு தொழிலாய் சட்டமாக்கி அதுக்கு வரியும் கட்டிற நிலமை இப்பத்தையான் உலகத்திலை இருக்கு. ஒரு பால் ஆக்களையே கலியாணம் கட்டிற அளவுக்கு சட்டமும் சனங்களின்ரை யோசினையளும் முன்னேறின நேரத்திலை இந்தப் பெடி தான் பிடிச்ச லப்பனுக்கு ( முயலுக்கு)  திறீ லெக்ஸ் எண்டு நிக்கிறான் பாருங்கோ. அதோடை இந்த பெடியள் காதும் காதும் வைச்ச மாதிரி தங்கடை அமர் அடக்க  பெடிச்சியளிட்டை  போய் கொண்டு வெளியாலை தாங்கள் எதோ சுத்தம்வெள்ளை எண்ட மாதிரி விலாசம் காட்டிக்கொண்டு பெடிச்சியளை மட்டும் கிலிசை கெடுத்திறது எந்த ஊர் ஞாயம் எண்டு எனக்கு விளங்கேலை கண்டியளோ.  அதோடை அவளவையள் உதவி ஒத்தாசை ஒண்டும் மற்ற சனத்துக்கு செய்யக்கூடாது எண்டு பெடி சொல்லுது. இது ஆம்பிளைத் தனமான செடில் கதை இல்லாமல் வேறை என்னெண்டு சொல்லுறுது ??

சுருக்கு சுறுக்கர் 

00000000000000000000000000000000000000

வெள்ளமும் சுறுக்கரும் 

வணக்கம் பிள்ளையள் ,

தமிழ் நாட்டிலை வந்த மழையும் வெள்ளமும் இப்ப வடிஞ்சு கொண்டு போறது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தாலும் சில விசயங்களை இடிச்சு சொல்லவேணும். வெள்ளம் வந்த மூட்டம் ஒரு அரசாங்கம் செய்யிற வேலையளை பொது சனம் செய்திருக்கு. அதிலையும் இளந்தாரிப் பெடியள் கொஞ்சப் பேர் ஒண்டாய் சேந்து சனங்களை தொடர்புபடுத்திறதுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையையே நடத்தி இருக்கிறாங்கள். ஒரு பெடியன் சனங்களை காப்பாத்த போய் தன்ரை உயிரையே குடுத்திருக்கிறான். இதிலை அரசியல் செய்யிற பன்னாடையளை கட்டிவைச்சு காஞ்சோண்டி இலை அரைச்சு பூசி, மிளகாய் தூளும் கண்ணுக்கை அடையவேணும்.

வெள்ளம் வடிஞ்சாலும் இனித்தான் பெரிய வில்லங்கமே இருக்கு. தொற்று நோயள் எல்லாம் சனங்களுக்கு பரவும். இதிலை எல்லாரும் வலுகவனமாய் இருக்கவேணும். உந்த டாக்குத்தர்மார் எல்லாம் றோட்டிலை இறங்கி சனங்களுக்கு இலவசமாய் எல்லா சிகிச்சையளும் செய்யவேணும். பெடியள்மார் சனங்களுக்கு இந்த தொற்று நோயாளைப்பத்தி அலேர்ட் பண்ணவேணும். அப்பத்தான் சனங்கள் சாவிலை இருந்து தப்புங்கள். கவலையீனமாய் விட்டால் சனங்களை ஆராலையுமே காப்பாத்தேலாது .

சுறுககரின் இண்டையான் அவதானம்

00000000000000000000000

கெத்து

வெளிநாட்டிலை சந்தனம் மெத்தி இருக்கிறவைக்கு ஊரிலை இன்னாருக்கு உதவி செஞ்சம் எங்களாலைதான் அவை நல்லாய் இருக்கினம் எண்டு சொல்லுறதிலை ஒரு கெத்து கண்டியளோ. அங்கை இருக்கிறவையும் இந்த கெத்துகளை வைச்சு வந்தவரைக்கும் வறுகினால் என்ன எண்ட ஒரு நோக்கம் சிந்தனையள் இல்லாமல் இல்லை. இந்த கெத்துகள் இருக்கும்வரை ஊரிலையும் இங்கையும் ஆட்டையை போடுறதிலை பிழையில்லை எண்டுதான் எத்துப்படுகிது. ஏனெண்டால் இந்தக் கெத்துத்தான் எல்லாத்தையும் டிசைட் பண்ணுது. இங்கை இருக்கிறவை முதலிலை தாய் தேப்பன் சகோதரங்களை நல்லமாதிரி பாத்தாலே அங்கை அரைவாசி பிரச்சனை இல்லாமல் போகும். ஆனால் இவை என்ன செய்யினம் கூடபிறந்ததுகள் பெத்ததுகள் அல்லாடிக்கொண்டு இருக்க கெத்துக்காய் ஊர் பேர் தெரியாதவைக்கு காசு சேத்து குடுப்பினம். பேந்து குய்யோ முய்யோ எண்டு கூடி கும்மியடிப்பினம். ஆருக்கு என்னத்தை சொல்ல ?


