Skip to main content

நெருடிய நெருஞ்சி - 01






நான் பயணத்தை ஆரம்பிக்க முன்பும் எனக்கு வேலை. நான் ஒரு 4 நட்சத்திர ஹோட்டலில் காலை உணவுப் பிரிவின் முகாமையாளராக வேலை செய்கின்றேன். வளக்கமான காலை பரபரப்புடன் எனது வேலை தொடங்கியது.அன்று பார்த்து எனது உதவியாளர் மருத்துவ விடுமுறை. சரி இன்று நான் துலைந்தேன் என எண்ணியவாறே வேலையை தொடரந்தேன். எனது மனமோ நாளைய பயணத்திலேயே லயித்தது.எவ்வளவு நாள் கனவு,கண்ணீர் இன்னும் 24மணித்தியாலங்கள். மனம் என் சொல் கேடக்கவில்லை. ஹோட்டல் இயக்குனரின் காலை வணக்கம் என்னைக் கலைத்தது. பதில் வணக்கம் சொல்லி விட்டுத் தொடர்ந்தேன். தன்னை வேலை முடிந்தவடன் சந்திக்க முடியுமா என இயக்குனர் கேட்டரர்.மதியம் 1 மணியாகியது இயக்குனரின் ஞபகம் வரவே யோசனையுடன் அவரது அலுவலகம் நோக்கிச் சென்றேன்.அவரது வழக்கமான லொள்ளு தொடங்கியது.

" ராஜன் உங்களுடைய விடுமுறையை எனக்காக தள்ளிப்போடமுடயுமா " எனக்குப் புண்ணில் புளிப்பத்தியது.

" ஏன்"

" உங்களுடைய இடத்திற்கு வர இருப்பவர் கடைசி நேரத்தில் வர முடியது என்று சொல்லி விட்டார்"

கண்கள் சிவக்க ஆளமாக அவரைப் பார்த்தேன்.

" நான் ஒரு மாதத்திற்கு முன்பே முறைப்படி எழுத்து மூலம் கேட்டுப் பெற்றது மாற்றமுடியாது"

" ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்"

" உங்களால் முடிந்ததை செய்யுங்கள்"

நான் விடுமுறையில் செல்வது உங்களுக்குப் பொறாமை, உங்கள் விடுமுறை பிரான்ஸ்சுடன் முடிவது உங்கள் பொறாமையால் தான் உங்கள் அதிகாரத்தைப் பாவக்கின்றீர்கள் என்று வெடித்தேன். கனத்த இதயத்துடன் தொடரூந்தில் வீடு திரும்பினேன். மனமோ கொதிகலனாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? தாங்கள் விடுமுறையில் போகும் பொழுது படம் எடுப்பார்கள். எங்களுக்கு சந்தோசமாக வழியனுப்ப மாட்டார்கள். பொறாமை நிறம் பார்ப்பதில்லையோ?

மனைவியும் வேலையால் வந்தா. இருவருமே உடலால் மிகவும் களைத்து விட்டோம். பயணப் பொதிகளை இறுதிக் கட்டமாக சரி பர்த்து பூட்டிவிட்டு படுக்க இரவு 11 மணியாகி விட்டது. காலை 9 மணிக்குத் தான் விமானம். காலை 6 மணிக்கு விமானநிலையத்தில் நின்றால் போதுமானது. மனம் நிலை கொள்ளாது தவித்தது. மனதிற்கும் நித்திரைக்கும் சண்டை தொடங்கியது. மனைவியிடம் " பிரச்சனை இல்லை தானே எனக்குப் பயமாக இருக்கின்றது", "நீர் அடிக்கடி போறனீர்" , "நான் முதல் தரம்" நித்திரை வரேல. மனைவி என்னைப் பரிதாபமாகப் பரர்த்தாள். ஒண்டும் இல்லை நீங்கள் படுங்கோ. நான் சொன்னான் தானே பிரச்சனையில்லாமல் கூட்டிக்கொண்டு போவன் என்று என்னைப் படுக்க விடுங்கோ. மணியை பரர்த்தேன் அதிகாலை 1 மணியாகியிருந்தது. 100ல் இருந்து பிறவளமாக எண்ணத் தொடங்கினேன், மனம் வெற்றி கொண்டது. காலை 4மணிக்கு எழும்பி குளித்து கோப்பியை இருவருக்கும் போட்டுவிட்டு மனைவியை எழுப்பினேன். விடிந்துவிட்டதா என்றாள். நானோ பரபரத்தேன். விமான நிலயத்திற்கு தொடரூந்தில் போவோம் என்றாள். "ஏன் ரக்சியில் போகலாம்தனே"? இல்லை, இலங்கை பயணத்தில் முதல் அப்பியாசம் உங்களுக்கு முடிவாகவே மனைவி சொன்னாள். எனது வழிகாட்டி மெய்ப்பாதுகாவலரிடம் குழம்பக்கூடாது என்று மனவி சொல்கேட்டு இருவரும் தொடரூந்து நிலயம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். 5 நிமிடத்தல் பரிஸ் சார்ல்ஸ் டு கோல் சர்வதேச விமான நிலயத்தில் நின்றோம். மனம் பரபரத்தது,கோப்பியும் சிகரட்டுமாக நேரத்தை போக்காட்டினேன். மனைவி முறாய்துப் பார்தாள். அவளிற்கு என் நிலமை விளங்கவில்லை, என்னுடைய இடத்தில் அவளை இருத்தனால் விளங்குமோ? மே 4 காலை ஓருவாறு 7.30 மணியாகியது. நான் இம்முறை ஐரோப்பியனாகப் போவதால் குடியகல்வு சுலபமக இருந்தது. நாங்கள் இருவரருமே எமது பயணத்தை யாருக்குமே அறிவிக்கவில்லை. அதிசயாமக எனது சகோதரங்கள் முன் நிற்கவே ஆசைப்பட்டேன். காலை 9.30 ற்கு குவைத் எயார்வேஸ் எம்மைச் சுமந்து ஓடு பாதையில் ஓடி மேலே எழுந்தது.

தொடரும்



May 30, 2011

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...