Skip to main content

நெருடியநெருஞ்சி -29





" என்ன யோசினை " ? என்னை இடைவெட்டனாள் மனைவி . " பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே " ? கலகலவென்று மனைவி சிரித்தாள் . " நீங்கள் வரவர நல்லாத்தான் பகிடி விடுறியள் ". நான் நடையைக் குறைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தேன் . "கண்ணன்!!! வடிவாய் யோசியுங்கோ .நாங்கள் கற்பனையில வேணுமெண்டால் இங்கை இருக்கலாம். நடைமுறையிலை சரிப்பட்டு வராது .ஏனெண்டால் நீங்கள் இங்கையிருந்து வெளிக்கிட்டுக் கனகாலம் . உங்களுக்கு இங்கத்தையான் நடைமுறை சரியா விழங்கேல. ஒருபக்கம் இருந்தால் , எழும்பினால் வெள்ளைவான் கடத்தல் , கப்பம் எண்டு சனங்களை ஒரு நிரந்தரபயத்திலை வைச்சிருக்கிறான் . மற்றப்பக்கத்தால எங்கடை இருப்பு உடைஞ்சு சுக்குநூறாப் போச்சுது . யாழ்ப்பாணத்தில நேரை எல்லாம் பாத்தனிங்கள் தானே ?? பிள்ளைப்பெத்தால் கூட ஆமியிட்டைச் சொல்லிப்போட்டுத்தான் பெறவேணும் . இங்கையிருந்து நித்தம்நித்தம் மனசாலையும் , உடம்பாலையும் சாகிறதை விட பிறான்சிலை கோப்பை கழுவினாலும் சுதந்திரமாய் நாங்கள் இருக்கலாந்தானே ?? " அப்ப இங்கை இருக்கிறவை மனுசரில்லையோ ??" எனது மனவெக்கை நெருப்புத்துண்டுகளாக வார்த்தைகளை வாயால்த் துப்பியது .எனது கை சிகரட்டைத் தேடி எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டது . மனைவி அதை சட்டைசெய்யாமல் எனது மனதை மாற்றும் முயற்சியிலேயே குறியாக இருந்தாள் . ஒருவகையில பாத்தால் அப்பிடித்தான் . இல்லாட்டி எப்பவோ எங்கடை சுதந்திரம் எங்களுக்கு கிடைச்சிருக்கும் . எங்களுக்கும் என்ன வயித்துவலியே ? குளிருக்கையும் ,பனிக்கையும் எங்களைவிட மூளையிலையும் , படிப்பிலையும் குறைஞ்ச வெள்ளையளோட வேலை செய்து ஆருக்கோ வருமானவரி கட்டிறதுக்கு " .

மனைவியின் குரல் உடைந்து கமறியது . நாங்கள் இருவரும் கதைத்தவாறே மச்சாள் வீட்டை அடைந்தோம் . மச்சாள் என்னைக் கலங்கிய கண்களுடன் வரவேற்றா . நான் அவாவைப் பிரிந்தபொழுது சிறுபிள்ளைகளாக இருந்த மச்சாளின் பிள்ளைகள் எனக்குப் புதினமாகவும் , அவர்களுக்கு நான் புதினமாகவும் இருந்தேன் . பல குடும்பக்கதைகளைக் கதைத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் பிரியமனமின்றி மச்சாளிடம் விடைபெற்றேன் . நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது வனானா லீவ்ஸ் ( BANANA LEEVES ) இல் இரவுச் சாப்பாட்டை முடிக்க உள்ளே நுளைந்தோம் . மங்கிய வெளிச்சமும் , மெதுவான புல்லாங்குழல் இசையும் ஒருவித மோகன நிலையை எனக்கு ஊட்டியது . நாங்கள் கேட்ட சாப்பாடுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம் . நானோ புல்லாங்குழலில் சொக்கியிருந்தேன் . நாங்கள் வந்த சாப்பாட்டை மெதுவாக ரசித்து , ருசித்துச் சாப்பிட்டோம் . நாங்கள் அங்கிருந்து வெளியேற ஒன்பது மணியாகியிருந்தது . நாங்கள் வீட்டை நோக்கி முன்னேறி சில நிமிடங்களில் அடைந்த பொழுது ,மனைவியின் நண்பி பல்க்கணியில் எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தா .நான் உடைகளை மாற்றிக் கொண்டு பல்க்கணிக்கு சிகரட்டுடன் வந்தேன் . ஏனோ என்மனம் பெரியக்காவைச் சுற்றியே வட்டமிட்டது .நான் சிறுவயதிலேயே அக்காவுடன் கூடிய ஒட்டுதல் இருந்ததால் வந்தவினையிது .எனது கைத்தொலைபேசியால் அக்காவின் எண்களை ஒற்றினேன் . மறுமுனையில் அக்காவின் குரல் ஒலித்தது . " அக்கா நித்திரையா போனியே ?" "இல்லையடா .இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சனான் "." சரி அக்கா நான் என்ன்னங் கொஞ்சநேரத்தில வெளிக்கிடப்போறன் ." "சரியடா நீ ஒண்டுக்கும் யோசியாமல் போட்டுவா . வறவரியமும் கட்டாயம் வா என்ன ?"






தொடரும் 



Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...