சுறுக்கரின் இண்டையான் அவதானம்


000000000000000000000000000

ஹாய் யூத்ஸ் ,

இண்டைக்கு காத்தாலை பேப்பர் படிச்சு கொண்டிருக்கேக்கை ஒரு நியூஸ் எத்துபட்டுது. சுறுக்கருக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்தீட்டுது கண்டியளோ. மாற்றர் என்னவெண்டால் பனம் கள்ளுக்கு தடையாம். எனெக்கெண்டால் உது உந்த மேல்சாதிகாறர், தலித்துகளை அடக்கிறதுக்கு கொண்டுவந்த பிளான் எண்டது கிளியறாய் தெரியுது. பாரிசிலை உதுக்கெண்டே ஒரு கூட்டம் நடத்தி உந்த மேல்சாதி காறரை கிழி கிழியெண்டு கிழிக்க பிளான் பண்ணியிருக்கிறன். உதை இந்த சுறுக்கன் சும்மா விடமாட்டான் கண்டியளோ.

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000

ஹாய் பிறதேர்ஸ் அண்ட் சிஸ்ரேர்ஸ் ,

வந்த விசயத்தை சுருக்கெண்டு குத்திற மாதிரியும் சுறுக்காயும் சொல்லிப்போட்டு போறன். இண்டைக்கு சுறுக்கருக்கு டிம் எண்டால் டிம் டிம்முக்கு மேலை டிம் ஆனால் கதை கதையாத்தான் இருக்கும் கண்டியளோ.. தான் ஒரு உயர் குடி பிறப்பிலை பிறந்து கொண்டு லண்டனிலை இருந்த செத்தபாம்பை பிடிச்சு உன்ரை பேரிலை இருக்கிற ஐயர் எண்ட பேரை எடு.............. ஐயர் எண்ட பேரை எடு எண்டு சலங்கை கட்டி கம்பெடுத்து சிலம்பாட்டம் போடிற பிரான்ஸ் போராளி இலக்கியமொண்டு தான் ஒரு கிழமைக்கு முன்னாலை தன்ரை கதைக்காக அதே ஐயர் குடும்பத்திட்டை ( எஸ் எஸ் வாசனையும் அவற்றை மோன் பாலசுப்பிரமனியத்தையும் நான் சொல்லி உங்களுக்கு விளங்க தேவையில்லை ) வாங்கின விருதை மூஞ்சையை பொத்தி அடிச்ச மாதிரி திருப்பி குடுத்து போட்டு தையா தக்கா போட்டால் நல்லாயிருக்கும். ஆனால் உந்த பம்மாத்துகள் குடுக்க மாட்டினம். குடிசனங்களே!!! இப்பவுமே உந்த பம்மாத்துகளை நம்பிக்கொண்டு இருக்குறியள் ?

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000000000000000

மெய்யே பிள்ளையள்............... ஐயம்பிள்ளை ஒரு விசையம் வெள்ளேந்தியாய் தான் கேக்கிறார் கோபிக்கப்படாது பாருங்கோ. எங்கடை ஊரிலை இருந்த கதிரவேற்பிள்ளையர், சிதம்பரப்பிள்ளையர், ஐயம்பிள்ளையர், தம்பிப்பிள்ளையர், தேவன் எண்டு கனபேர் இருந்தவை. என்ரை கண்ணுக்கு முன்னாலை இவையை பாத்தனான். ஆனால் பாருங்கோ இப்ப கொஞ்சநாளாய் எனக்கொரு ஐமிச்சம் இவை என்ன சாதியெண்டு. ஏனெண்டால் பிள்ளைமார் எண்டு ஒரு சாதியும் சரி தேவன் எண்ட சாதியும் நான் ஊரிலை கேள்விப்படேலை கண்டியளோ. தாய் தேப்பன் ஆசையாய் வைச்ச பேருக்கை ஏதாவது சாதி எண்டது ஒண்டு இருக்கோ எண்டு எனக்கு ஒருக்கால் எக்ஸ்பிளிக்கே பண்ணுறியளே பிள்ளையள்? முக்கியமான கொண்டிசன் ஐயம்பிள்ளை சாதிபாக்கிறார் எண்டு என்னோடை கொழுத்தாடு பிடிக்கப்படாது.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை

