Skip to main content

நெருடிய நெருஞ்சி-06




அந்த வாகனத்தில் நாங்களும், எங்களுடன் இறங்கிய இருவரும் இருந்தோம். வாகனத்தை இரு சிங்களவர் ஓட்டி வந்தனர். என் மனமோ பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியது. இந்த நேரத்தில் படைமுகாமிற்குப் போவது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஒருமுடிவிற்கு வந்தவனாக மற்றவர்களைப் பார்த்துச் சொன்னேன்

"நாங்கள் கொழும்புக்குத் திரும்பவும் போகப்போறம் நீங்கள் என்னமாதிரி"?

"நாங்களும் அங்கதான் போகப்போறம் அண்ணை".

வாகனத்தை ஒட்டியவர்களிடம் விடையத்தைச் சொல்லி வவுனியா புகையிரதநிலயத்தில் இறக்கிவிடும்படி சொன்னேன். நேரமோ அதிகாலை 2.45 ஐத் தொட்டுக் கொண்டிருந்தது. தூரத்தே வவுனியாவை நெருங்குவதற்கு அறிகுறியாக ஒளிப்பொட்டுகள் தெரிந்தன. வாகனத்தை ஓட்டியவர்களுக்கு புகையிரதநிலயத்திற்குச் செல்லும்

வழி தெரியவில்லை. மனைவி சிங்களத்தில் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தா. சிறிது நேரத்தில் வண்டி வவுனியா புகையிரத நிலையத்தனுள் நுளைந்தது. வண்டியில் வந்ததிற்கு 1000 ரூபாய்கள் கேட்டார்கள்,பொக்கற்றில் இருந்ததை எடுத்துக் கொடுத்தேன்.ஆயிரம் ரூபா தாளில் மகிந்தர் சிரித்தார்.வெளியாட்களை வைத்து ராணுவம் நன்றாகத்தான் பிழைப்பு நடத்துகின்றது.முதல் புகைவண்டிக்காக மக்கள் அங்காங்கே குழுமியிருந்தார்கள். நேரம் அதிகாலை 3 மணியைத் தாண்டியிருந்தது. எனக்குத் தொடர்ச்சியான பயணத்தால் தலைஇடித்தது. அருகில் இருந்த தேநீர்கடையில் தேநீர் வாங்கி குடித்துக்கொண்டே ஒருசிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். சிகரட் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். தலையிடிக்குத் தேனீர் இதமாக இருந்தது. நான் ஒரவருக்கும் சொல்லாமல் வந்தது பிழையாகி விட்டதோ ? வவுனியாவில் இருக்கும் பெரியக்காவை எழுப்பவேண்டியது தான். பெரியக்கா கலியாணம் கட்டிய செய்திதான் எனக்குத் தெரியும். அத்தானையும் அக்காவையும் இப்பொழுது தான் பார்ககப் போகின்றேன். மனைவிக்கு எனது வரவை மறைத்து அக்காவிற்கு போன் செய்யும்படி சொன்னேன். அத்தான் மோட்டச்சைக்கிளில் வருவதாக மனைவி சொன்னா. புகையிரதநலையத்தைச் சுற்றி இருள் மண்டியிருந்தது. என்னால் சுற்றாடலை சரியாகப் பார்க்க முடியவில்லை. மற்றய இருவரில் ஒருவர் எங்களைப்போலவே வவுனியாவில் நிற்க முடிவு செய்திருந்தார், மற்றயவர் கொழும்பு போக பயணச்சீட்டு எடுக்கப் போயிருந்தார். முதல் வண்டி காலை 5.30 க்கு என்று வந்து சொன்னார். தூரத்தே மோட்டச்சைக்கிளின் ஒலிகேட்டது. நான் ஓரமாக நின்று கொண்டேன். ஓர் நடுத்தரமான வயது உடையவர் மோட்டச்சைக்கிளை ஓட்டிவந்து எனது மனைவிக்கு அருகில் நிறுத்தி அவாவுடன் கதைக்கத் தொடங்கினார். சிறிது இடைவேளையின் பின்பு அத்தான் அருகே சென்று

"என்ன அத்தான் எப்படிச் சுகம்"?

அத்தான் அதிர்ச்சியின் உறைநிலைக்கே போய்விட்டார்.

மற்ற இருவருடமும் விடைபெற்று நாங்கள் ஓர் ஓட்டோவில் பெரியக்காவின் வீட்டிற்குப் போனோம். அக்கா விபரம் அறியாது வீட்டுக் கேற்ரடியில் நின்று கொண்டிருந்தா. என்னைக் கண்டதும் அக்கா அழுதே விட்டா. சத்தம் கேட்டு இரண்டாவது அக்காவும் வந்துவிட்டா. எனக்கு அழுகை எட்டிப் பரத்தாலும் புலம்பெயர் வாழ்வின் இயந்திரத்தனம் கட்டிப்போட்டது. அப்போதைய சூழ்நிலையை மாற்றப் பகிடியாகக் கதைத்துக் கொண்டிருந்தாலும் நான் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கியதன் கோபம் அக்காவின் முகத்தில் அப்படியே தெரிந்தது. இரண்டாவது அக்காவோ தனக்கே உரிய பாணியில் "அப்பன் எங்களத்தான் நீ முதல்ல பாக்கவேணுமெண்டு எழுத்துக்கண்டியோ பாத்தியே கடவுள் ஆமிக்காறன்ர ரூபத்தில வந்தார்.இல்லாட்டிக்கு நீ எங்களுக்கு டிமிக்கி குடுத்திட்டு யாழ்ப்பாணம் போயிருப்பாய்" என்றா.

