Skip to main content

நெருடியநெருஞ்சி -முடிவு





அக்கா அம்மா இல்லாத இடத்தில் இருந்து கதைத்தது என் கண்ணில் நீர் கட்டியது . நான் தொலைபேசியை மனைவிடம் கொடுத்தேன் . என்மனமோ அக்காவை , அவாவின் இறுதிக் காலத்தில் என்னுடனயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவாகவே முடிவு செய்தது . நான் வெளிக்கிடுவதற்கு குளிக்க ஆரம்பித்தேன் . தண்ணியில் குளோரின் நெடி மூக்கைத் துளைத்தது .அதில் சவர்காரம் நுரையாகப் பொங்கியது . நான் ஆனந்தக் குளியல் முடித்து வெளிக்கிட்டேன் . மனைவியும் நண்பியும் எமது பயணப்பொதிகளை வரவேற்பறையில் வைத்திருந்தார்கள் . நேரம் பத்துமணியை நெருங்கிக் கொண்டிருந்தது .நண்பியின் தம்பி தனது நண்பர்களது வானைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . அதில் அவனும் அவனது நண்பர்கள் இருவரும் இருந்தனர் . மனைவி வெளிக்கிடுவதற்குப் போய்விட்டா . நானும் தம்பியும் பயணப்பொதிகளைக் கீழே இறக்கி வானில் அடுக்கினோம் . நான் மேலே ஏறிப்போய் நண்பியிடம் விடைபெறச் சென்றேன் . எமது பிரிவு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகவே ஒட்டியிருந்தது . தோழிகள் இருவரும் கண்ணீருடன் இறுக்கியணைத்து முத்தமிட்டனர் . நாங்கள் வானில் ஏறியிருக்க வான் புறப்பட்டது .கொழும்பு சாலைகளில் வாகனநெரிசல்கள் இல்லாததால் , வான் சீறிப் பாய்ந்தது . மனைவி தம்பியுன் குடும்பக் கதைகள் கதைத்துக்கொண்டு வந்தா . வான் இப்பொழுது களனிப்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த்து . எனக்கோ களனியாறின் தண்ணி சிவப்பாகவே தெரிந்தது . எவ்வளவு அப்பாவிகளை உள்வாங்கிய புண்ணிய ஆறு ? இப்பொழுது வான் விமான நிலயத்தை நெருங்கிவிட்டிருந்தது . நுளைவாயிலில் இராணுவப் பரிசோதனைகள் நடப்பது தூரத்தே தெரிந்தது . போர்முடிந்தாலும் இவர்களது பசிக்குத் தொடர்ந்து தீனி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது . அதுவும் நாட்டின் சர்வதேச விமானநிலயத்தில் . எமது வான் வேகத்தைக் குறைத்தது . எனது மனைவி இருவரது கடவுச்சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டா . சோதனைச்சாவடியை நெருங்கியதும் எமது கடவுச்சீட்டுகளை மந்திகள் குடைந்தன . என்னை உத்துஉத்துப் பார்த்தன . எனக்கு வெறுப்பு மண்டியது . பிரான்ஸ் காவல்துறை கூட என்னை இவ்வளவுக்கு நோண்டியதில்லையே ? எவ்வளவு பண்பாகக் கதைப்பார்கள் . எனக்கு இங்கு வாழ நினைத்த எண்ணம் மெதுவாக மங்கத் தொடங்கியது . எமது வான் அவர்களைக் கடந்து விமானநிலயத்தில் நுளைந்து நின்றது . நாங்கள் பயணப்பொதிகளை இறக்கிக்கொண்டே தம்பிக்கு விடைகொடுத்தோம் .அவர்களது பாதுகாப்புக் காரணங்களால் அவர்களை நாங்கள் நிற்பதற்கு அனுமதிக்கவில்லை .எமக்கு விடிய ஐந்துமணிக்கு விமானம் ஆகையால் நேரம் அதிகம் இருந்தது .நாங்கள் இருவரும் எச்சரிக்கையுடனேயே நேரத்தைக் கடத்தினோம் . நான் கோப்பி சிகரட் பத்துவதானாலும் மனைவி கூடவே வந்தாள் . நேரம் ஒரு மணியைக்கடந்திருந்தது . அவர்கள் பாதுகாப்புச் சோதனைகளை ஆரம்பித்தார்கள் . நாங்கள் பயணப்பொதிகளைப் போட்டுவிட்டு . குடியகல்வுப்பகுதிக்குப் போனோம் .எனது முகமோ இறுகிப்போயிருந்தது .எம்முடன் கதைத்தவாறே அந்த அதிகாரி கடவுச்சீட்டில் முத்திரையை ஓங்கி அடித்தான் . அதில் அவனது வெறுப்புத் தெரிந்தது .ஆனாலும் சிரிப்பு மாறாது என்னை இலங்கை பிடித்திருக்கின்றதா என்று கேணைத்தனமாகக் கேட்டான் . என்னால் புன்முறுவலைத் தான் பரிசாகக் கொடுக்கமுடிந்தது . என்மனமோ இதுதான் உங்கள் நாட்டிற்கு எனது இறுதி வருகை . அடுத்த வருகை எனது ஈழநாட்டிற்கு , ஈழம்ஏயார்வேஸ்சில் , பலாலி சர்வதேசவிமான நிலயத்திலேயே இறங்குவேன் . என்று கறுவிக்கொண்டது . எனது காலத்தில் இது நடக்கவேண்டும் என என்மனம் கடவுளை வேண்டிக்கொண்டது . நாங்கள் இருவரும் பயணிகள் கூடத்தில் போய் இருந்து கொண்டோம் . நேரம் மூன்று அரையாகியிருந்தது . இப்போது அங்கு கூட்டம் சேர்ந்ததால் அமைதி விடைபெற்றது .எமது விமானச் சீட்டுகளைச் சரிபார்க்க குவைத் விமானநிறுவன ஊளியர்கள் வந்திருந்தனர் . நாங்கள் இருவரும் விமனத்தில் உள்ளே போய் இருக்கைகளைப் பார்த்து இருந்து கொண்டோம் .எனதுமுகம் என்னவொ சந்தோசத்தைத் துலைத்திருந்தது .மனைவி என்னுடன் எதுவுமே கதைக்கவில்லை .நேரம் காலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .விமானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு மெதுவாக ஓடுபாதையில் உருண்டோடித் தன்னை நிலைப்படுத்தி , வேகமாக ஓடுபாதையில் ஓடி விண்ணில் பாய்ந்தது குவைத் எயார்வேஸ் .என்மனதில் முட்டிக்குத்திய நெருஞ்சிமுள்ளின் வலி கண்களில் பொளக்கென வழிந்தது .








முற்றும்.






Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...