Skip to main content

நெருடிய நெருஞ்சி – 02




மனைவி கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தா.

"என்ன பயமோ?"

"என்னதான் இருந்தாலும் இப்ப எங்கட உயிர் ஓட்டுறவற்ற கையுக்கள்ள கதைக்காமால் வாங்கோ".

விமானம் தன்னை நிலைப்படுத்தி மேகக்கூட்டங்களிடையே சீறிப் பாய்ந்தது. இப்பொழுது தான் மனைவி கண்ணைத் திறந்தா.என்னதான் துணிவானவர்களானுலும் இந்த நேரத்தில் தியானிப்பரர்கள்.கீழே பரந்து வயல்வெளிகள் பச்சைக்கம்பளமாக விரிந்தன. என் மனமோ பின்னோக்கிப் பாய்ந்தது. விடலைப் பருவத்தில் வீட்டைப் பிரிகின்ற ஏக்கத்துடன் கண்களில் கண்ணீர் ஒழுக கட்டுநாயக்கா விமானநிலயத்தால் வெளியேறி, ஜேர்மனி வந்து, ஒவ்வொரு இடமாக அல்லாடி அப்பொழது தான் அகதி வாழ்வின் வலி சுட்டது, பின்பு 87களில் பிரான்ஸ் வந்து ஒரு வருடத்தில் அகதி முத்திரை எனது முகத்தில் ஆழமாகக் குத்தியதும், அதுவே வாழ்வின் விதியாகி இழப்புகளையும் வேதனைகளையும் ஆழ மனதில் உழுது மனதே ரணகளமாகியதை யாருமே அறியமாட்டார்கள். மற்றவர்கடைய அழுகையையும் சோகத்தையும் ஆற்றிய எனக்கு எனது வலிகளுக்கு மருந்து போட யாருமே இல்லை. வந்து 6 மாதத்தில் அப்பாவையும் பின்பு போனவருடம் எனது முதல் மொழியையும் காலச்சக்கரத்தின் ஆட்டத்தில் தொலைத்தபொழுது வெறுமையே வெறுமையாகிப் போனது.

"என்ன மலரும் நினைவுகளோ"?

மனைவியின் குரல்கலைத்தது. எனது கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்துப் பதறிப்போய் விட்டா.

"என்ன சின்னப் பிள்ளையள் மாதிரி, கொஞ்சநேரத்திலை எல்லாரையும் பாக்கத்தானே போறம்".

"சரி எல்லோரும் பழைய மாதிரி இருப்பார்களா"?

"நான் பாத்த இலங்கை பரித்திதுறையில் வீதியில் ஊர்ந்த கவசவாகனங்களும், சோதனைச் சாவடிகளும் தானே அதன் பின்பு இப்ப தானே போறன் இவங்களை நினைச்சாலே என்னமோ பண்ணுது"

"இப்ப அப்படி எல்லாம் இல்லை நீங்கள் கண்டதையும் யோசிக்காதையுங்கோ"

என்று என்னை மனைவி சமாதனப்படுத்தினா. விமானம் குவைத் சர்வதேச விமான நிலயத்தில் இறங்கத் தன்னைத் தயார்ப்படுத்தியது. மனைவியும் மீண்டும் விமானத்தை ஓட்டுபவரை நினைத்தா. கால்வாசியாக வந்த விமானம் குவைத் இலங்கைத் தொழிலாளர்களால் நிறைந்து வழிந்து. எல்லோருக்கும் உறவுகளைப் பார்க்கும் சந்தோசம். விமானமே சந்தைக்டையாக மாறியது. எனக்கோ தலைஇடியாக இருந்தது.நீண்ட நேரப்பயணம் அசதியாக இருந்தது.கண்கள் இரண்டும் நித்திரையின்மையால் சிவந்து போய் இருந்தன. பலர் பெண்களாகவே இருந்தனர். எல்லோரும் குடிவரவு விண்ணப்பத்தை நிரப்புவதில் மும்மரமக இருந்தார்கள். சிலருக்கு விண்ணப்பத்தை நிரப்பவே தெரியவல்லை. இவர்களது அறியாமை அரபுகளுக்குக் குறைந்த தினார்களாகவும், அரசயல்வாதிகளுக்கு அரசியலாகவும் போவதை நினைக்க மனது கனத்தது. இவர்களும் எங்களைப் போல் தானே வெய்யிலிலும் குளிரிலும் அல்லாடுவரர்கள். நேரம் அதிகாலை 4 மணி. விமானம் பண்டரநாயக்கா சர்வதேச விமானநிலயத்தில் தன் கால்களை அகலப்பரப்பி வேகமாக இறங்கி ஓடுதளத்தில் ஓடி நின்றது.





தொடரும்

June 01, 2011

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...