Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 01





வணக்கம் பிள்ளையள் ,

நான் சுருக்கு சுறுகர் வந்திருக்கிறன் . உங்களிலை கனபேருக்கு என்னைப் பிடிக்காது . ஏனெண்டால் பரியாரியாரை ஆருக்குத்தான் பிடிக்கும் பாருங்கோ ?? நான் தரவாறது படு கைச்சலான குடிநீரும் சூரணமும் தான் . வருத்தம் தீரவேணுமெண்டால் குடிநீரை மிண்டித்தான் குடிக்க வேணும் . அப்ப பிள்ளையள் நாங்கள் விசையத்துக்கு வருவம் .......

தம்பி செத்து கிடக்கேக்கை ஆமி படம் எடுத்து வெளியாலை போட்டிது . சனம் எல்லாம் உது கடைஞ்செடுத்த பொய் எண்டு குளறீச்சுதுகள். இப்ப என்னடா எண்டால் , தம்பியின்ரை பெடியனின்ரை படத்தையும் ஆமிதான் எடுத்து வெளியிலை போட்டிது . எங்கடை சனம் என்னடாவெண்டால் இதையும் உண்மை எண்டெல்லோ சொல்லுகினம். ஆனால் இந்தமுறை மாறி மகிந்து குறூப் இதை வடிகட்டின பொய் எண்டு குளறுறாங்கள் . இது உண்மை எண்டால் அதுவும் உண்மை. இது பொய் எண்டால் அதுவும் பொய் எல்லோ

எனக்கு இன்னும் ஒரு விசையம் விளங்கேலை. தம்பியின்ரை மகன் கொலைசெய்யப்பட்டு கிட்டத்தட்ட நாலுவரியம் ஆகுது . இவ்வளவுகாலமும் இந்தவிசயம் சனத்தின்ரை கண்ணுக்குள்ளை எத்துப்படேலை . சனத்துக்கு வேறை சோலியள் கூட . இப்ப இருந்தாப்போலை இண்டிப்பெண்டன்ற் விசயத்தை ஏதோ இல்லாததை கண்டுபிடிச்சமாதிரி வெளியில விட , சனம் எல்லாம் சன்னதம் ஆடுதுகள் . 

என்ரை கேள்வி என்னண்டால் இவ்வளவு காலமும் சனங்களே எங்கை போனியள் ?? வெள்ளை வெளியிட்டால் தான் செய்தியோ ?? உங்கடை சன்னதங்கள் ஆரின்ரை நிகள்ச்சி நிரலை நடக்குது ?? இந்த சன்னதங்களை கொலை நடந்த உடனையே நீங்கள் செய்திருக்கவேணும் . ஏன் இப்ப செய்யிறியள் ?? இதுவும் உங்கடை சந்தர்ப்பவாதம் தானே ?? நீங்கள் அப்பப்ப உரு ஆடிறதும் பேந்து உங்கடை சோலியளை பாக்கிறதையும் பாத்து சர்வதேசம் காறித்துப்பாதோ ?? உங்களுக்கு ஆரும்தான் எல்லாம் செய்யவேணுமோ ?? உங்களுக்கெண்டு சொந்தமாய் யோசிக்கத் தெரியாதோ ?? ஒருக்காலும் என்னை துரோகி எண்டு சொல்லிபோடாதையுங்கோ . இனியாவது ஒரு கூரையிலை ஒண்டாய் வந்து பிரச்சனையளை சர்வதேசத்திட்டை சொன்னால் வழி பிறக்கும் . 

அதோடை இன்னுமொரு விசயம் சொல்லுறன் பிள்ளையள் . எங்கடை இணையப் போராளிகளுக்கு அந்த பிள்ளையின்ரை படம் கிடைச்சு போட்டுது . இனி நிண்டவன் போனவன் கண்டவன் எல்லாம் இனி ஈழம் பிடிப்பான் பாருங்கோ சொல்லிவேலையில்லை . அதோடை கலைஏறினமாதிரி கீபோட்டை அடிஅடியெண்டு அடிச்சு எழுதி கிழிப்பாங்கள் எங்கடை இணைய போராளியள் . நீங்கள் இருந்து பாருங்கோ நாளைக்கே சிங்கள தேசத்துக்கு மேலை , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருத்தபடி மல்றிபரல் அற்றாக் நடத்திற வாய்ச்சொல் வீரவானுகள் லைன்கட்டி நிப்பினம் . எவையோ எடுத்த ஆதாரத்துக்கு தாங்கள் கொப்பிறைற் கேப்பினம் . படை திரட்டி பாய்வோம் எண்டு வீடியோ கிளிப்பிலை முக்குவினம் . ரெண்டு நாள் போட்டுது எண்டால் பழையமாதிரி பெட்டிசமும் மொக்கையும் கவிதையும் போட்டு இணையத்தாலை நடக்கிற எங்கடை சனத்தின்ரை சீவியம் காய்ச்சல் தடிமனோடை தொடரும் . பேந்து திருப்பியும் எங்கையாவது லெக்சனுகள் வரேக்கை , எங்கடை பிரைச்சனைக்கு ஆதரவாய் ஆராவது தலைவர்கள் வருவினம் . 

அதாலை பிள்ளையளே முதலிலை இந்த புலத்திலை இருக்கிற அமைப்புகளை ஒரு குடையுக்குள்ளை வரவேணும் எண்டு நெருக்குவாரத்தை குடுங்கோ . அபப்ப இந்த சுருக்கு சுறுக்கன் வந்து கொண்டுதான் இருப்பான் .





February 20, 2013

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...