0000000000000000000000000000000

குவாலிபிக்கேசனும் சுறுக்கரும்

எனக்கு கண்டியளோ இந்த ஏ எல் மூண்டு நாலுதரம் எடுத்து விட்ட மாட்டை பிடிக்கிறன் பார் எண்டு தன்னையும் ஏமாத்தி சுத்தி இருக்கிறவனையும் லூசுப் பட்டம் கட்டிறவங்களை கண்ணிலை காட்டேலாது. கேட்டால் கம்பசிலை போய் கெத்தாய் படிச்சால்த்தான் வேலை எடுக்கலாம் எண்டுவாங்கள் இப்பத்தையான் கைய்ஸ். முந்தி சுறுட்டு சுத்துறதுக்கு எந்த குவாலிபிக்கேசனும் கேக்கேலை. சரி அதை விடுவம். இப்ப ஓட்டோ ஓடுறதுக்கும் சாப்பாட்டு கடையிலை சாப்பாடு குடுக்கிறதுக்கும் எந்த குவாலிபிக்கேசன் கேக்கினம்? பாங்கிலை கிளாக்கர் வேலையிலை சேந்து படிச்சு படிச்சு இண்டைக்கு டபுள் எக்கவுண்டனாய் இருக்கிறவங்களையும் என்னாலை உங்களுக்கு காட்டேலும். முதல் தோட்டத்திலை வேலை செய்து கொண்டுதான் சனம் கொர்ணமேந்திலை கோழி மேச்சது இப்ப பட்டியிலை நிக்கிற உழுகிற மாடு இப்பிடித்தான் உழுவன் எண்டால் ஆர் என்ன செய்யேலும் ராசா ?

சுறுக்கரின் அவதானம்


000000000000000000000000000000000

ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ்,

இந்த வரியம் சுறுக்கற்றை முதல் புசத்தல் இது. காலங்காத்தாலை கோச்சியிலை போற நேரம் பாத்து என்ரை போனுக்கு ஒரு அலேர்ட் மெசேஜ் ஒண்டு வருகுது. நான் கண்டியளோ ரெயினுக்கை உயிர் போனாலும் போன் எடுக்கிறேலை. அவ்வளவு செக்கியுறிட்டி போனுக்கு. தொழில் பாக்கிற இடத்துக்கு கிட்டப்போய் என்ன ஏது எண்டு போனை தடவி பாத்தன். என்ரை பெறாமோன் ஒருத்தன் ஏ எல் எடுத்தவன். தான் ரெண்டு ஏ ரெண்டு சீ யும் எடுத்திருகிறன் சித்தப்பு எண்டு கிடந்துது. நல்ல விசயம், சந்தோசமாய்தான் கிடக்கு. ஆனால் கண்டியளோ எனக்கு உந்த எங்கடை நாட்டு ஏ எல் படிப்பு கொண்டிசனுகள் அவ்வளவு திறுத்தியாய் இல்லை. கிட்ட முட்ட 3இலை இருந்து 4 வரியம் ஒருத்தன்ரை சீவியத்தை முடிக்கிற சாமான் உது. அதுக்கு பிறகுதான் பெடி கம்பசுக்கு போகலாமோ இல்லையோ எண்டு தெரியும். அதுக்கை சறுக்கி என்னமொருக்கால் எடுத்து பாத்தால் என்ன எண்டு ஒரு அருட்டல் வரும். பேந்தும் ஒரு ரெண்டு வரியம் பேந்து அதை பாத்தால் ஒரெப்பன் முன்னுக்கு நிப்பினம். இந்தக்காலத்துக்குள்ளை அவனவன் கிடைக்கிற வேலைக்கு போனால் அந்த வேலையளிலை எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். இந்த காலத்திலை படிப்பு ஒரு பக்க சப்போர்ட்டே ஒழிய அதுதான் மெயின் மாற்றர் எண்டு இல்லை. வேலை எக்ஸ்பீரியன்ஸ் தான் ஒருத்தனை முன்னுக்கு எழுப்பி விடும். சுறுக்கரை பொலிசி என்னவெண்டால், படிக்கிறது எண்டது ஆக்களுக்கு முன்னாலை அன்பாய் பண்பாய் கதைக்கதெரிய வேணும், மற்றவன் பினாட்டு அடையாமல் வாழ்கையை படிக்கவேணும். இவ்வளவும் இருந்தால் காணும்.

