Skip to main content

நிலவு குளிர்சியாக இல்லை




வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது.

ஜானவி ஊரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் இளைப்பாறிய அதிபர். அவளது கணவரோ பிரபல கண்வைத்திய நிபுணராக இருந்து பத்து வருடங்களுக்கு முதல் காலமாகிவிட்டார். கணவரின் இழப்பை ஜானவியால் ஜீரணிக்க முடியவில்லை. கணவர் உயிருடன் இருந்தபொழுதே தனது ஒரே மகளான மைதிலியை பிரான்சில் இருந்த அவர்களது நண்பர் ஒருவரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டாள் ஜானவி. தனது கணவர் ஆரம்பித்த வயது முதிர்ந்தோர் இல்லத்தைப் பொறுப்பெடுத்து நடத்திக் கொண்டிருந்தாலும், கடந்த மூன்று வருடங்களாக மகள் மைதிலி தன்னிடம் வந்து இருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மைதிலியோ, தனது பிள்ளைகளைப் பார்பதற்கும் அம்மாவால் வரும் வயது முதிர்ந்தோருக்கான உதவித்தொகை எல்லாவற்றையும் மனதில் வைத்தே அம்மாவை வற்புறுத்திக் கொண்டிருந்தது அந்த அப்பாவி அம்மா ஜானவிக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அடிக்குமேல் அடி அடிக்க அம்மியும் நகரும் என்பது போல மைதிலி வெளிநாட்டு வாழ்வின் மகத்துவங்களையும் சொல்லி ஜானவியின் மனதை வென்று விட்டாள்.

ஜானவியை மருந்து போடுவதற்கும், பகல் சாப்பாடு சாப்பிடுவதற்கும் விமானப்பணிப்பெண் மெதுவாகத் தட்டி எழுப்பினாள். ஜானவியின் நுனிநாக்கு ஆங்கிலம் அப்பொழுது நன்றாகவே கைகொடுத்தது. ஜானவி பகல் சாப்பாட்டை முடித்துவிட்டுப் புதினம் பார்க்கும் ஆவலில் தனது இருக்கையின் ஜன்னலை மெதுவாகத் திறந்தாள். அங்கே சூரியவெளிச்சம் அவள் கண்களைக் கூசியது. வெண்முகில் கூட்டங்கள் திட்டுத்திட்டாகப் பரவி இருந்தன. அதனூடே விமானம் ஊடறுத்துத் தன் இலக்கு நோக்கி வரைந்தது, அவள் மனதைப் போலவே. விமானம் பாரிசில் தரைதட்ட இன்னும் ஒருமணித்தியாலங்களே இருந்தன. அவளின் மனம் பலவாறு மறுகியது. அவளிற்குப் பேரப்பிள்ளைகள் பிறந்தது செவிவழிச் செய்தியே.தனது குடும்பத்தின் பெயர்சொல்ல வந்த வாரிசுகளை காண அவள் மனம் ஆலாய் பறந்தது. விமானம் தனது அகலக் கால்களைப் பரப்பி ஓடுபாதையில் வழுக்கி ஓடி நின்றது. அப்பொழுது மாலை வேளையாகையால் விமானநிலையமும் அதன் சுற்றுப்புறம் எங்கும் வெத்திலை துப்பியிருந்தது .

ஜானவி தனது குடிவரவு அலுவல்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அதிக நேரம் அவள் இருந்தமையால் கால்கள் வீங்கி நடப்தற்கு அவள் சிரமப்பட்டாள். எல்லோரும் தனக்காக அங்கு கூடியிருப்பார்கள் என்றே அவள் எதிர்பார்த்தாள் ஜானவி. தனது மருமகன் மட்டும் அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்திருப்பதை ஜானவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வழமையான விசாரிப்புகளுடன், மைதிலியின் வீடு அருகே இருந்ததால் அவளை ரெறியினிலேயே மருமகன் அழைத்துச் சென்றார். பத்துநிமிட பயணத்தின்பின் அவர்கள் அவர்களது குடியிருப்புத்தொகுதியை அடைந்தார்கள். ஜானவி வரும்பொழுது எல்லாவற்றையுமே அவதானித்துக்கொண்டுதான் வந்தாள். கிராமத்தில் இருந்த ஜானவிக்கு நீண்ட நெடிய அடுக்குமாடிகளின் தொகுப்பு பிரமிப்பை ஏற்படுத்தின சுற்றாடல்கள் ஆள்நடமாட்டமற்று மிகவும் அமைதியாக இருந்தன. அது அவளிற்கு நெருடலாகவே இருந்தன. மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பற்றி மருமகனிடம் கேட்க ஜானவிக்குக் கூச்சமாக இருந்தது. அவள் வீட்டில் நுளையும்பொழுது வீட்டில் யாருமே இருக்கவில்லை. அவளது கூச்சத்தை தீர்க்குமுகமாக மைதிலி வேலைக்குப் போனதையும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதையும் மருமகன் கூறிக்கொண்டிருந்தார்.

