Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 03




வணக்கம் பிள்ளையள் ,

எப்பிடி சுகநயங்கள் ? நான் சுருக்கு சுறுக்கர் தான் பாருங்கோ . சுறுக்கருக்கு ஆயிரத்தெட்டு சோலியள் கண்டியளோ . அதாலை கொஞ்சம் சுணங்கிப் போட்டுது சுறக்கர் உங்களை எல்லாம் சுகநயம் விசாரிக்க . அதோடை சுறுக்கருக்கும் சுருக்கெண்டு நாலு விசையங்கள் இருந்தால்தானே உங்களோடை கூச்சநாச்சமில்லாமல் பம்பல் அடிக்கலாம் . நீங்களும் ஏதாவது சுறுக்கருக்கு ஏதாவது சொல்ல வசதியாய் இருக்கும் .

இப்ப ரெண்டு மூண்டு நாளாய் தமிழகத்திலை எங்களுக்காக மாணவர்கள் எல்லாம் போராட்டத்திலை குதிச்சிருக்கினம் . நல்ல விசையம்தான் . இந்த மாணவர் போராட்டங்கள் ஐஞ்சுசதத்துக்கு உதவாது எண்டு சொல்லிற அளவுக்கு சுறுக்கர் ஒண்டும் தரங்கெட்டவன் இல்லை . சுறக்கர் எப்பவுமே மாணவரின்ரை உணர்வுகளுக்கு மரியாதை செய்யிறவன் . ஆனால் சுறுக்கரிட்டை சுருக்கெண்டு கொஞ்சம் சமசியங்களும் கிடக்கு . அது என்னண்டால் , இந்தியாவின்ரை வெளிநாட்டு கொள்கையளை முடிவு செய்யிறது " றோ " எண்டு சின்னப்பிள்ளைக்கும் தெரிஞ்சவிசையம் . முள்ளிவாய்க்காலிலை உலகத்திலேயே ரெண்டாவது பெரிய இனப்படுகொலை நடக்கேக்கை தமிழகத்திலை பெரிய பூகம்பம் வெடிச்சுது . அப்ப மாறாத " றோ " இப்ப மட்டும் இந்த மாணவர் போராட்டங்களாலை மாறுமோ ??? எண்டது சுறுக்கிரின்ரை சமசியம் பாருங்கோ . ஏனெண்டால் ஒரு கள்ளனோடை சேந்த மத்தக் கள்ளனிட்டை போய் தமிழனுக்கு உதவி செய்யுங்கோ மத்திய அரசே எண்டு கேக்கிற அரசியல் சூத்திரம் சிவசத்தியமாய் சுறுக்கருக்கு விளங்கேலை !!!!!!!

இப்ப........ இந்த தமிழகத்தின்ரை தனித்தமிழ் நாடுக்கோரிக்கையை கடைஞ்செடுத்த போக்கிலி அரசியலுக்காக விட்டவை இந்த திராவிட கட்சியள் . இப்பவும் இவையள்தான் ஆட்சியிலை இருக்கினம் . ஒரு தனியான சுயாட்சி உள்ள தமிழ் நாட்டுக் குடியரசிலை இருந்து அதின்ரை மாணவர்கள் நீங்கள் எங்களுக்கு ஆதரவாய் றோட்டிலை இறங்கினால் அதிலை ஒரு அர்த்தம் இருக்கு கண்டியளோ . நீங்கள் இருக்கிறது இந்தியாவின்ரை ஆழுகைக்கு உள்பட்ட ஒரு மாநிலம் . இதுகள் விளங்காமல் எங்கடை இணைய போராளியள் உங்களை பாத்து , பட்டையை கிளப்புங்கோடா கிளப்புங்கோடா எண்டு விசில் அடிக்கிறாங்கள் . கதை கவிதையெண்டு கீ போர்ட் அனல் பறத்திது . எனக்கு இதுகளை பாக்க 2009 லை அடிச்ச விசில்கள் மாதிரி கிடக்கு . இந்த இணைய முதலாளியள் எல்லாம் உங்களுக்கு ஆதரவாய்த் தான் செய்தியள் போடவேணும் எண்டு சொல்லுகினம் . அவைக்கு தங்கடை இணையங்களை றாங் கூட்டவேணும் எண்ட பிரச்சனை பாருங்கோ. ஆனால் ஒரு விசையம் பாருங்கோ சுறுக்கர் சொல்லிறன் எண்டு கோபிக்கப்படாது , "வடக்கத்தையான்" புலம்பெயர்ந்த டமில்ஸ்சுக்கு வேண்டாமாம் . ஆனால் அவனின்ரை நாட்டிலை இருக்கிற ஒரு மானிலத்திலை இருக்கிற நீங்கள் றோட்டிலை நிக்கிறது வேணுமாம் . இது மொள்ளமாரிவேலையல்லோ??? அப்ப நான் வரட்டோ பிள்ளையள்..... 




சுருக்கு சுறுக்கர்

March 16, 2013

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...