சுறுககரும் ஒரே ஒருக்கால்த்தான் ஏ எல் எடுத்தார். ரெண்டு பீ யும் ரெண்டு சீ யும் கிடைச்சுது. அதோடை பரிசுகெட்ட ஊருக்கு நடையை கட்டினவர்தான். இண்டைக்கு பேராய் புகழாய் கொட்டிலிலை குந்தி கொண்டு புசத்தல் எல்லாம் செய்யிறார். ஆனால் கண்டியளோ இதெல்லாம் என்ரை பெறாமோனுக்கு எழுதேலை.. இருந்தாப்போலை இண்டைக்கு என்ரை ஏ எல் படிப்பு நினைப்புகள் வந்துட்டுது அவ்வளவுதான்.

சுருக்கு சுறுக்கர்

0000000000000000000000000000000000

சுறுக்கரை பத்தி ஐயம்பிள்ளையோ இல்லை கொட்டில் கூட்டாளியளோ கதைச்சால் அது மக்கள் கருத்து கண்டியளோ. அட் த சேம் ரைம் சுறுக்கரை பத்தி சுறுக்கரே கதைச்சால் அது விளம்பரம் பாருங்கோ .

000000000000000000000

கூட்டாளியள் தினம்

ஹாய் ............வீ ஆர் சுறுக்ஸ் அண்ட் ஐமிச்சம் ஐயம்பிள்ளை
ப்றொம் கள்ளுக்கொட்டில். இண்டைக்கு காத்தாலை மூஞ்சி புத்தகத்தை துறந்தால் கூட்டாளியள் தினம் என்னமாதிரி உங்கடை பிளான் எண்டு மார்க் கேட்டிருந்தான். எனெக்கெண்டால் உப்புடியானதுகளை கொண்டுவாறதே பத்திற வேலையள் கண்டியளோ. ஏனெண்டால் கூட்டாளியளுக்கு எப்பவுமே ஹப்பிதான் இண்டைக்குத்தான் வித்தாரம் பிடிக்கிறம் எண்டுறது கொஞ்சம் கூட நல்லாயில்லை .

எனக்கு இந்த மூஞ்சி புத்தகத்தாலை திறம் திறமானதங்கப்பவுனுகள் கிடைச்சிருக்கிறாங்கள். ஆரும் என்னோடை கொழுத்தாடு பிடிக்கிறேலை. சிலநேரத்திலை இசக்குப்பிசக்காய் பிடிச்சாலும் அதிலையே கைதந்து போட்டு போவங்கள். இல்லை லாச்சப்பலிலை ஓர் ரீ யோடையும் வடையோடையும் ஒக்கம மாற்றார் ஓவர்.

உப்பிடித்தான் நேற்றும் ஒரு கூட்டாளியோடை கொழுவி கடைசியாய் ஒரு வரியிலை என்ரை நெஞ்சை நக்கிப்போட்டான். கூட்டாளியள் எண்டால் இப்படித்தான் இருக்கவேணும். கூட்டாளியளோடை எதுவும் விட்டுவீதியாய் கதைக்கலாம் .

ஒருத்தன் கூட்டாளியாய் வரப்போறன் எண்டு கேட்டால் அவனைப்பத்தி தெரிஞ்சுதானே சேக்கிறம். பேந்து கொஞ்சநாளையாலை இன்னஇன்னாரை தூக்கிறம் இல்லை இத்தினை பேரை தூக்கினம் எண்டு பிலிம் காட்டிறது அழுகல் பழக்கம் கண்டியளோ. என்னையும் ஒண்டு ரெண்டுபேர் தூக்கினவைதான். அவை கூட்டாளி எண்டதுக்கு மீனிங் தெரியாதவை. ஒருத்தன் எழுதிற கருத்துக்குத்தான் கருத்தே ஒழிய கூட்டாளிக்கில்லை எண்டதை விளங்கிறேலை ரெண்டையும் போட்டு குழப்பிறது கொஞ்சப்பெரின்ரை வேலை.அதாலையும் இந்த தூக்கலுகள் நடக்குது. என்ரை சீவயத்திலை எல்லாமே கூட்டாளியள்தான். மூஞ்சி புத்தகத்திலை கனக்க மாற்றுகள் இருக்கு. அதை சரியாய் பாவிச்சால் கூட்டாளியள் எப்பவும் நிலைச்சு நிப்பாங்கள். அதாலை இண்டைக்கு எண்டு இல்லாமல் எப்பவும் நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கவேணும் சொல்லிப்போட்டன். இத்துடன் எங்கள் புசத்தல்கள் முடிகின்றன .

சுருக்கு சுறுக்கர் அண்ட் ஐமிச்சம் ஐயம்பிள்ளை


February 09, 2016

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே