Skip to main content

கையிலாயம் போறன்.





வணக்கம் பிள்ளையள் ,


நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலைப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது .

போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் .என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை .

பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை . என்ரை கை ரெண்டும் தன்ரை பாட்டிலை தலைக்கு மேலை போட்டிது. இதை நான் பாத்தது விடியக்காத்தாலை மூண்டு மணிக்கு . நான் உயிரோடதான் இருக்கிறனோ எண்டு எனக்கு ஒரு சமசியம் . நான் பாருங்கோ கையை நுள்ளி பாத்தன் . ஆனா நுள்ளின கை மனுசிக்காறியின்ரை .

" என்னப்பா காலங்காத்தாலை கையை காலை நுள்ளுறியள் "

எண்டு மனுசி சன்னதம் ஆட எனக்கு வந்த கனவு கலைஞ்சாலும் , உள்ளுக்கை விறாண்டி கொண்டு கிடந்திது . இந்த விசையத்தை மனிசிகாறிக்கு சொன்னன் .

" என்ன சிவபெருமானும் உங்கடை கனவிலை வந்தவரோ ??உங்களுக்கு நோர்மலாயே மண்டையுக்கை ஒண்டும் கிடவாது . இப்ப துண்டாய் கழண்டு போச்சிது "

எண்டு எனக்கு கீல் ஏத்தினாள் . எனக்கு என்ரை விறாண்டல் மட்டும் நிக்கேலை . பேந்து போன சனிக்கிழமை என்ரை சோதரம் ஒண்டு கனடாவிலை இருந்து ஸ்கைப்பிலை வந்தான் . வழக்கமாய் என்னோடை கதைக்கிறதை ஒரு அவமானமாய் நினைக்கிறவன் ஏன் வாறான் எண்டு குழம்பிக்கொண்டு எடுத்தன் . அப்ப அவன் ஒரு விசையத்தை சொன்னான் . தன்ரை மனிசியின்ரை தாய்காறி ஒரு பத்துநூசத்திக்கு முதல் செத்து போனாவாம் . நான் ஏங்கி இடிவிழுந்து போனன் . எனக்கு அந்த மனிசியை என்ன நிறம் எண்டும் தெரியாது . நான் ஏன் போன வியாழன் கையிலாயத்தை கனவிலை கண்டன் ?? அப்ப மனுசி சாகப்போறது ஏதோமாதிரி எனக்கு தெரிஞ்சிருக்கு எண்டுதானே பிள்ளையள் அர்த்தம் . 

செத்தால் பிறகு என்ன நடக்கும் ?? இதை ஆருக்கும் முதல் தெரிய வருமோ எண்டெல்லாம் எனக்கு கனக்க யோசினையள் . உங்களுக்கும் இப்பிடி ஏதாவது அசுமாத்தங்கள் உங்கடை வாழ்க்கையிலை தெரிஞ்சதோ எண்டு சொல்லுங்கோவன் . சுறுக்கரும் ஒரு தெளிவுக்கு வரவேணுமெல்லோ ??? அப்ப நான் போட்டு வாறன் பிள்ளையள் .......





April 04, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம