Skip to main content

நெருடியநெருஞ்சி -29





" என்ன யோசினை " ? என்னை இடைவெட்டனாள் மனைவி . " பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே " ? கலகலவென்று மனைவி சிரித்தாள் . " நீங்கள் வரவர நல்லாத்தான் பகிடி விடுறியள் ". நான் நடையைக் குறைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தேன் . "கண்ணன்!!! வடிவாய் யோசியுங்கோ .நாங்கள் கற்பனையில வேணுமெண்டால் இங்கை இருக்கலாம். நடைமுறையிலை சரிப்பட்டு வராது .ஏனெண்டால் நீங்கள் இங்கையிருந்து வெளிக்கிட்டுக் கனகாலம் . உங்களுக்கு இங்கத்தையான் நடைமுறை சரியா விழங்கேல. ஒருபக்கம் இருந்தால் , எழும்பினால் வெள்ளைவான் கடத்தல் , கப்பம் எண்டு சனங்களை ஒரு நிரந்தரபயத்திலை வைச்சிருக்கிறான் . மற்றப்பக்கத்தால எங்கடை இருப்பு உடைஞ்சு சுக்குநூறாப் போச்சுது . யாழ்ப்பாணத்தில நேரை எல்லாம் பாத்தனிங்கள் தானே ?? பிள்ளைப்பெத்தால் கூட ஆமியிட்டைச் சொல்லிப்போட்டுத்தான் பெறவேணும் . இங்கையிருந்து நித்தம்நித்தம் மனசாலையும் , உடம்பாலையும் சாகிறதை விட பிறான்சிலை கோப்பை கழுவினாலும் சுதந்திரமாய் நாங்கள் இருக்கலாந்தானே ?? " அப்ப இங்கை இருக்கிறவை மனுசரில்லையோ ??" எனது மனவெக்கை நெருப்புத்துண்டுகளாக வார்த்தைகளை வாயால்த் துப்பியது .எனது கை சிகரட்டைத் தேடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டது . மனைவி அதை சட்டைசெய்யாமல் எனது மனதை மாற்றும் முயற்சியிலேயே குறியாக இருந்தாள் . ஒருவகையில பாத்தால் அப்பிடித்தான் . இல்லாட்டி எப்பவோ எங்கடை சுதந்திரம் எங்களுக்கு கிடைச்சிருக்கும் . எங்களுக்கும் என்ன வயித்துவலியே ? குளிருக்கையும் ,பனிக்கையும் எங்களைவிட மூளையிலையும் , படிப்பிலையும் குறைஞ்ச வெள்ளையளோட வேலை செய்து ஆருக்கோ வருமானவரி கட்டிறதுக்கு " .

மனைவியின் குரல் உடைந்து கமறியது . நாங்கள் இருவரும் கதைத்தவாறே மச்சாள் வீட்டை அடைந்தோம் . மச்சாள் என்னைக் கலங்கிய கண்களுடன் வரவேற்றா . நான் அவாவைப் பிரிந்தபொழுது சிறுபிள்ளைகளாக இருந்த மச்சாளின் பிள்ளைகள் எனக்குப் புதினமாகவும் , அவர்களுக்கு நான் புதினமாகவும் இருந்தேன் . பல குடும்பக்கதைகளைக் கதைத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் பிரியமனமின்றி மச்சாளிடம் விடைபெற்றேன் . நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது வனானா லீவ்ஸ் ( BANANA LEEVES ) இல் இரவுச் சாப்பாட்டை முடிக்க உள்ளே நுளைந்தோம் . மங்கிய வெளிச்சமும் , மெதுவான புல்லாங்குழல் இசையும் ஒருவித மோகன நிலையை எனக்கு ஊட்டியது . நாங்கள் கேட்ட சாப்பாடுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம் . நானோ புல்லாங்குழலில் சொக்கியிருந்தேன் . நாங்கள் வந்த சாப்பாட்டை மெதுவாக ரசித்து , ருசித்துச் சாப்பிட்டோம் . நாங்கள் அங்கிருந்து வெளியேற ஒன்பது மணியாகியிருந்தது . நாங்கள் வீட்டை நோக்கி முன்னேறி சில நிமிடங்களில் அடைந்த பொழுது ,மனைவியின் நண்பி பல்க்கணியில் எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தா .நான் உடைகளை மாற்றிக் கொண்டு பல்க்கணிக்கு சிகரட்டுடன் வந்தேன் . ஏனோ என்மனம் பெரியக்காவைச் சுற்றியே வட்டமிட்டது .நான் சிறுவயதிலேயே அக்காவுடன் கூடிய ஒட்டுதல் இருந்ததால் வந்தவினையிது .எனது கைத்தொலைபேசியால் அக்காவின் எண்களை ஒற்றினேன் . மறுமுனையில் அக்காவின் குரல் ஒலித்தது . " அக்கா நித்திரையா போனியே ?" "இல்லையடா .இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சனான் "." சரி அக்கா நான் என்ன்னங் கொஞ்சநேரத்தில வெளிக்கிடப்போறன் ." "சரியடா நீ ஒண்டுக்கும் யோசியாமல் போட்டுவா . வறவரியமும் கட்டாயம் வா என்ன ?"






தொடரும் 



Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...