Skip to main content

நெருடியநெருஞ்சி -26




நாங்கள் புகையிரத நிலையத்தில் நுளைந்தபொழுது அதிக சனக்கூட்டம் இருக்கவில்லை . சின்னத்தான் புகையரதமேடை சீட்டு எடுக்கப்போய் விட்டார். நான் புகையரத நிலையச் சூழலை விடுப்புப் பார்க்கத்தொடங்கினேன். இப்பொழுதும் இராணுவ வாகனங்கள் படையனரை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தன ,அவர்கள் கிராமங்களுக்குப் போவற்கு. சீருடைகளின் பிரசன்னத்தால் ஒருவித இறுக்கமான சூழ்நிலை அங்கு பரவியிருந்தது . இப்பொழுது மக்கள் மெதுமெதுவாக புகையிரத நிலையத்திற்குக் கூட்டம் சேர்த்தார்கள் . நான் சின்னத்தானுடன் , நான் முன்பு தலையிடி போக்கின மூலைத் தேத்தண்ணிக் கடைக்குப் போனேன் . நாங்கள் இருவரும் பச்சைத் தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு சிகரட்டின் முனையைச் சிவப்பாக்கினோம். நான் மீண்டும் என் கண்களால் சுற்றாடலைத் துளாவினேன்.

அந்தப்புகையிரத நிலையம் ஆகப்பெரிதாகவும் இல்லாது , சிறியதாகவும் இல்லாது அடக்கமாக இருந்தது . அங்கே , இப்பொழுதும் அதே வெள்ளைச் சீருடையில் , தலையில் தொப்பியுடன் புகையிரதநிலைய அதிகாரிகளைக் கண்டேன். எங்களை ஆண்ட வெள்ளைகள் தங்கள் நிலையை மாற்றி இரண்டு மூன்று தலைமுறை ஆனாலும் இவர்கள் மட்டும் மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்கள். என்னைச் சுற்றி இரண்டு மூன்று தேத்தண்ணிக்கடைகள் இருந்தன. அதில் எல்லோரும் தேத்தண்ணி குடிக்கும் மும்மரத்தில் இருந்தார்கள். கடைகளின் முன்னால் கதலி , இதரை வாழைக்குலைகளும் , அன்றைய பத்திரிகைகளும் தொங்கின . எனக்குப் பத்திரிகைகளில் மேய விசேடமாக ஒன்றும் இருக்கவில்லை . இறந்ததாகச் சொன்ன புலியை எப்போதும் உயிர்ப்பிக்கின்ற சாரம்சங்களே அதில் தெரிந்தன.அதிலும் உள்ளுக்கை இருந்து சரத் வேறு நல்ல பம்பல் அடிச்சுக் கொண்டிருந்தார். வெளியே இருந்து நெம்பிய சரத்தின் நிலமை இன்று கவலைக்கிடம்.......... இதை , நான் சிங்கள தேசிய இனவாதப் பூதத்தின் அதிஉயர் கோரப்பதிப்பாகவே உணர்ந்தேன். சிங்களக் கிறீஸ்தவ பரம்பரைகளால் ஆளப்பட்ட பௌத்தம் , பின்பு விச ஊசி அடித்துப் பூதமாகி இன்று இரண்டு இனத்தையும் விழுங்கிய நிலையையும் கண்டேன்.எனது விரல் நுனி சுட்ட எரிவினால் எனது சிந்தனை கலைந்தது.நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

மக்கள் கூட்டத்தால் புகையிரத நிலையம் முழி பிதுங்கியது. யாழ்தேவி வருவதற்கான அறிவிப்பு சிங்களத்தில் , தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் தொடங்கியது.எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்ன சொல்கின்றார்கள் ? என்பது போல் மனைவியைப் பார்த்தேன். அவா ஒர் குறுநகையுடன் யாழ்தேவி வரப்போவதாகச் சொன்னா. நாங்கள் எல்லோரும் புகையிரதமேடையில் போய் நின்று கொண்டோம்.எனக்கும் யாழ்தேவிக்குமான உறவு எண்பத்தி நாலுகளுடன் முற்றாகவே அறுந்து விட்டது. நான் இந்தியாவில் படித்த காலங்களில் , விடுமுறைக்கு வந்து யாழ்தேவியில் பயணப்பட்டேன்.அதன்பின்பு இது தான் முதல்தடவையாகையால் யாழ்தேவியைப் பற்றிய எதிர்பார்ப்பால் மண்டை சூடாகியது.

