Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 03




வணக்கம் பிள்ளையள் ,

எப்பிடி சுகநயங்கள் ? நான் சுருக்கு சுறுக்கர் தான் பாருங்கோ . சுறுக்கருக்கு ஆயிரத்தெட்டு சோலியள் கண்டியளோ . அதாலை கொஞ்சம் சுணங்கிப் போட்டுது சுறக்கர் உங்களை எல்லாம் சுகநயம் விசாரிக்க . அதோடை சுறுக்கருக்கும் சுருக்கெண்டு நாலு விசையங்கள் இருந்தால்தானே உங்களோடை கூச்சநாச்சமில்லாமல் பம்பல் அடிக்கலாம் . நீங்களும் ஏதாவது சுறுக்கருக்கு ஏதாவது சொல்ல வசதியாய் இருக்கும் .

இப்ப ரெண்டு மூண்டு நாளாய் தமிழகத்திலை எங்களுக்காக மாணவர்கள் எல்லாம் போராட்டத்திலை குதிச்சிருக்கினம் . நல்ல விசையம்தான் . இந்த மாணவர் போராட்டங்கள் ஐஞ்சுசதத்துக்கு உதவாது எண்டு சொல்லிற அளவுக்கு சுறுக்கர் ஒண்டும் தரங்கெட்டவன் இல்லை . சுறக்கர் எப்பவுமே மாணவரின்ரை உணர்வுகளுக்கு மரியாதை செய்யிறவன் . ஆனால் சுறுக்கரிட்டை சுருக்கெண்டு கொஞ்சம் சமசியங்களும் கிடக்கு . அது என்னண்டால் , இந்தியாவின்ரை வெளிநாட்டு கொள்கையளை முடிவு செய்யிறது " றோ " எண்டு சின்னப்பிள்ளைக்கும் தெரிஞ்சவிசையம் . முள்ளிவாய்க்காலிலை உலகத்திலேயே ரெண்டாவது பெரிய இனப்படுகொலை நடக்கேக்கை தமிழகத்திலை பெரிய பூகம்பம் வெடிச்சுது . அப்ப மாறாத " றோ " இப்ப மட்டும் இந்த மாணவர் போராட்டங்களாலை மாறுமோ ??? எண்டது சுறுக்கிரின்ரை சமசியம் பாருங்கோ . ஏனெண்டால் ஒரு கள்ளனோடை சேந்த மத்தக் கள்ளனிட்டை போய் தமிழனுக்கு உதவி செய்யுங்கோ மத்திய அரசே எண்டு கேக்கிற அரசியல் சூத்திரம் சிவசத்தியமாய் சுறுக்கருக்கு விளங்கேலை !!!!!!!

இப்ப........ இந்த தமிழகத்தின்ரை தனித்தமிழ் நாடுக்கோரிக்கையை கடைஞ்செடுத்த போக்கிலி அரசியலுக்காக விட்டவை இந்த திராவிட கட்சியள் . இப்பவும் இவையள்தான் ஆட்சியிலை இருக்கினம் . ஒரு தனியான சுயாட்சி உள்ள தமிழ் நாட்டுக் குடியரசிலை இருந்து அதின்ரை மாணவர்கள் நீங்கள் எங்களுக்கு ஆதரவாய் றோட்டிலை இறங்கினால் அதிலை ஒரு அர்த்தம் இருக்கு கண்டியளோ . நீங்கள் இருக்கிறது இந்தியாவின்ரை ஆழுகைக்கு உள்பட்ட ஒரு மாநிலம் . இதுகள் விளங்காமல் எங்கடை இணைய போராளியள் உங்களை பாத்து , பட்டையை கிளப்புங்கோடா கிளப்புங்கோடா எண்டு விசில் அடிக்கிறாங்கள் . கதை கவிதையெண்டு கீ போர்ட் அனல் பறத்திது . எனக்கு இதுகளை பாக்க 2009 லை அடிச்ச விசில்கள் மாதிரி கிடக்கு . இந்த இணைய முதலாளியள் எல்லாம் உங்களுக்கு ஆதரவாய்த் தான் செய்தியள் போடவேணும் எண்டு சொல்லுகினம் . அவைக்கு தங்கடை இணையங்களை றாங் கூட்டவேணும் எண்ட பிரச்சனை பாருங்கோ. ஆனால் ஒரு விசையம் பாருங்கோ சுறுக்கர் சொல்லிறன் எண்டு கோபிக்கப்படாது , "வடக்கத்தையான்" புலம்பெயர்ந்த டமில்ஸ்சுக்கு வேண்டாமாம் . ஆனால் அவனின்ரை நாட்டிலை இருக்கிற ஒரு மானிலத்திலை இருக்கிற நீங்கள் றோட்டிலை நிக்கிறது வேணுமாம் . இது மொள்ளமாரிவேலையல்லோ??? அப்ப நான் வரட்டோ பிள்ளையள்..... 




சுருக்கு சுறுக்கர்

March 16, 2013

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...