Skip to main content

நெருடிய நெருஞ்சி – 03



"எதற்கும் பயப்பிடாமல் துணிவாய் வாங்கோ நான் இருக்கிறன்".

எனக்கோ கைகால் வேர்த்தது. பார்தீபனுக்குப் பின் மாலையுடன் செல்லும் வடிவேலு போல மனைவியைப் பின்தொடர்ந்தேன் குடிவரவுப் பகுதியில் நாங்கள் நின்றோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னால் நின்றேன். எங்கள் முறை வந்தது. மனைவி கடவுச்சீட்டை நீட்டினா. மேலும் கீழும் பார்த்துவிட்டு வருகைக்கு முத்திரையை அடித்துக் கொடுத்தார் அந்த அதிகாரி. எனது முறை எனது கடவுச்சீட்டை நீட்டினேன். காலைவணக்கம் சொன்னார், பதிலுக்கு நானும் சொல்லி வைத்தேன். வடிவாகப் பார்த்துவிட்டு,

"முதன் முறையாக இலங்கை வருகின்றீர்களா"?

"ஆம்".

"இலங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களை வரவேற்பதில் மகிழ்சி அடைகின்றோம்".

என்னை என்னால் நம்பமுடியவில்லை. நான் காணுவது கனவா இதன்பின்னால் ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?. ஒரு புன்னகையை அவரிற்கு பொதுவாக வளங்கினேன். வருகையைப் பதிந்து புன்னகையுடன் எனது கடவுச்சீட்டைத் திருப்பித் தந்தார் அந்த அதிகாரி. இனித்தானே அடுத்த கண்டம், மனைவி சொல்படி அவாவைப் பின்தொடர்ந்தேன்.

"நான் எதிர்பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை, இந்தமுறை ஒருத்தரையும் காணேல அதிசயமாய் கிடக்கு"

மனைவி சிரிப்புடன் என்னுடன் சேர்ந்து நடந்தா.

"என்ன காணேல"?

"குற்றப்புலனாய்வுத்துறையும் தலையாட்டியும் தான்". "என்னெண்டு உமக்குத் தெரியும்"?

"அது ரெக்னிக் உங்களுக்குத் தெரியாது".

மனைவி தன்னுடைய பதவியைக் காட்டத் தொடங்கி விட்டா. அந்தக் காலை வேளை எங்களைச் சுமந்து பம்பலப்பிட்டி நோக்கி விரைந்தது ரக்சி.

000000000000000000000

கொழும்பு நிறையவே மாறியிருந்தது. ஏர்ரெல் விளம்பரத் தட்டிகளும், போரின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் விளம்பரத் தட்டிகளும் அதில் மகிந்தரின் ட்றகுல்லாச் சிரிப்பும் மனதைப் பிசைந்தன. ஏதும் அறியா அப்பாவிகளில் தூசி விளாது போரை எதிர்கொண்ட நாங்கள் எங்கே? இந்த ஐந்தறிவு மகிந்தா எங்கே? 25க்கும் அதிகமான கூட்டாளிகளுன் சேர்ந்து பத்துடன் பதினொன்றாக இருந்த மகிந்தா குலைப்பது தான் கலிகாலமோ? ரக்சி களனிப் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டருந்தது. களனி அமதியாக ஓடிக் கொண்டிருந்தது. உன்னில் தானே ஜேவிபி இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் மிதந்தார்கள். நாற்காலி இனபேதம் பார்பதில்லையோ? எல்லோரும் தானே இந்த உழுத்த நாட்டின் தலைவிதியை மாற்ற போராடினோம். ரோகண விஜயவேரவின் காலத்துடன் ஜேவிபி எலும்புத்துண்டுகளுக்குத் தாளம் போட நாங்கள் தானே முழுமூச்சாக நின்றோம். ஏன் எங்கள் நியாயத்தைபுரிகின்றார்கள் இல்லை?

ரக்சி மனைவியின் நண்பி வீட்டின் முன்பு நின்றது. நண்பிகளின் கலகலப்பான உரையாடல்களில் மனம் ஒட்டாது தனிமையை நாடியது. சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டு பல்கனிக்கு வந்தேன். காலை வேளை இளஞ் சூரியன் சுட்டது. எதிரே இந்து சமுத்திரம் அமைதியாக விரிந்து கிடந்தது. தேமாப்பூவும் வண்ணக் குரோட்டன்களும் அலரிப்பூக்களும், துள்ளித் திரிந்த அணில் பிள்ளைகளும் மனதை வருடின. மனைவியின் நண்பி கோப்பி சுடச்சுடக் கொண்டுவந்து தந்தா. கோப்பியைக் குடித்தவாறே சிகரட்டைப் பற்றவைத்து புகையை ஆழ இழுத்தேன். பலர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது தெளிவாகத் தெரிந்தது. கடலில் தூரத்தே சரக்குக் கப்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கரையில் கால்வாசி பச்சை நிறமாக இருந்தது. இதேபோல ஒரு காலையில் தானே கடல் தாண்டவம் ஆடியது. எவ்வளவு இளப்புகள்? அதிலும் கிழக்கில் மனிதத்தைத் தானே காட்டினோம்? மனிதம் இவர்களுக்குப் புரியாதோ? சிங்க வம்சத்திடம் மனிதத்தை எதிர்பார்த்தது எங்கள் பிளையோ?

வீதியில் பெண்கள் கப்பாயம் கட்டி அலவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். வெசாக் பண்டிகையின் வெளிச்சக் கூடுகள் வரிசை கட்டி நின்றன. எனக்கு பிரான்ஸில் அரபுக்களின் நிலைப்பாடும் சார்க்கோசியின் நடவடிக்கைகளும் நினைவுக்கு வந்தன. இவைகள் மற்றயவர்களின் மனதைப் புண்படுத்துமே ஒழிய வளப்படுத்தாது.

இரவு 6 மணியாகியது மனைவி யாழ்பாணத்திற்கு போக சொகுசு பஸ்சில் பதிவு செய்து வைத்திருந்தா. நாங்கள் யாழ்ப்பணத்தை நோக்கி புறப்பட தயாரானோம்.






தொடரும்

June 01, 2011

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...