Skip to main content

நெருடியநெருஞ்சி -முடிவு





அக்கா அம்மா இல்லாத இடத்தில் இருந்து கதைத்தது என் கண்ணில் நீர் கட்டியது . நான் தொலைபேசியை மனைவிடம் கொடுத்தேன் . என்மனமோ அக்காவை , அவாவின் இறுதிக் காலத்தில் என்னுடனயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவாகவே முடிவு செய்தது . நான் வெளிக்கிடுவதற்கு குளிக்க ஆரம்பித்தேன் . தண்ணியில் குளோரின் நெடி மூக்கைத் துளைத்தது .அதில் சவர்காரம் நுரையாகப் பொங்கியது . நான் ஆனந்தக் குளியல் முடித்து வெளிக்கிட்டேன் . மனைவியும் நண்பியும் எமது பயணப்பொதிகளை வரவேற்பறையில் வைத்திருந்தார்கள் . நேரம் பத்துமணியை நெருங்கிக் கொண்டிருந்தது .நண்பியின் தம்பி தனது நண்பர்களது வானைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . அதில் அவனும் அவனது நண்பர்கள் இருவரும் இருந்தனர் . மனைவி வெளிக்கிடுவதற்குப் போய்விட்டா . நானும் தம்பியும் பயணப்பொதிகளைக் கீழே இறக்கி வானில் அடுக்கினோம் . நான் மேலே ஏறிப்போய் நண்பியிடம் விடைபெறச் சென்றேன் . எமது பிரிவு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகவே ஒட்டியிருந்தது . தோழிகள் இருவரும் கண்ணீருடன் இறுக்கியணைத்து முத்தமிட்டனர் . நாங்கள் வானில் ஏறியிருக்க வான் புறப்பட்டது .கொழும்பு சாலைகளில் வாகனநெரிசல்கள் இல்லாததால் , வான் சீறிப் பாய்ந்தது . மனைவி தம்பியுன் குடும்பக் கதைகள் கதைத்துக்கொண்டு வந்தா . வான் இப்பொழுது களனிப்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த்து . எனக்கோ களனியாறின் தண்ணி சிவப்பாகவே தெரிந்தது . எவ்வளவு அப்பாவிகளை உள்வாங்கிய புண்ணிய ஆறு ? இப்பொழுது வான் விமான நிலயத்தை நெருங்கிவிட்டிருந்தது . நுளைவாயிலில் இராணுவப் பரிசோதனைகள் நடப்பது தூரத்தே தெரிந்தது . போர்முடிந்தாலும் இவர்களது பசிக்குத் தொடர்ந்து தீனி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது . அதுவும் நாட்டின் சர்வதேச விமானநிலயத்தில் . எமது வான் வேகத்தைக் குறைத்தது . எனது மனைவி இருவரது கடவுச்சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டா . சோதனைச்சாவடியை நெருங்கியதும் எமது கடவுச்சீட்டுகளை மந்திகள் குடைந்தன . என்னை உத்துஉத்துப் பார்த்தன . எனக்கு வெறுப்பு மண்டியது . பிரான்ஸ் காவல்துறை கூட என்னை இவ்வளவுக்கு நோண்டியதில்லையே ? எவ்வளவு பண்பாகக் கதைப்பார்கள் . எனக்கு இங்கு வாழ நினைத்த எண்ணம் மெதுவாக மங்கத் தொடங்கியது . எமது வான் அவர்களைக் கடந்து விமானநிலயத்தில் நுளைந்து நின்றது . நாங்கள் பயணப்பொதிகளை இறக்கிக்கொண்டே தம்பிக்கு விடைகொடுத்தோம் .அவர்களது பாதுகாப்புக் காரணங்களால் அவர்களை நாங்கள் நிற்பதற்கு அனுமதிக்கவில்லை .எமக்கு விடிய ஐந்துமணிக்கு விமானம் ஆகையால் நேரம் அதிகம் இருந்தது .நாங்கள் இருவரும் எச்சரிக்கையுடனேயே நேரத்தைக் கடத்தினோம் . நான் கோப்பி சிகரட் பத்துவதானாலும் மனைவி கூடவே வந்தாள் . நேரம் ஒரு மணியைக்கடந்திருந்தது . அவர்கள் பாதுகாப்புச் சோதனைகளை ஆரம்பித்தார்கள் . நாங்கள் பயணப்பொதிகளைப் போட்டுவிட்டு . குடியகல்வுப்பகுதிக்குப் போனோம் .எனது முகமோ இறுகிப்போயிருந்தது .எம்முடன் கதைத்தவாறே அந்த அதிகாரி கடவுச்சீட்டில் முத்திரையை ஓங்கி அடித்தான் . அதில் அவனது வெறுப்புத் தெரிந்தது .ஆனாலும் சிரிப்பு மாறாது என்னை இலங்கை பிடித்திருக்கின்றதா என்று கேணைத்தனமாகக் கேட்டான் . என்னால் புன்முறுவலைத் தான் பரிசாகக் கொடுக்கமுடிந்தது . என்மனமோ இதுதான் உங்கள் நாட்டிற்கு எனது இறுதி வருகை . அடுத்த வருகை எனது ஈழநாட்டிற்கு , ஈழம்ஏயார்வேஸ்சில் , பலாலி சர்வதேசவிமான நிலயத்திலேயே இறங்குவேன் . என்று கறுவிக்கொண்டது . எனது காலத்தில் இது நடக்கவேண்டும் என என்மனம் கடவுளை வேண்டிக்கொண்டது . நாங்கள் இருவரும் பயணிகள் கூடத்தில் போய் இருந்து கொண்டோம் . நேரம் மூன்று அரையாகியிருந்தது . இப்போது அங்கு கூட்டம் சேர்ந்ததால் அமைதி விடைபெற்றது .எமது விமானச் சீட்டுகளைச் சரிபார்க்க குவைத் விமானநிறுவன ஊளியர்கள் வந்திருந்தனர் . நாங்கள் இருவரும் விமனத்தில் உள்ளே போய் இருக்கைகளைப் பார்த்து இருந்து கொண்டோம் .எனதுமுகம் என்னவொ சந்தோசத்தைத் துலைத்திருந்தது .மனைவி என்னுடன் எதுவுமே கதைக்கவில்லை .நேரம் காலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .விமானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு மெதுவாக ஓடுபாதையில் உருண்டோடித் தன்னை நிலைப்படுத்தி , வேகமாக ஓடுபாதையில் ஓடி விண்ணில் பாய்ந்தது குவைத் எயார்வேஸ் .என்மனதில் முட்டிக்குத்திய நெருஞ்சிமுள்ளின் வலி கண்களில் பொளக்கென வழிந்தது .








முற்றும்.






Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...