Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 04





வணக்கம் பிள்ளையள் . கனகாலத்துக்குப் பிறகு உங்களை சந்திக்கிறன் . நீங்கள் எல்லாம் சுகமாய் இருப்பியள் எண்டு நினைக்கிறன் . மெய்யாலும் அடிக்கடி உங்களை பாக்கவேணும் எண்டு யோசிக்கிறதுதான் பிள்ளையள். சம்மர் தொடங்கினதாலை எனக்கும் ஆயிரம் அறுவத்தெட்டு சோலியள் கண்டியளோ . சரி நான் புசத்தாமல் நேரை விசையத்துக்கு வாறன் . இந்த சம்மரின்ரை கொட் ரொப்பிக் " முரசு அறைவாம் " எண்டு ஒரு நியூஸ் பாத்தன் . என்ன பூராயம் எண்டு பாத்தால் , புலத்திலை சுதந்திர தமிழ் ஈழ சாசனத்தை உருவாக்கி முரசு அறையினமாம் . எனக்கு புண்ணிலை புளிப்பத்தின மாதிரி கிடந்திது . ஏனெண்டால் 1977 ஆண்டிலை வட்டுக்கோட்டை தீர்மானத்திலை , எங்கடை சனம் தங்களுக்கு என்ன வேணும் எண்டு கட் அண்ட் றைற்ராய் சொல்லிப் போட்டுது . பேந்து ஒரு சம்மறுக்கு இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறியளோ எண்டு எங்கடை சனத்தை கேட்டு வாக்கெடுப்பு நடத்தீச்சினம் . அதாலை சனம் திருப்பவும் ஓம் எண்டு சொல்லி ஒரு அமைப்பை உருவாக்கி விட்டுதுகள் . இப்ப என்னடாவெண்டால் திரும்பவும் ஒருக்கால் சாசனத்தை முரசு கொட்டினமாம் . நான் எங்கை போய் முட்ட ?????????

சண்டை முடிஞ்சு நாலுவரியம்போட்டுது . அங்கை போராடின சனம் ஜெயிலுக்கை கடந்து சீரளியுதுகள் . அதுகளை வெளியில எடுக்கிறதுக்கு ஒரு சர்வதேச அழுத்தத்தை குடுக்க காணேலை . சண்டையிலை கையை காலை இழந்த போரளி குடும்பங்கள் நடுறோட்டிலை நிக்கிதுகள் . இதுகளுக்கு வழியில்லை . சரி கனக்க வேண்டாம் சனத்தாலை தெரிவு செய்த பதவியிலை இருக்கிற மகிந்தாவை போர்குற்ற விசாரணைக்கு கொண்டு வரேலாது . ஆனால் இவ்வளவுக்கும் மெயின் ஆள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அக்கா நாட்டிலைதான் இருக்கிறா . அவாவை வலு சிம்பிளாய் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு இவையளாலை கொண்டு வரலாம் . இதுகள் தான் இப்ப சனத்துக்கு இவையள் செய்யவேண்டியது . இதுகளை செய்யாமல் இப்ப என்ன கோதாரிக்கு முரசு அறைவான் ??? சிவசத்தியமாய் சுறுக்கருக்கு இதுகள் விழங்கேலை கண்டியளோ .........

இவையள் பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் செய்யுறதுக்கு கன சரட்டியள் கிடக்கு . அதுகளாலை செய்யலாம் . நெஞ்சிலை ஈரம் இருக்கிறவங்கள எல்லாம் தனியவும் , இந்த சரட்டியளாலையும் காதும் காதும் வைச்சமாதிரி செய்து போட்டு பொத்திக்கொண்டு இருக்கிறாங்கள் . இவையள் முரசு அறையிறதிலையும் , யாகம் வளக்கிறதிலையும் திரிஞ்சால் , புலத்து டமில்ஸ் எல்லாம் கேணைப்பயலுகள் எண்டுதானே ஆர்த்தம் ?????????இப்பிடியான ஆக்கள் இனியாவது திருந்தி அங்கை இருக்கிற சனங்களின்ரை பிரச்சனையளை ஒரு பொதுவேலை திட்டத்துக்கு கொண்டு வரவேணும் . இங்கை இருக்கிறவையினரை சொந்தபந்தங்கள்தான் அங்கை இருக்கிதுகள் எண்ட நினைப்பு இவையளுக்கு வரவேணும் . இல்லாட்டில் புலத்து சனங்கள் இவையளை தூக்கி எறியிறதுக்கு கனகாலம் தேவையில்லை கண்டியளோ ........ அப்ப நான் வரட்டோ பிள்ளையள் .





May 19, 2013

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...