Skip to main content

நெருடிய நெருஞ்சி – 05





"யார் இவர்" ?

"எனது கணவர்".

"எப்படி நம்பிறது" ? "எனது கணவர் என்பதை உறுதிப்படுத்த என்ன வேண்டும்" ?

"விவாகப்பதிவுப் பத்திரம் உள்ளதா" ?

"பொறுங்கள் பஸ்சில் உள்ளது எடுத்துவருகின்றேன்".

இடையில் ஒரு சிப்பாய் எனது கடவுச்சீட்டை அவதனமாகப் பார்த்தான்.

"உங்கள் விசா எங்கே"? என்று முட்டாள்தனமாய் கேட்டான்.

"பிரெஜ் பிரஜைக்கு இங்கு வர விசா தேவையில்லை."

இருங்கள் வருகின்றேன் என்று கடவுச்சீட்டுடன் உள்ளே சென்று மறைந்தான். எனக்குச் சனி தொடங்கி விட்டதோ? மனைவி பஸ்சிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தா. உள்ளே இருந்து திரும்பிய சிப்பாய்

"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ? எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது . மனைவி பொறுமையாக விளங்கப்படுத்தினா. அவன் என்னைப் பார்த்து

"எம் ஓ டி பெர்மிற் இருக்கா " ?

"உங்கள் இணையத்தளத்தில் இது தேவையில்லை என்று நாங்கள் வெளிக்கிட்ட அன்று 4ம் திகதி காலை போட்டிருந்தீர்களே அதனால் நான் எடுக்கவில்லை". "இன்று மாலை சட்டம் மாற்றப் பட்டுள்ளது".

"உங்ளை தொடரந்து செல்ல அனுமதிக்க முடியாது நீங்கள் கொழும்பு போய் எம் ஓ டி ஐ எடுத்து வாருங்கள்".

"நீங்கள் யாழ்ப்பாணம் போகலாம்"

என்று மனைவியை பாரத்துச் சொன்னான்.

"இன்று மாலை போட்ட சட்டம் எப்படி எங்களுக்குத் தெரியும் "?

"எங்களால் அனுமதிக்க முடியாது " .

இவனிடம் பேசிப் பயனில்லை.

"உங்கள் மேலதிகாரியுடன் கதைக்க வேண்டும்" .

மனைவியின் அருகில் நின்ற பஸ் ட்றைவரிடம் எங்களுடைய பயணப் பொதிகளை இறக்கி விட்டு பஸ்சை எடுக்கும் படி கட்டளையிட்டான் .

எங்களின் பயணப்பொதிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு மறைந்தது. எங்களுடன் இறங்கிய மற்றய இருவருக்கும் இதே நிலை ஏற்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. சிறிது தூரத்தில் இருந்த ஏ9 பாதையில் வந்த வாகனங்களின் இரைச்சல் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்தில் ஓர் இராணுவ அதிகாரி எங்களை நோக்கி வந்தான். "என்ன பிரச்சனை "?

எனது மனைவி பிரச்சனையை எடுத்துச்சொன்னா. பொறுமையாகக் கேட்டவன் எனது கடவுச்சீட்டை மீண்டும் ஆராய்ந்தான். "உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்". எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

 
 
 
 
தொடரும்

June 07, 2011

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...