Skip to main content

கொக்கும் கெளுத்திமீனும் .





பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் .

பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி என்னும் கோரப் பிடியில் சிக்கித் தவித்தன பொன்னேரிக் கிராமத்தின் பயிர்பச்சைகளும் வாவியும் பொய்த்த மழையினால் படிப்படியாக சோபையிழந்தன . ஆனாலும் வாவியில் தங்களுக்கு வாவியில் ஏதாவது இரை கிடைக்காதா என்ற ஆவலில் கொக்குகளும் நாரைகளும் தினமும் வந்து போய்க்கொண்டிருந்தன .

ஒருநாள் மாலைவேளை வாவியின் கரையில் கொக்குகளும் நாரைகளும் தங்களுக்கு இரை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் கவலையுடனும் உட்கார்ந்திருந்தன . இதே நேரம் வாவியின் அடியில் சேற்றில் ஒழிந்திருந்த கெளுத்தி மீன் ஒன்று மெதுவாகக் காற்று வாங்கும் நோக்குடன் நீர் மட்டத்திற்குப் புறப்பட்டது . வாவியின் கரையில் கருமமே கண்ணாயிருந்த ஒரு கொக்கின் கண்ணில் அந்தக் கெளுத்தி மீன் பட்டது . எல்லோரையும் முந்திக்கொண்டு அந்தக் கொக்கு வாவியில் மூழ்கி கெளுத்திமீனுடன் வானத்தில் ஜிவ் என்று பறந்தது .

பசியுடன் இருந்த மற்றைய கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் அந்தக் கொக்கின் செய்கை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது . கெளுத்தி மீன் பிடித்த கொக்கையும், இரையை கைப்பற்றும் நோக்கிலும் எல்லாக் கொக்குகளும் நாரைகளும் கலைத்துக் கொண்டு பறந்தன . ஏதோ ஓர் உள்உணர்வு தாக்க கொக்கு தனது தலையைத் பின் பக்கமாகத் திருப்பிப் பார்த்தது . ஓர் படையே தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அது கண்டது . ஆனாலும் அந்தக் கொக்கு , எல்லாக் கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் போக்குக் காட்டியவாறே மேலும் விரைவாகப் பறந்தது . ஆனாலும் கொக்கின் பின்னால் வந்த பெரும்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்ப அந்தக்கொக்கு மிகவும் கஸ்ரப்பட வேண்டியதாக இருந்தது .

அப்பொழுது அந்தக் கொக்கிற்கு ஓர் யோசனை தோன்றியது . " நான் இந்தக் கெளுத்தி மீனை வைத்திருப்பதால் தானே இந்தக் கொக்குகளும் நாரைகளும் என்னை விட்டுக் கலைக்கின்றன இதை விட்டுவிட்டால் என்ன ?? " என எண்ணியவாறே அது தனது அலகில் இருந்த கெளுத்தி மீனின் பிடியைத் தளர்த்தியது . கெளுத்தி மீனோ கொக்கின் பிடியில் இருந்து கீழே நோக்கி விழத்தொடங்கியது . அப்பொழுது அந்தக் கொக்கைப் பின்தொடர்ந்த கொக்குகளும் நாரைகளும் , தீடீரென கீழே விழும் கெளுத்திமீனைப் பிடிக்கப் பறந்தன . ஆனால் கெளுத்திமீனைப் பிடித்த அந்தக் கொக்கோ மனநின்மதியாகவும் , சந்தோசமாகவும் பறந்து சென்றது .

நன்றி : நவம்



July 16, 2013

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...