Skip to main content

நெருடிய நெருஞ்சி – 05





"யார் இவர்" ?

"எனது கணவர்".

"எப்படி நம்பிறது" ? "எனது கணவர் என்பதை உறுதிப்படுத்த என்ன வேண்டும்" ?

"விவாகப்பதிவுப் பத்திரம் உள்ளதா" ?

"பொறுங்கள் பஸ்சில் உள்ளது எடுத்துவருகின்றேன்".

இடையில் ஒரு சிப்பாய் எனது கடவுச்சீட்டை அவதனமாகப் பார்த்தான்.

"உங்கள் விசா எங்கே"? என்று முட்டாள்தனமாய் கேட்டான்.

"பிரெஜ் பிரஜைக்கு இங்கு வர விசா தேவையில்லை."

இருங்கள் வருகின்றேன் என்று கடவுச்சீட்டுடன் உள்ளே சென்று மறைந்தான். எனக்குச் சனி தொடங்கி விட்டதோ? மனைவி பஸ்சிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தா. உள்ளே இருந்து திரும்பிய சிப்பாய்

"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ? எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது . மனைவி பொறுமையாக விளங்கப்படுத்தினா. அவன் என்னைப் பார்த்து

"எம் ஓ டி பெர்மிற் இருக்கா " ?

"உங்கள் இணையத்தளத்தில் இது தேவையில்லை என்று நாங்கள் வெளிக்கிட்ட அன்று 4ம் திகதி காலை போட்டிருந்தீர்களே அதனால் நான் எடுக்கவில்லை". "இன்று மாலை சட்டம் மாற்றப் பட்டுள்ளது".

"உங்ளை தொடரந்து செல்ல அனுமதிக்க முடியாது நீங்கள் கொழும்பு போய் எம் ஓ டி ஐ எடுத்து வாருங்கள்".

"நீங்கள் யாழ்ப்பாணம் போகலாம்"

என்று மனைவியை பாரத்துச் சொன்னான்.

"இன்று மாலை போட்ட சட்டம் எப்படி எங்களுக்குத் தெரியும் "?

"எங்களால் அனுமதிக்க முடியாது " .

இவனிடம் பேசிப் பயனில்லை.

"உங்கள் மேலதிகாரியுடன் கதைக்க வேண்டும்" .

மனைவியின் அருகில் நின்ற பஸ் ட்றைவரிடம் எங்களுடைய பயணப் பொதிகளை இறக்கி விட்டு பஸ்சை எடுக்கும் படி கட்டளையிட்டான் .

எங்களின் பயணப்பொதிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு மறைந்தது. எங்களுடன் இறங்கிய மற்றய இருவருக்கும் இதே நிலை ஏற்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. சிறிது தூரத்தில் இருந்த ஏ9 பாதையில் வந்த வாகனங்களின் இரைச்சல் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்தில் ஓர் இராணுவ அதிகாரி எங்களை நோக்கி வந்தான். "என்ன பிரச்சனை "?

எனது மனைவி பிரச்சனையை எடுத்துச்சொன்னா. பொறுமையாகக் கேட்டவன் எனது கடவுச்சீட்டை மீண்டும் ஆராய்ந்தான். "உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்". எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

 
 
 
 
தொடரும்

June 07, 2011

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...