ஜானவிக்கு தான் வளர்த்த பிள்ளையும் பேரப்பிள்ளைகளும் தன்னை பார்க்க விமானநிலயத்திற்கு வராதது பெரிய எமாற்றமாகவே இருந்தது. சிறிது நேரத்தின் பின்பு மைதிலியும் பேரப்பிள்ளைகளும் வீட்டினுள் நுளைந்தார்கள். மைதிலி தாயைக் கண்டவுடன் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதாள். பத்துவருடப் பிரிவின் ஆற்றாமை அதில் தெரிந்தது. பேரப்பிள்ளைகள் மைதிலியின் பின்பு முழுசிக்கொண்டு நின்றார்கள். மைதிலி அவர்களை ஜானவிக்கு அறிமுகப்படுத்தினாள். அவர்கள் பிரெஞ்சிலேயே ஜானவியுடன் கதைத்தார்கள். பேரப்பிள்ளைகள் தமிழ் கதைக்க முடியாமல் கஸ்ரப்படுவதை பார்க்க ஜானவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னிடம் படித்தவர்களெல்லாம் பல உயர் பதவிகளில் இருக்கும்பொழுது தனது பேரப்பிள்ளைகளுக்கு தாய்மொழி தெரியவில்லை. என்பது ஆற்றமுடியாமல் இருந்தது மைதிலி பிள்ளைகளைக் கவனிக்காது எந்தநேரமும் வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்தது ஜானவிக்கு ஒருவித எரிச்சலையே கொடுத்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஜானவி வந்து ஒருமாதத்திற்கு மேலான நிலையில், ஜானவிக்கு மைதிலியின் வாழ்க்கை முறை அறவே பிடிக்கவில்லை. ஓரிருநாட்கள் ஜானவியை கோயிலுக்குக் கூட்டிச் சென்றாள் மைதிலி. அப்பொழுது ஜானவிக்கு வெளியில் இடங்களை பார்த்தது சிறிது சந்தோசமாக இருந்தது. தனதுமகள் இப்படி மாறுவாள் என்று ஜானவியால் நம்ப முடியாமல் இருந்தது. அவளும் கணவரும் வேலை செய்தும் மைதிலியை எந்தவித குறையுமில்லாமலேயே வளர்த்தெடுத்தார்கள். ஆனால் தனது பேரப்பிள்ளைகள் அன்புக்காக ஏங்கி தன்னிச்சையாக வளருவது அவளுக்கு மனச்சங்கடமாகவே இருந்தது. மொத்தத்தில் அவளுக்கு பிரான்ஸ் வாழ்க்கை மனச்சங்கடமாகவே இருந்தது. அவளது எதிர்பார்புகள் எதுவுமே நிறைவேறவில்லை. அவளது மனமோ ஊரிற்குப் போக ஏங்கியது. ஒரு அங்கு பிரச்சனைகள் இருந்தாலும் அன்பும் அரவணைப்பும் அங்கு நிறையவே இருந்தது. ஊரின் போலித்தனமல்லாத வாழ்க்கைக்கு ஜானவியின் மனம் நிறையவே ஏங்கியது. தான் இங்கு வர எடுத்தமுடிவு பிழையோ என்று ஜானவி நிறையவே யோசித்தாள். அவள் தீவிரமாக யோசித்து ஒருமுடிவுக்கு வந்திருந்தாள். தனது ஏயார்லைன்ஸ்சுக்கு போன் பண்ணி தனது ரிக்கற்ரை மீள்பதிவு செய்தாள் ஜானவி. தனது முடிவை மைதிலிக்கு சொன்னப்பொழுது அதிர்ச்சியுடன் அவளை வினோதமாகப் பார்த்தாள். மைதிலியின் திட்டம் தவிடுபொடியாகியது அப்பாவி ஜானவிக்கு தெரியவாய்ப்பில்லைத்தான் .






April 12, 2013

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...