Skip to main content

நெருடிய நெருஞ்சி - 01






நான் பயணத்தை ஆரம்பிக்க முன்பும் எனக்கு வேலை. நான் ஒரு 4 நட்சத்திர ஹோட்டலில் காலை உணவுப் பிரிவின் முகாமையாளராக வேலை செய்கின்றேன். வளக்கமான காலை பரபரப்புடன் எனது வேலை தொடங்கியது.அன்று பார்த்து எனது உதவியாளர் மருத்துவ விடுமுறை. சரி இன்று நான் துலைந்தேன் என எண்ணியவாறே வேலையை தொடரந்தேன். எனது மனமோ நாளைய பயணத்திலேயே லயித்தது.எவ்வளவு நாள் கனவு,கண்ணீர் இன்னும் 24மணித்தியாலங்கள். மனம் என் சொல் கேடக்கவில்லை. ஹோட்டல் இயக்குனரின் காலை வணக்கம் என்னைக் கலைத்தது. பதில் வணக்கம் சொல்லி விட்டுத் தொடர்ந்தேன். தன்னை வேலை முடிந்தவடன் சந்திக்க முடியுமா என இயக்குனர் கேட்டரர்.மதியம் 1 மணியாகியது இயக்குனரின் ஞபகம் வரவே யோசனையுடன் அவரது அலுவலகம் நோக்கிச் சென்றேன்.அவரது வழக்கமான லொள்ளு தொடங்கியது.

" ராஜன் உங்களுடைய விடுமுறையை எனக்காக தள்ளிப்போடமுடயுமா " எனக்குப் புண்ணில் புளிப்பத்தியது.

" ஏன்"

" உங்களுடைய இடத்திற்கு வர இருப்பவர் கடைசி நேரத்தில் வர முடியது என்று சொல்லி விட்டார்"

கண்கள் சிவக்க ஆளமாக அவரைப் பார்த்தேன்.

" நான் ஒரு மாதத்திற்கு முன்பே முறைப்படி எழுத்து மூலம் கேட்டுப் பெற்றது மாற்றமுடியாது"

" ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்"

" உங்களால் முடிந்ததை செய்யுங்கள்"

நான் விடுமுறையில் செல்வது உங்களுக்குப் பொறாமை, உங்கள் விடுமுறை பிரான்ஸ்சுடன் முடிவது உங்கள் பொறாமையால் தான் உங்கள் அதிகாரத்தைப் பாவக்கின்றீர்கள் என்று வெடித்தேன். கனத்த இதயத்துடன் தொடரூந்தில் வீடு திரும்பினேன். மனமோ கொதிகலனாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? தாங்கள் விடுமுறையில் போகும் பொழுது படம் எடுப்பார்கள். எங்களுக்கு சந்தோசமாக வழியனுப்ப மாட்டார்கள். பொறாமை நிறம் பார்ப்பதில்லையோ?

மனைவியும் வேலையால் வந்தா. இருவருமே உடலால் மிகவும் களைத்து விட்டோம். பயணப் பொதிகளை இறுதிக் கட்டமாக சரி பர்த்து பூட்டிவிட்டு படுக்க இரவு 11 மணியாகி விட்டது. காலை 9 மணிக்குத் தான் விமானம். காலை 6 மணிக்கு விமானநிலையத்தில் நின்றால் போதுமானது. மனம் நிலை கொள்ளாது தவித்தது. மனதிற்கும் நித்திரைக்கும் சண்டை தொடங்கியது. மனைவியிடம் " பிரச்சனை இல்லை தானே எனக்குப் பயமாக இருக்கின்றது", "நீர் அடிக்கடி போறனீர்" , "நான் முதல் தரம்" நித்திரை வரேல. மனைவி என்னைப் பரிதாபமாகப் பரர்த்தாள். ஒண்டும் இல்லை நீங்கள் படுங்கோ. நான் சொன்னான் தானே பிரச்சனையில்லாமல் கூட்டிக்கொண்டு போவன் என்று என்னைப் படுக்க விடுங்கோ. மணியை பரர்த்தேன் அதிகாலை 1 மணியாகியிருந்தது. 100ல் இருந்து பிறவளமாக எண்ணத் தொடங்கினேன், மனம் வெற்றி கொண்டது. காலை 4மணிக்கு எழும்பி குளித்து கோப்பியை இருவருக்கும் போட்டுவிட்டு மனைவியை எழுப்பினேன். விடிந்துவிட்டதா என்றாள். நானோ பரபரத்தேன். விமான நிலயத்திற்கு தொடரூந்தில் போவோம் என்றாள். "ஏன் ரக்சியில் போகலாம்தனே"? இல்லை, இலங்கை பயணத்தில் முதல் அப்பியாசம் உங்களுக்கு முடிவாகவே மனைவி சொன்னாள். எனது வழிகாட்டி மெய்ப்பாதுகாவலரிடம் குழம்பக்கூடாது என்று மனவி சொல்கேட்டு இருவரும் தொடரூந்து நிலயம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். 5 நிமிடத்தல் பரிஸ் சார்ல்ஸ் டு கோல் சர்வதேச விமான நிலயத்தில் நின்றோம். மனம் பரபரத்தது,கோப்பியும் சிகரட்டுமாக நேரத்தை போக்காட்டினேன். மனைவி முறாய்துப் பார்தாள். அவளிற்கு என் நிலமை விளங்கவில்லை, என்னுடைய இடத்தில் அவளை இருத்தனால் விளங்குமோ? மே 4 காலை ஓருவாறு 7.30 மணியாகியது. நான் இம்முறை ஐரோப்பியனாகப் போவதால் குடியகல்வு சுலபமக இருந்தது. நாங்கள் இருவரருமே எமது பயணத்தை யாருக்குமே அறிவிக்கவில்லை. அதிசயாமக எனது சகோதரங்கள் முன் நிற்கவே ஆசைப்பட்டேன். காலை 9.30 ற்கு குவைத் எயார்வேஸ் எம்மைச் சுமந்து ஓடு பாதையில் ஓடி மேலே எழுந்தது.

தொடரும்



May 30, 2011

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...