Skip to main content

நெருடிய நெருஞ்சி-11









பஸ்சின் ஜன்னலின் ஊடாக உப்புக்காற்று கமறியது.தூரத்தே வெண்பரப்புகளாக உப்பு விளைந்திருந்தது. உப்பை எடுக்க பாத்தி பாத்தியாக கட்டியிருந்தார்கள். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனக்கு அவை இரத்தமாகத் தெரிந்தது. கண்ணைக்கசக்கி விட்டுப் பார்த்தேன்.அந்த நீர் குட்டையில் நாரைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. எங்களையும் தானே பல நாரைகள் மீன்பிடித்தன. பஸ் ஆனையிறவு படைமுகாமை நெருங்கியது தெரிந்தது. வீதியின் இரண்டுபக்கமும் உயர்த காவல்கோபுரங்கள் இருந்தன, அதில் சிங்கங்கள் குந்தியிருந்தன. படைமுகாம் பரந்து விரிந்திருந்தது. ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். இந்தப் படைமுகாமின் பாதுகாப்பு அரண்களைப் பற்றி உலகின் இராணுவ வல்லுனர்கள் சிலாகித்துப் பேசி, ஓர் மரபுவான்படைமூலமே இந்த படைமுகாமை தகர்க்கமுடியும் என்று பெரிய சான்றிதளே கொடுத்திருந்தார்கள்.ஆனால் நாங்கள் சரித்திரத்தையல்லவா மாற்றியமைத்தோம். இதே வீதியால்தானே துட்டகைமுனுக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். உலகின் இரண்டாவது பெரிய தரையிறக்கத்தையல்லா செய்து வெற்றிக்கொடி நாட்டினோம். குடாரப்புத் தரையிறக்கம் பல இராணுவல்லுனர்களை பொறிகலங்க வைத்தது.ஆம்........ இரண்டாம் உலகப்போரில் நடை பெற்ற நோர்மண்டி தரையிறக்கத்தின் பின்னர் வந்த இரண்டாவது தரையிறக்கமல்லவா?? ஒரே இரவில் அதிகப்படியான போராளிகளை தரையிறக்கி சிங்கங்களையும் அதன் கூட்டாளிகளையும் கலங்கடித்த தரையிறக்கமல்லவா !!!! சிங்களமும் குப்பற வீழ்ந்தது. நாங்கள் அதிகம் பேசவில்லை, செய்து விட்டு அடுத்தவேலையைப் பார்த்தோம். ஆனால், இப்போ காதுபிய்யுமளவுக்கு ஓரே இரைச்சல்.மீண்டும் குடிமனைகள் வரத்தொடங்கின.பஸ் வேகமெடுத்து வீதியின் இரண்டு பக்கமும் தென்னைமரங்கள் நின்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், மேலே பலகருகி மொட்டையாக நின்றன.தென்னைகளை வைத்து பளை வரத்தொடங்கிவிட்டது என்று அனுமானித்தேன். தூரத்தே ஒருசிலர் வீழ்ந்த தென்னை ஓலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் பனை வடலி ஓலைகளால் நேர்த்தியாக வேலி போட்டிருந்தார்கள். பனைகளும் பல கற்பிளந்து நின்றன. புதிய வடலிகளும், தென்னம்பிள்ளைகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால், இவைகள் வளர்ந்து எப்போது பலனைத் தரப்போகின்றன?? மனது வலித்தது. சிங்கம் பாத்துப் பாத்தல்லவா எழும்பமுடியாதவாறு கடித்து குதறியுள்ளது. பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றி இறக்கி போய்கொண்டிருந்தது. பாதையின் அருகே மீண்டும் பழைய புகையிரதப்பாதை இணைந்து வந்து கொண்டிருந்தது. பற்றைகளுடன் மேட்டுப் புட்டியாக வீதியுடன் ஒட்டிவந்தது புகையிரதப் பாதையை திருத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தே வீதியின் இரண்டுபக்கமும் உயர்ந்த காவற்கோபுரங்களும், மண் அணைகளும் தெரிந்தன. அவை என்ன என்று அப்பாவியாக மனவியிடம் கேட்டேன். முகமாலை இராணுவப்படை தளத்தை நெருங்குகின்றோம் என்றா. என் முகத்தில் கலவரரேகை படர்ந்தது. பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச்சென்றது.





July 15, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம