Skip to main content

கையிலாயம் போறன்.





வணக்கம் பிள்ளையள் ,


நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலைப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது .

போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் .என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை .

பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை . என்ரை கை ரெண்டும் தன்ரை பாட்டிலை தலைக்கு மேலை போட்டிது. இதை நான் பாத்தது விடியக்காத்தாலை மூண்டு மணிக்கு . நான் உயிரோடதான் இருக்கிறனோ எண்டு எனக்கு ஒரு சமசியம் . நான் பாருங்கோ கையை நுள்ளி பாத்தன் . ஆனா நுள்ளின கை மனுசிக்காறியின்ரை .

" என்னப்பா காலங்காத்தாலை கையை காலை நுள்ளுறியள் "

எண்டு மனுசி சன்னதம் ஆட எனக்கு வந்த கனவு கலைஞ்சாலும் , உள்ளுக்கை விறாண்டி கொண்டு கிடந்திது . இந்த விசையத்தை மனிசிகாறிக்கு சொன்னன் .

" என்ன சிவபெருமானும் உங்கடை கனவிலை வந்தவரோ ??உங்களுக்கு நோர்மலாயே மண்டையுக்கை ஒண்டும் கிடவாது . இப்ப துண்டாய் கழண்டு போச்சிது "

எண்டு எனக்கு கீல் ஏத்தினாள் . எனக்கு என்ரை விறாண்டல் மட்டும் நிக்கேலை . பேந்து போன சனிக்கிழமை என்ரை சோதரம் ஒண்டு கனடாவிலை இருந்து ஸ்கைப்பிலை வந்தான் . வழக்கமாய் என்னோடை கதைக்கிறதை ஒரு அவமானமாய் நினைக்கிறவன் ஏன் வாறான் எண்டு குழம்பிக்கொண்டு எடுத்தன் . அப்ப அவன் ஒரு விசையத்தை சொன்னான் . தன்ரை மனிசியின்ரை தாய்காறி ஒரு பத்துநூசத்திக்கு முதல் செத்து போனாவாம் . நான் ஏங்கி இடிவிழுந்து போனன் . எனக்கு அந்த மனிசியை என்ன நிறம் எண்டும் தெரியாது . நான் ஏன் போன வியாழன் கையிலாயத்தை கனவிலை கண்டன் ?? அப்ப மனுசி சாகப்போறது ஏதோமாதிரி எனக்கு தெரிஞ்சிருக்கு எண்டுதானே பிள்ளையள் அர்த்தம் . 

செத்தால் பிறகு என்ன நடக்கும் ?? இதை ஆருக்கும் முதல் தெரிய வருமோ எண்டெல்லாம் எனக்கு கனக்க யோசினையள் . உங்களுக்கும் இப்பிடி ஏதாவது அசுமாத்தங்கள் உங்கடை வாழ்க்கையிலை தெரிஞ்சதோ எண்டு சொல்லுங்கோவன் . சுறுக்கரும் ஒரு தெளிவுக்கு வரவேணுமெல்லோ ??? அப்ப நான் போட்டு வாறன் பிள்ளையள் .......





April 04, 2013

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...