Skip to main content

நெருடிய நெருஞ்சி – 02




மனைவி கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தா.

"என்ன பயமோ?"

"என்னதான் இருந்தாலும் இப்ப எங்கட உயிர் ஓட்டுறவற்ற கையுக்கள்ள கதைக்காமால் வாங்கோ".

விமானம் தன்னை நிலைப்படுத்தி மேகக்கூட்டங்களிடையே சீறிப் பாய்ந்தது. இப்பொழுது தான் மனைவி கண்ணைத் திறந்தா.என்னதான் துணிவானவர்களானுலும் இந்த நேரத்தில் தியானிப்பரர்கள்.கீழே பரந்து வயல்வெளிகள் பச்சைக்கம்பளமாக விரிந்தன. என் மனமோ பின்னோக்கிப் பாய்ந்தது. விடலைப் பருவத்தில் வீட்டைப் பிரிகின்ற ஏக்கத்துடன் கண்களில் கண்ணீர் ஒழுக கட்டுநாயக்கா விமானநிலயத்தால் வெளியேறி, ஜேர்மனி வந்து, ஒவ்வொரு இடமாக அல்லாடி அப்பொழது தான் அகதி வாழ்வின் வலி சுட்டது, பின்பு 87களில் பிரான்ஸ் வந்து ஒரு வருடத்தில் அகதி முத்திரை எனது முகத்தில் ஆழமாகக் குத்தியதும், அதுவே வாழ்வின் விதியாகி இழப்புகளையும் வேதனைகளையும் ஆழ மனதில் உழுது மனதே ரணகளமாகியதை யாருமே அறியமாட்டார்கள். மற்றவர்கடைய அழுகையையும் சோகத்தையும் ஆற்றிய எனக்கு எனது வலிகளுக்கு மருந்து போட யாருமே இல்லை. வந்து 6 மாதத்தில் அப்பாவையும் பின்பு போனவருடம் எனது முதல் மொழியையும் காலச்சக்கரத்தின் ஆட்டத்தில் தொலைத்தபொழுது வெறுமையே வெறுமையாகிப் போனது.

"என்ன மலரும் நினைவுகளோ"?

மனைவியின் குரல்கலைத்தது. எனது கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்துப் பதறிப்போய் விட்டா.

"என்ன சின்னப் பிள்ளையள் மாதிரி, கொஞ்சநேரத்திலை எல்லாரையும் பாக்கத்தானே போறம்".

"சரி எல்லோரும் பழைய மாதிரி இருப்பார்களா"?

"நான் பாத்த இலங்கை பரித்திதுறையில் வீதியில் ஊர்ந்த கவசவாகனங்களும், சோதனைச் சாவடிகளும் தானே அதன் பின்பு இப்ப தானே போறன் இவங்களை நினைச்சாலே என்னமோ பண்ணுது"

"இப்ப அப்படி எல்லாம் இல்லை நீங்கள் கண்டதையும் யோசிக்காதையுங்கோ"

என்று என்னை மனைவி சமாதனப்படுத்தினா. விமானம் குவைத் சர்வதேச விமான நிலயத்தில் இறங்கத் தன்னைத் தயார்ப்படுத்தியது. மனைவியும் மீண்டும் விமானத்தை ஓட்டுபவரை நினைத்தா. கால்வாசியாக வந்த விமானம் குவைத் இலங்கைத் தொழிலாளர்களால் நிறைந்து வழிந்து. எல்லோருக்கும் உறவுகளைப் பார்க்கும் சந்தோசம். விமானமே சந்தைக்டையாக மாறியது. எனக்கோ தலைஇடியாக இருந்தது.நீண்ட நேரப்பயணம் அசதியாக இருந்தது.கண்கள் இரண்டும் நித்திரையின்மையால் சிவந்து போய் இருந்தன. பலர் பெண்களாகவே இருந்தனர். எல்லோரும் குடிவரவு விண்ணப்பத்தை நிரப்புவதில் மும்மரமக இருந்தார்கள். சிலருக்கு விண்ணப்பத்தை நிரப்பவே தெரியவல்லை. இவர்களது அறியாமை அரபுகளுக்குக் குறைந்த தினார்களாகவும், அரசயல்வாதிகளுக்கு அரசியலாகவும் போவதை நினைக்க மனது கனத்தது. இவர்களும் எங்களைப் போல் தானே வெய்யிலிலும் குளிரிலும் அல்லாடுவரர்கள். நேரம் அதிகாலை 4 மணி. விமானம் பண்டரநாயக்கா சர்வதேச விமானநிலயத்தில் தன் கால்களை அகலப்பரப்பி வேகமாக இறங்கி ஓடுதளத்தில் ஓடி நின்றது.





தொடரும்

June 01, 2011

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...