Skip to main content

நெருடிய நெருஞ்சி-07




மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்பு இ.போ.சா பஸ்சில் பயணம செய்வதால் ஒரு இனம்புரியாத குறுகுறுப்புக்குள் உள்ளானேன். பஸ்சில் பெரிய மாற்றங்களை என்னால் காணமுடியவில்லை. வவுனியா பஸ்நிலையம் அந்தக்காலை வேளையிலும் பரபரப்புகுப் பஞ்சமில்லாமல் இருந்தது. டறைவர் பஸ்சின் ஹோர்னை அடித்துப் புறப்படுவதை அறிவித்துக் கொண்டிருந்தார். வெளியே ரீ குடிச்சுக் கொண்டு நிண்ட கொண்டக்டர் பஸ்சில் ஏறி விசில் அடிக்க பஸ் வவுனியா பஸ்நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டது. கொண்டக்ரறைப் பார்க்கும் பொழுது எனக்கு பரித்தித்துறை 750 லைனில் எட்வேர்ட் (செல்லப்பேர் மீசை) உடன் வேலை செய்தவரின் ஞாபகம் வந்தது(பெயர் ஞாபகம் இல்லை இங்கு சார்செயில் நகரில் அவரை ஒருமுறை சந்தித்தேன்). எண்ணை தோய்ந்த சுருட்டைத் தலைமயிர், நக்கல் நளினமான கதைகள் என்று பஸ்சைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். தூரத்தே வவுனியா மெல்லமெல்ல மறைந்து கொண்டிருந்தது. பஸ் ஏ9 பாதையில் வேகமெடுத்தது. பஸ் டறைவர் அடிக்கடி காட்டு விலங்குகளைக் கலைக்கப் பாவிக்கும் ஹோர்னை அடித்து கொண்டு பஸ்சை ஓட்டியது எனக்கு ஒருவித எரிச்சலைக் கொண்டு வந்தது. இவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைக் கவனிக்க மாட்டார்களோ? ஆனால் இ.போ.சா பஸ்சில் எனக்குப் பிடித்தது அவர்கள் போடும் பாடல்கள்தான். எப்பொழுதும் 80களில் வந்த பாடல்களைத்தான் போடுவார்கள். இதை முதன்முறையாக 79களில் பரித்தித்துறை 750 லைனில் பஸ்சிற்கு " வசந்தமாளிகை " என்று பெயரிட்டு ஒடினார்கள்." வசந்தமாளிகை " பெயரைப்போல செமி லக்ஸசறி பஸ்சாக ஓடியது. இதைக் கூடுதலாக ஓட்டியவர் எட்வேர்ட் தான். இந்த பஸ்சுக்கென்றே அப்போது ரசிகர் பட்டாளம் இருந்தது. பகல்ப் பொழுதில் ஏ9 பாதையைப் பார்பதால் இரண்டு பக்கமும் தலயைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே வந்தேன். பஸ் தாண்டிக்குளத்தை நெருங்கிக்கண்டிருந்து. பஸ் டைறவர் வலு விண்ணன் தான். ஒற்றைவழிப் பாதையான ஏ9 இல் எதிரே வரும் வாகனங்களுக்கு வேகத்தைக் குறைக்காமலே விலத்திச் சென்றது எனக்கு வியப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது. சிங்கத்தின் கோரப்பற்களின் வடுக்கள் இருபக்கமும் ஆளப்பதிந்து நிலங்களை விகாரப்படுத்தியிருந்தன. பாதையின் இரண்டு பக்கமும் பல அகண்ட குழிகழும் கருகி மொட்டையான மரங்களும, அன்னியப் படைகள் எமது மண்ணைக் கற்பழித்ததிற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. பஸ் இடிக்கிடையே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. அது உத்தியோகத்திற்கப் போவோர்களாலும் பள்ளி மாணவர்களலும் நிறைந்தது. பள்ளிமாணவர்களைப் பார்கும் பொழுது எனக்கு என்னையறியமலேயே எனது கல்லூரி காலம் ஞாபகம் வந்தது. அவர்களின் பாடப்புத்தகங்களை யூனிசெப் புத்தகப் பை நிறைத்திருந்தது. அவர்களின் தோற்றத்தில் பெரிதான மாற்றங்களை காணமுடியவில்லை. நான் கல்லூரிக்குப் போன மாதிரியே, படிய இழுத்த தலைமையிரும் இடையில் திருநீத்துக்குறியமாக இருந்தார்கள். ஒருசிலர் தமது புத்தகப்பைகளை இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் கொடுத்து விட்டு "கெத்தாக" நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது . நாங்கள் விட்ட அதே விளையாட்டு, எனக்கு சிரிப்பாக இருந்தது. பஸ் கொண்டக்ரர் எங்களுக்கு அருகில் பயணச்சீட்டுப் போட வந்தார். எனது மனவி வாயெடுத்த என்னை சுரண்டிவிட்டு

"இரண்டு பரித்தித்துறை " என்றா.

எங்களை நிமிர்ந்து பாத்தவர்,

"கோவிக்க கூடாது எனக்கு தெரிஞ்சு ஒரு பரித்தித்தறை தான் இருக்கு "

எனக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எவ்வளவுதான் சோகங்கள் ரணவலிகள் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் உருளுகின்றது. சிரிப்பைத் தொலைத்த புலத்து மக்கள் நாங்கள் எங்கே? இவர்கள் எங்கே? பஸ் வேகத்தைக் குறைத்தது முன்னும் பின்னும் படைச் சிப்பாய்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் காவல் பாத்துக் களைத்து படைமுகாமக்குத் திரும்புகின்றார்கள். இல்லாத புலிக்குக் காவல் காக்கும் மோடையர்கள். பாதையில் பல இடங்களில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பஸ் பயணிக்க சிரமப்பட்டது. பாதையில் இருபக்கமும் ஒரு கி.மீ க்கு ஒன்றாக பங்கர் சென்றிகளைக் கண்டேன். முதல் முறையாக பங்கரைப் பார்த்த ஆள் நானாகத் தான் இருப்பேன். சதுரமாக தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு மரக்குற்றிகளை வெட்டி அடக்கி , அதில் ஒரு சிறிய சதுர ஓட்டையின் மூலம் வெளிச்சுற்றாடல்களை அவதானித்துக் கொண்டிருந்தான் ஒரு படைவீரன். இந்த வெய்யிலிலும் சீருடையுடன் எப்படி இவர்களால் இந்தக் கிடங்கினுள் பொட்டல் வெளியில் இருக்கமுடிகின்றது? இவர்களும் மனிதர்கள் தானே ? யுத்தம் முடிந்தாலும் இயல்பு வாழ்க்கையை தொடரும் உரிமை மறுக்கப்பட்ட பிறவிகள். பாக்கப் பாவமாக இருந்தாலும் இவர்களது கோரமுகம் கண்டு என்மனம் இறுகியது. பஸ் ஓமந்தையை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே சோதனைச்சாவடி தெரிந்தது. பஸ் மெதுவாகச் சோதனைச் சாவடியில் போய் நின்றது. இந்தமுறை பயமில்லாமல் மனைவியுடன் இறங்கினேன். கொண்டக்ரரும் தன்னைப் பதிய இறங்கினார். நாங்கள் மூவரும் சோதனைச்சாவடி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.





June 19, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...