நானோ பேத்தனமாகச் சிரித்தேன். நேரம் விடிய ஆறுமணியாகி இருந்தது. நான் ஆசை தீர நன்றாகக் குளித்து விட்டு அக்கா தந்த கோப்பியை குடித்துக் கொண்டே சுற்றுச் சூழலைப் பார்கப் போனேன். அக்காவின் வீட்டிற்குப் பின்னே இரம்பக்குளம் பரவியிருந்தது. அதில் நாரைகளும் கூளைகடாக்களும் இரைந்து கொண்டே இரை தேடின. பக்கத்தல் இருந்த முருங்கை மரத்தில்அணில்கள் கத்தியவாறே துள்ளி விளையாடின. பக்கத்தே இருந்த கோயில் மணி ஒலித்தது. இந்தக் காலமை நேரத்திலும் வெய்யில் தன்னுடைய குணத்தைக் காட்டயது. எனக்கு எல்லாமே வியப்பாகவும் புதினமாகவும் தெரிந்தது. பக்கத்தே இருந்த ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் அதன் கலைவண்ணம் தெரிந்தது. நாங்களும் தானே இப்படி ஒரு கூடு கட்டினோம். பாத்து பாத்துத் தானே கட்டினோம். எத்தினை பிராந்துகள் எங்கள் கூட்டை சுத்திக் குதறின. அக்காவின் குரல் என்னைக் குலைத்தது.

"உங்கை என்ன செய்யிறாய்"?

"வாவென் சாப்பட"?

"இப்பவோ"?

"ஓம். வா வந்து சாப்படு"

"இந்தக்காலமை என்னால சாப்பிடேலாது".

"9 மணிக்குசாப்பிடுறன்".

"அத்தான் வரட்டாம் கதைக்க".

"போ வாறன்".

பத்தின சிகரட்டைத் தொடர்ந்தேன். அத்தானிடம் மனைவி எல்லாமே சொல்லி விட்டிருந்தா. அத்தானிடம் எங்கள் இருவரின் கடவுச்சீட்டையும் கொடுத்தேன். இருங்கோ வருகின்றேன் என்று அத்தான் உள்ளே போய் வெளிக்கிட்டு வந்தார். தொலைபேசியை எடுத்து எண்களை ஒத்தினார். பின்பு யாருடனோ சிங்களத்தல் கதைக்கத் தொடங்கினார். நானோ அணில் ஏற விட்ட நாய்போல் அவரைப் பார்த்தேன். அவருடைய கதை விழங்காவிட்டாலும் ஓர் இராணுவ அதிகாரியுடன் கதைக்கன்றார் என்பது விழங்கியது. யாருடன் கதைத்தாலும் கிரகங்கள் மாறப்போவதல்லை என்பது தெரிந்தும் அவரை அவர்போக்கில் விட்டேன். கதைத்து முடிந்தவுடன் "தம்பி நாங்கள் கொழும்புக்கு பக்ஸ் பண்ணி எடுப்பம்" என்றார். நானும் வாறன் அத்தான் என்று அவருடன் மோட்டசைக்களில் தொற்றிக்கொண்டேன். அத்தானுடன் வெளியில் போகும் பொழுது முட்டித் தயிர் கேட்டேன் . ஒன்றுக்கு இரண்டாக முட்டித் தயிர் வாங்கினோம். எனக்கு முட்டித் தயிர் என்றால் உயிர். அதுவும் பன்குளம் தயிர் என்றால் சொல்லிவேலையில்லை. இரண்டு மூன்று தரம் சீனி போட்டு தயிர் சாப்பிட்டேன்

அன்று பின்னரமே கிளியரன்ஸ் திரும்ப பக்ஸ் பண்ணியிருந்தனர். எனக்குத் தலைகால் புரியாத புழுகம். அக்கா இரவு நின்று விட்டு போ என்று அடம்பிடித்தா. என்னால் அவாவை மனம்நோக விட வரும்பவில்லை. அன்று இரவு அக்காவுடன் நிக்கத் தீர்மானித்தோம்.

எல்லோரும் பலகதைகளை கதைத்து படுக்க நேரமாகிவிட்டது. அத்தான் விடிய எழும்பி முதல் பஸ் எடுக்கவேணும் எண்டு சொல்லியிருந்தார். விடிய 4 மணிக்கே எழும்பி குளிக்கத்தோடங்கனேன். என்னுடைய அலப்பலில் எல்லோரும் எழும்பி விட்டனர். அக்கா இடியப்பமும் சம்பலும் சாப்பிட செய்து தந்தா. ஓட்டோ ஒன்றை அக்கா ஒழுங்கு செயதிருந்தா. ஓட்டோ எங்களை ஏற்றிக் கொண்டு வவுனியா பஸ் நிலயத்திற்குச் சென்றது. நேரம் காலை 6 மணியாகி இருந்தது. அத்தான் மோட்டச்சைக்கிளில் ஓட்டோக்குப் பின்னால் எங்களை வழியனுப்ப வந்தார். விடிய 6.30 இ.போ.சா பஸ் எங்களைச் சுமந்து பரித்தித்துறை நோக்கி பறப்படத் தயாரானது.




June 12, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம