Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 01





வணக்கம் பிள்ளையள் ,

நான் சுருக்கு சுறுகர் வந்திருக்கிறன் . உங்களிலை கனபேருக்கு என்னைப் பிடிக்காது . ஏனெண்டால் பரியாரியாரை ஆருக்குத்தான் பிடிக்கும் பாருங்கோ ?? நான் தரவாறது படு கைச்சலான குடிநீரும் சூரணமும் தான் . வருத்தம் தீரவேணுமெண்டால் குடிநீரை மிண்டித்தான் குடிக்க வேணும் . அப்ப பிள்ளையள் நாங்கள் விசையத்துக்கு வருவம் .......

தம்பி செத்து கிடக்கேக்கை ஆமி படம் எடுத்து வெளியாலை போட்டிது . சனம் எல்லாம் உது கடைஞ்செடுத்த பொய் எண்டு குளறீச்சுதுகள். இப்ப என்னடா எண்டால் , தம்பியின்ரை பெடியனின்ரை படத்தையும் ஆமிதான் எடுத்து வெளியிலை போட்டிது . எங்கடை சனம் என்னடாவெண்டால் இதையும் உண்மை எண்டெல்லோ சொல்லுகினம். ஆனால் இந்தமுறை மாறி மகிந்து குறூப் இதை வடிகட்டின பொய் எண்டு குளறுறாங்கள் . இது உண்மை எண்டால் அதுவும் உண்மை. இது பொய் எண்டால் அதுவும் பொய் எல்லோ

எனக்கு இன்னும் ஒரு விசையம் விளங்கேலை. தம்பியின்ரை மகன் கொலைசெய்யப்பட்டு கிட்டத்தட்ட நாலுவரியம் ஆகுது . இவ்வளவுகாலமும் இந்தவிசயம் சனத்தின்ரை கண்ணுக்குள்ளை எத்துப்படேலை . சனத்துக்கு வேறை சோலியள் கூட . இப்ப இருந்தாப்போலை இண்டிப்பெண்டன்ற் விசயத்தை ஏதோ இல்லாததை கண்டுபிடிச்சமாதிரி வெளியில விட , சனம் எல்லாம் சன்னதம் ஆடுதுகள் . 

என்ரை கேள்வி என்னண்டால் இவ்வளவு காலமும் சனங்களே எங்கை போனியள் ?? வெள்ளை வெளியிட்டால் தான் செய்தியோ ?? உங்கடை சன்னதங்கள் ஆரின்ரை நிகள்ச்சி நிரலை நடக்குது ?? இந்த சன்னதங்களை கொலை நடந்த உடனையே நீங்கள் செய்திருக்கவேணும் . ஏன் இப்ப செய்யிறியள் ?? இதுவும் உங்கடை சந்தர்ப்பவாதம் தானே ?? நீங்கள் அப்பப்ப உரு ஆடிறதும் பேந்து உங்கடை சோலியளை பாக்கிறதையும் பாத்து சர்வதேசம் காறித்துப்பாதோ ?? உங்களுக்கு ஆரும்தான் எல்லாம் செய்யவேணுமோ ?? உங்களுக்கெண்டு சொந்தமாய் யோசிக்கத் தெரியாதோ ?? ஒருக்காலும் என்னை துரோகி எண்டு சொல்லிபோடாதையுங்கோ . இனியாவது ஒரு கூரையிலை ஒண்டாய் வந்து பிரச்சனையளை சர்வதேசத்திட்டை சொன்னால் வழி பிறக்கும் . 

அதோடை இன்னுமொரு விசயம் சொல்லுறன் பிள்ளையள் . எங்கடை இணையப் போராளிகளுக்கு அந்த பிள்ளையின்ரை படம் கிடைச்சு போட்டுது . இனி நிண்டவன் போனவன் கண்டவன் எல்லாம் இனி ஈழம் பிடிப்பான் பாருங்கோ சொல்லிவேலையில்லை . அதோடை கலைஏறினமாதிரி கீபோட்டை அடிஅடியெண்டு அடிச்சு எழுதி கிழிப்பாங்கள் எங்கடை இணைய போராளியள் . நீங்கள் இருந்து பாருங்கோ நாளைக்கே சிங்கள தேசத்துக்கு மேலை , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருத்தபடி மல்றிபரல் அற்றாக் நடத்திற வாய்ச்சொல் வீரவானுகள் லைன்கட்டி நிப்பினம் . எவையோ எடுத்த ஆதாரத்துக்கு தாங்கள் கொப்பிறைற் கேப்பினம் . படை திரட்டி பாய்வோம் எண்டு வீடியோ கிளிப்பிலை முக்குவினம் . ரெண்டு நாள் போட்டுது எண்டால் பழையமாதிரி பெட்டிசமும் மொக்கையும் கவிதையும் போட்டு இணையத்தாலை நடக்கிற எங்கடை சனத்தின்ரை சீவியம் காய்ச்சல் தடிமனோடை தொடரும் . பேந்து திருப்பியும் எங்கையாவது லெக்சனுகள் வரேக்கை , எங்கடை பிரைச்சனைக்கு ஆதரவாய் ஆராவது தலைவர்கள் வருவினம் . 

அதாலை பிள்ளையளே முதலிலை இந்த புலத்திலை இருக்கிற அமைப்புகளை ஒரு குடையுக்குள்ளை வரவேணும் எண்டு நெருக்குவாரத்தை குடுங்கோ . அபப்ப இந்த சுருக்கு சுறுக்கன் வந்து கொண்டுதான் இருப்பான் .





February 20, 2013

Comments

Popular posts from this blog

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...