Skip to main content

நெருடிய நெருஞ்சி-11









பஸ்சின் ஜன்னலின் ஊடாக உப்புக்காற்று கமறியது.தூரத்தே வெண்பரப்புகளாக உப்பு விளைந்திருந்தது. உப்பை எடுக்க பாத்தி பாத்தியாக கட்டியிருந்தார்கள். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனக்கு அவை இரத்தமாகத் தெரிந்தது. கண்ணைக்கசக்கி விட்டுப் பார்த்தேன்.அந்த நீர் குட்டையில் நாரைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. எங்களையும் தானே பல நாரைகள் மீன்பிடித்தன. பஸ் ஆனையிறவு படைமுகாமை நெருங்கியது தெரிந்தது. வீதியின் இரண்டுபக்கமும் உயர்த காவல்கோபுரங்கள் இருந்தன, அதில் சிங்கங்கள் குந்தியிருந்தன. படைமுகாம் பரந்து விரிந்திருந்தது. ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். இந்தப் படைமுகாமின் பாதுகாப்பு அரண்களைப் பற்றி உலகின் இராணுவ வல்லுனர்கள் சிலாகித்துப் பேசி, ஓர் மரபுவான்படைமூலமே இந்த படைமுகாமை தகர்க்கமுடியும் என்று பெரிய சான்றிதளே கொடுத்திருந்தார்கள்.ஆனால் நாங்கள் சரித்திரத்தையல்லவா மாற்றியமைத்தோம். இதே வீதியால்தானே துட்டகைமுனுக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். உலகின் இரண்டாவது பெரிய தரையிறக்கத்தையல்லா செய்து வெற்றிக்கொடி நாட்டினோம். குடாரப்புத் தரையிறக்கம் பல இராணுவல்லுனர்களை பொறிகலங்க வைத்தது.ஆம்........ இரண்டாம் உலகப்போரில் நடை பெற்ற நோர்மண்டி தரையிறக்கத்தின் பின்னர் வந்த இரண்டாவது தரையிறக்கமல்லவா?? ஒரே இரவில் அதிகப்படியான போராளிகளை தரையிறக்கி சிங்கங்களையும் அதன் கூட்டாளிகளையும் கலங்கடித்த தரையிறக்கமல்லவா !!!! சிங்களமும் குப்பற வீழ்ந்தது. நாங்கள் அதிகம் பேசவில்லை, செய்து விட்டு அடுத்தவேலையைப் பார்த்தோம். ஆனால், இப்போ காதுபிய்யுமளவுக்கு ஓரே இரைச்சல்.மீண்டும் குடிமனைகள் வரத்தொடங்கின.பஸ் வேகமெடுத்து வீதியின் இரண்டு பக்கமும் தென்னைமரங்கள் நின்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், மேலே பலகருகி மொட்டையாக நின்றன.தென்னைகளை வைத்து பளை வரத்தொடங்கிவிட்டது என்று அனுமானித்தேன். தூரத்தே ஒருசிலர் வீழ்ந்த தென்னை ஓலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் பனை வடலி ஓலைகளால் நேர்த்தியாக வேலி போட்டிருந்தார்கள். பனைகளும் பல கற்பிளந்து நின்றன. புதிய வடலிகளும், தென்னம்பிள்ளைகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால், இவைகள் வளர்ந்து எப்போது பலனைத் தரப்போகின்றன?? மனது வலித்தது. சிங்கம் பாத்துப் பாத்தல்லவா எழும்பமுடியாதவாறு கடித்து குதறியுள்ளது. பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றி இறக்கி போய்கொண்டிருந்தது. பாதையின் அருகே மீண்டும் பழைய புகையிரதப்பாதை இணைந்து வந்து கொண்டிருந்தது. பற்றைகளுடன் மேட்டுப் புட்டியாக வீதியுடன் ஒட்டிவந்தது புகையிரதப் பாதையை திருத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தே வீதியின் இரண்டுபக்கமும் உயர்ந்த காவற்கோபுரங்களும், மண் அணைகளும் தெரிந்தன. அவை என்ன என்று அப்பாவியாக மனவியிடம் கேட்டேன். முகமாலை இராணுவப்படை தளத்தை நெருங்குகின்றோம் என்றா. என் முகத்தில் கலவரரேகை படர்ந்தது. பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச்சென்றது.





July 15, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...