Skip to main content

நாங்களும் மகப்பேறும்.




கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் (IN VITRO FERTILIZATION ,-IVF) குழந்தை முறையே ஆகும்.

முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPILE BABY) (இதற்கு எனக்கு சரியான தமிழ் தெரியவில்லை) பெற்றுக்கொள்ள முடியும்.

குறைகளாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணுவும் செயற்கைமுறையில் கருத்தரிக்கப்பட்டு தாயின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை உருவாகுவதில் பிரச்சனைகள் இல்லை.மாறாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணவும் வங்கிகளில்(SPERM BANK) பெறப்படும் பொழுது தான் பிரச்சனையே உருவாகின்றது.பரம்பரை அலகுகளை கடத்தவது குரோசோம்கள் என்பது எல்லோருக்கும் தேரிந்த விடையம்.வங்கிகளில் இருந்து பெறப்படும் பொழுது அம்மா அப்பா பக்கத்து குணாம்சங்கள் எதுவுமே இல்லாது குழந்தை பிறக்கின்றது.மேலும் உயிரணு கொடுத்தவரது பௌதீகரீதியலான விபரங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருக்கும்.வங்கியில் உயிரணுவைப் பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்கும்பொழுது, மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத பரம்பரைஅலகு நோய்கள்(GENETIC DECICES) , உயிர் கொல்லி நோயான 0+[ (HIV 0+ ) (எயிட்ஸ்) போன்ற நோய்கள் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு கடத்தப்பட பெருமளவு வாய்புகள் உள்ளன.மேலும் குழந்தை வளர்ந்து சட்டச்சிக்கல்களை சந்திக்கும் பொழுது மரபணு பரிசோதனைக்கு (DNA TEST ) உட்படுத்தப் பட்டால் பாரிய உளவியல் தாக்கத்தைப்பெறுகின்றது .இவை பற்ரிய போதிய அறிவு எம்மவரிடையே போதிய அளவு இல்லமை ஒரு பெரிய குறைபாடு. 

அண்மைக் காலங்களில் எமது மக்கள் தமிழகத்தில் உள்ள மகப்பேற்று மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சைளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணிகளாக தாம் வாளுகின்ற நாடுகளில் உள்ள மொழிகளை சரளமக கதைக்க முடியாத நிலமையே காணப்படுகின்றது.இந்தத் தம்பதிளது ஆசைகளை மூலதனமாக வைத்து பணம் பண்ணும் பல மகப்பேற்று மருத்துவமனைகள் தமிழத்தில் களான்கள் போல் உருவாகுவதைக் காணக்கின்றோம்.நாங்கள் கஸ்ரப் பட்டு உழைத்த யூரோக்களும் டொலர்களும் இவர்களுக்குப் போவது விமர்சனத்திற்குரிய விடையம்.இதற்குத் தீர்வே இல்லயா என்ற கேள்வி வருவது இயல்பே.முதலாவது திர்வாக இங்குள்ள மகப்பேறு மருத்துவ நிபுணர்களது ஆலோசனைகளையும் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தல்(மொழியறிவு இல்லாதவர்களுக்கு விரும்பினால் மொழிபெயர்பளர்களை மருத்தவ மனைகளே ஏற்பாடு செய்கின்றன).மேலும் தம்பதிகளுக்கு மூன்று முறைகள் சிகிச்சை பெறுவதற்கு முற்ரிலும் இலவசமாக அந்தந்தநாடுகளது மருத்துவக் காப்புறதிகள்(MEDICAL CARE) அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றன.இரண்டாவது தீர்வாக தாயகத்தில் பல பிஞ்சுகள் அம்மா அப்பாவை இளந்து நடுவீதியில் நிற்கின்றார்கள் இவர்களை முறையாக சட்டப்படி தத்து எடுத்து வளர்த்தல்.இது ஒரு சரியான தீர்வாக எனக்குப்படுகின்றது.இருந்தாலும் பெற்ற பிள்ளைபோல வருமா என்ற கேள்வி வருவது இயல்பே இது ஓர் பழமைவாதக் கருத்தாகும்.ஏனெனில் இன்றய நட்களில் பெற்ற குழந்தைகளே அம்மா அப்பாக்களின் கடைசிக்காலங்களல் சரிவரப்பர்காத நிலைகளை நங்கள் கண்கூடாகப் பார்கின்றோம். ஆக தத்துப் பிள்ளைகள் எங்களைப் பார்பார்களா என்பது இல்லை கேள்வி மாறாக நாம் இந்தப் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்பதே எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுக் கேள்வியாகும்.



 March 24, 2011

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம