Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 04





வணக்கம் பிள்ளையள் . கனகாலத்துக்குப் பிறகு உங்களை சந்திக்கிறன் . நீங்கள் எல்லாம் சுகமாய் இருப்பியள் எண்டு நினைக்கிறன் . மெய்யாலும் அடிக்கடி உங்களை பாக்கவேணும் எண்டு யோசிக்கிறதுதான் பிள்ளையள். சம்மர் தொடங்கினதாலை எனக்கும் ஆயிரம் அறுவத்தெட்டு சோலியள் கண்டியளோ . சரி நான் புசத்தாமல் நேரை விசையத்துக்கு வாறன் . இந்த சம்மரின்ரை கொட் ரொப்பிக் " முரசு அறைவாம் " எண்டு ஒரு நியூஸ் பாத்தன் . என்ன பூராயம் எண்டு பாத்தால் , புலத்திலை சுதந்திர தமிழ் ஈழ சாசனத்தை உருவாக்கி முரசு அறையினமாம் . எனக்கு புண்ணிலை புளிப்பத்தின மாதிரி கிடந்திது . ஏனெண்டால் 1977 ஆண்டிலை வட்டுக்கோட்டை தீர்மானத்திலை , எங்கடை சனம் தங்களுக்கு என்ன வேணும் எண்டு கட் அண்ட் றைற்ராய் சொல்லிப் போட்டுது . பேந்து ஒரு சம்மறுக்கு இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறியளோ எண்டு எங்கடை சனத்தை கேட்டு வாக்கெடுப்பு நடத்தீச்சினம் . அதாலை சனம் திருப்பவும் ஓம் எண்டு சொல்லி ஒரு அமைப்பை உருவாக்கி விட்டுதுகள் . இப்ப என்னடாவெண்டால் திரும்பவும் ஒருக்கால் சாசனத்தை முரசு கொட்டினமாம் . நான் எங்கை போய் முட்ட ?????????

சண்டை முடிஞ்சு நாலுவரியம்போட்டுது . அங்கை போராடின சனம் ஜெயிலுக்கை கடந்து சீரளியுதுகள் . அதுகளை வெளியில எடுக்கிறதுக்கு ஒரு சர்வதேச அழுத்தத்தை குடுக்க காணேலை . சண்டையிலை கையை காலை இழந்த போரளி குடும்பங்கள் நடுறோட்டிலை நிக்கிதுகள் . இதுகளுக்கு வழியில்லை . சரி கனக்க வேண்டாம் சனத்தாலை தெரிவு செய்த பதவியிலை இருக்கிற மகிந்தாவை போர்குற்ற விசாரணைக்கு கொண்டு வரேலாது . ஆனால் இவ்வளவுக்கும் மெயின் ஆள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அக்கா நாட்டிலைதான் இருக்கிறா . அவாவை வலு சிம்பிளாய் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு இவையளாலை கொண்டு வரலாம் . இதுகள் தான் இப்ப சனத்துக்கு இவையள் செய்யவேண்டியது . இதுகளை செய்யாமல் இப்ப என்ன கோதாரிக்கு முரசு அறைவான் ??? சிவசத்தியமாய் சுறுக்கருக்கு இதுகள் விழங்கேலை கண்டியளோ .........

இவையள் பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் செய்யுறதுக்கு கன சரட்டியள் கிடக்கு . அதுகளாலை செய்யலாம் . நெஞ்சிலை ஈரம் இருக்கிறவங்கள எல்லாம் தனியவும் , இந்த சரட்டியளாலையும் காதும் காதும் வைச்சமாதிரி செய்து போட்டு பொத்திக்கொண்டு இருக்கிறாங்கள் . இவையள் முரசு அறையிறதிலையும் , யாகம் வளக்கிறதிலையும் திரிஞ்சால் , புலத்து டமில்ஸ் எல்லாம் கேணைப்பயலுகள் எண்டுதானே ஆர்த்தம் ?????????இப்பிடியான ஆக்கள் இனியாவது திருந்தி அங்கை இருக்கிற சனங்களின்ரை பிரச்சனையளை ஒரு பொதுவேலை திட்டத்துக்கு கொண்டு வரவேணும் . இங்கை இருக்கிறவையினரை சொந்தபந்தங்கள்தான் அங்கை இருக்கிதுகள் எண்ட நினைப்பு இவையளுக்கு வரவேணும் . இல்லாட்டில் புலத்து சனங்கள் இவையளை தூக்கி எறியிறதுக்கு கனகாலம் தேவையில்லை கண்டியளோ ........ அப்ப நான் வரட்டோ பிள்ளையள் .





May 19, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...