சிறுவயதில் கோண்டாவிலுக்கு அப்பாச்சி வீட்டிற்குப் போனால் , பின்னால் உள்ள தண்டவாளத்தில் காதை வைத்து யாழ்தேவியின் வருகையைக் கேட்டு , தண்டவாளத்தில் ரின்பால் பேணி அல்லது சில்லறைக் காசுக் குற்றியை வைத்து அதன்மேல் யாழ்தேவியை ஓடவிடுவது எங்களுக்கு முக்கியபொழுது போக்கு. அன்றய காலகட்டத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் அந்தஸ்து அடையாளமாக யாழ்தேவியும் தபால் , சேவையுமே பெரிய பங்கு வகித்தன. கோவில் திருவிழாக்களிற்கு வரும் கொழும்ப அரசசேவைக் கனவான்கள் இந்த இரண்டில் ஒன்றில் வந்ததாகப் பீற்றிக்கொள்வார்கள்.பின்பு இதே கனவான்கள் கப்பல்களிலும் , கிளாலியாலும் அல்லாடியது வேறுகதை.

தூரத்தே சிறிது இரைச்சலும் ஒளிப்பொட்டும் தெரிந்தன , மக்கள் திமிறினார்கள். புகையிரத என்ஜின் நிற்கப்போகும் இடத்திற்கு அருகாமையில் ஒரு அதிகாரி கையில் ஓர் ரெனிஸ் மட்டையப் போன்ற ஒரு வளையத்தை வைத்துக்கோண்டு நின்றார். யாழ் தேவி ஹோர்ணை அடித்துக்கொண்டு புகையிரத நிலையத்திற்குள் நுளைந்து கொண்டிருந்தது. அப்பொழுது கையில் வளையத்தை வைத்திருந்தவர் சாகசம் செய்பவர் போல் யாழ்தேவியுடன் ஓடி வளையத்தைக் கொடுத்து வளையத்தை வாங்கிக்கொண்டார். உண்மையில் எனக்கு இதைப்பார்க்க சிரிப்பாக இருந்து. இதுதான் வெள்ளை விசுவாசத்தின் உச்சக்கட்டமோ ? புகையிரதம் நின்றதும் மக்கள் சுழண்டு பொங்கியது எனக்கு எரிச்சலாக இருந்தது. நாங்கள் முற்பதிவு செய்ததால் ஓரமாக நின்று அவர்கள் ஏற வழிவிட்டேன். சின்னத்தான் எங்கள் பயணப்பொதிகளை உள்ளே ஏற்றினார். புகையிரதம் புறப்படத் தயாராக புகையிரத நிலைய அதிகாரி பச்சக் கொடி காட்ட விசில் சத்தம் கேட்டது. இதைப் பரம்பரைகள் கடந்தாலும் விடாப்படியாகச் சம்பிரதாயமாகவே வைத்திருந்தார்கள். நானும் மனைவியும் அத்தான்களிடம் விடைபெற்றுக்கொண்டு எமது இருக்கைகளைத் தேடிப் போனோம்.

அந்த முதல் வகுப்புப் பெட்டி ஓர் சிறய ரக விமானத்திற்குண்டான வசதிகளுடன் இருந்தது. விசாலமான நடைபாதையும் , வசதியான இருக்கைகளுமாக ஐரோப்பியப் புகையிரதங்களை எனக்கு நினைவுபடுத்தியது. மேலே பல மின்விசிறிகள் நாலாபக்கமும் சுழண்டடித்துக் காற்றைத் துப்பிக் கொண்டிருந்தன.எனது வியர்த்த உடம்புக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது. நாங்கள் எமது இருக்கைகளைத் தேடிப்பிடித்து வசதியாக இருந்துகொண்டோம்.

இப்பொழுது யாழ்தேவி வந்ததிசையிலேயே நகரத்தொடங்கயது. நான் சந்தேகத்துடன் மனைவியை நோக்கினேன்.எனது பார்வையைப் புரிந்து கொண்ட மனைவி , ஓமந்தைக்கு பாதைமாறி வருவதற்காகப் போகின்றது என்று சொன்னா.இப்பொழுது யாழ்தேவி ஆடி அசைந்து ஓமந்தை நோக்கி நகர்ந்தது.அருகே இருந்த வீடுகளின் லைற் வெளிச்சங்கள் பொட்டுக்களாகத் தெரிந்தன.எனக்கு ஓமந்தை என்றவுடன் மீண்டும் வியர்த்தது. ஆமியின் தொல்லைகள் இங்கும் இருக்குமோ ? என்று மனம் பலவாறாக அலைபாய்ந்தது. ஓமந்தையை அடைந்த யாழ்தேவி அங்கேயே நின்று சில நிமிடங்களை விழுங்கித் துப்பியது. தூரத்தே படைகள் ஏறுவதும் , இறங்குவதும் மங்கிய ஒளியில் தெரிந்தது. நான் யன்னலினூடக விடுப்புப் பாத்துக்கொண்டிருந்தேன். மீண்டும் யாழ்தேவி மெதுவாக நகர்ந்து வேகமெடுத்தது. வவுனியா மெதுவாக என்னிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது.






தொடரும் 



Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம