Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 01





வணக்கம் பிள்ளையள் ,

நான் சுருக்கு சுறுகர் வந்திருக்கிறன் . உங்களிலை கனபேருக்கு என்னைப் பிடிக்காது . ஏனெண்டால் பரியாரியாரை ஆருக்குத்தான் பிடிக்கும் பாருங்கோ ?? நான் தரவாறது படு கைச்சலான குடிநீரும் சூரணமும் தான் . வருத்தம் தீரவேணுமெண்டால் குடிநீரை மிண்டித்தான் குடிக்க வேணும் . அப்ப பிள்ளையள் நாங்கள் விசையத்துக்கு வருவம் .......

தம்பி செத்து கிடக்கேக்கை ஆமி படம் எடுத்து வெளியாலை போட்டிது . சனம் எல்லாம் உது கடைஞ்செடுத்த பொய் எண்டு குளறீச்சுதுகள். இப்ப என்னடா எண்டால் , தம்பியின்ரை பெடியனின்ரை படத்தையும் ஆமிதான் எடுத்து வெளியிலை போட்டிது . எங்கடை சனம் என்னடாவெண்டால் இதையும் உண்மை எண்டெல்லோ சொல்லுகினம். ஆனால் இந்தமுறை மாறி மகிந்து குறூப் இதை வடிகட்டின பொய் எண்டு குளறுறாங்கள் . இது உண்மை எண்டால் அதுவும் உண்மை. இது பொய் எண்டால் அதுவும் பொய் எல்லோ

எனக்கு இன்னும் ஒரு விசையம் விளங்கேலை. தம்பியின்ரை மகன் கொலைசெய்யப்பட்டு கிட்டத்தட்ட நாலுவரியம் ஆகுது . இவ்வளவுகாலமும் இந்தவிசயம் சனத்தின்ரை கண்ணுக்குள்ளை எத்துப்படேலை . சனத்துக்கு வேறை சோலியள் கூட . இப்ப இருந்தாப்போலை இண்டிப்பெண்டன்ற் விசயத்தை ஏதோ இல்லாததை கண்டுபிடிச்சமாதிரி வெளியில விட , சனம் எல்லாம் சன்னதம் ஆடுதுகள் . 

என்ரை கேள்வி என்னண்டால் இவ்வளவு காலமும் சனங்களே எங்கை போனியள் ?? வெள்ளை வெளியிட்டால் தான் செய்தியோ ?? உங்கடை சன்னதங்கள் ஆரின்ரை நிகள்ச்சி நிரலை நடக்குது ?? இந்த சன்னதங்களை கொலை நடந்த உடனையே நீங்கள் செய்திருக்கவேணும் . ஏன் இப்ப செய்யிறியள் ?? இதுவும் உங்கடை சந்தர்ப்பவாதம் தானே ?? நீங்கள் அப்பப்ப உரு ஆடிறதும் பேந்து உங்கடை சோலியளை பாக்கிறதையும் பாத்து சர்வதேசம் காறித்துப்பாதோ ?? உங்களுக்கு ஆரும்தான் எல்லாம் செய்யவேணுமோ ?? உங்களுக்கெண்டு சொந்தமாய் யோசிக்கத் தெரியாதோ ?? ஒருக்காலும் என்னை துரோகி எண்டு சொல்லிபோடாதையுங்கோ . இனியாவது ஒரு கூரையிலை ஒண்டாய் வந்து பிரச்சனையளை சர்வதேசத்திட்டை சொன்னால் வழி பிறக்கும் . 

அதோடை இன்னுமொரு விசயம் சொல்லுறன் பிள்ளையள் . எங்கடை இணையப் போராளிகளுக்கு அந்த பிள்ளையின்ரை படம் கிடைச்சு போட்டுது . இனி நிண்டவன் போனவன் கண்டவன் எல்லாம் இனி ஈழம் பிடிப்பான் பாருங்கோ சொல்லிவேலையில்லை . அதோடை கலைஏறினமாதிரி கீபோட்டை அடிஅடியெண்டு அடிச்சு எழுதி கிழிப்பாங்கள் எங்கடை இணைய போராளியள் . நீங்கள் இருந்து பாருங்கோ நாளைக்கே சிங்கள தேசத்துக்கு மேலை , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருத்தபடி மல்றிபரல் அற்றாக் நடத்திற வாய்ச்சொல் வீரவானுகள் லைன்கட்டி நிப்பினம் . எவையோ எடுத்த ஆதாரத்துக்கு தாங்கள் கொப்பிறைற் கேப்பினம் . படை திரட்டி பாய்வோம் எண்டு வீடியோ கிளிப்பிலை முக்குவினம் . ரெண்டு நாள் போட்டுது எண்டால் பழையமாதிரி பெட்டிசமும் மொக்கையும் கவிதையும் போட்டு இணையத்தாலை நடக்கிற எங்கடை சனத்தின்ரை சீவியம் காய்ச்சல் தடிமனோடை தொடரும் . பேந்து திருப்பியும் எங்கையாவது லெக்சனுகள் வரேக்கை , எங்கடை பிரைச்சனைக்கு ஆதரவாய் ஆராவது தலைவர்கள் வருவினம் . 

அதாலை பிள்ளையளே முதலிலை இந்த புலத்திலை இருக்கிற அமைப்புகளை ஒரு குடையுக்குள்ளை வரவேணும் எண்டு நெருக்குவாரத்தை குடுங்கோ . அபப்ப இந்த சுருக்கு சுறுக்கன் வந்து கொண்டுதான் இருப்பான் .





February 20, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...