முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தாறன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .
இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை , இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் , எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்றறுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய்து அன்பாய் தந்த சாப்பாடுகள் எல்லாம் மெசின் செய்யிது . இதைப் பாக்கேக்கை எனக்கு கொஞ்சம் குறுக்காலை போன கேள்வியள் வந்து துலைக்கிது பாருங்கோ . இந்த மெசினுகள் இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த மனுசிமார் எண்ட கேள்வி வராதோ ?? எனக்கு அம்மாச்சியாலையும் அம்மாவாலையும் தந்த அன்பு பாசத்தை இந்த மெசினுகள் தருமோ ?? இப்பவே இந்த அலப்பரை விடுகிற மனுசிமார் இந்த மெசினுகளை வாங்கி போட்டு எங்களை என்ன பாடுபடுத்துவாளவை ?? இந்த மெசினாலை எத்தினை பேருக்கு வேலை இல்லாமல் போகிது ?? இப்பிடி கன கேள்வியள் எனக்கு மண்டையுக்கை அடிக்கிது . தாய்குலங்கள் என்னை கடிச்சு குதறாமல் உங்கைடை அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோவன் . அதுகாக சிங்கனுகள் பம்மிறதை விட்டிட்டு சிலுப்பிக்கொண்டு நீங்களும் உங்கடை பக்கத்து நியாயங்களை சொல்லுங்கோ .
December 23, 2012
Comments
Post a Comment