Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 11




என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன். செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் .

தேவையான பொருட்கள் :

கிக்கினி காய் 6 . 

உள்ளி 7 - 8 பல்லு .

கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl .

உப்பு தேவையான அளவு .

முட்டை 3 .

போர்மாஸ் துருவல் ( fromage rapé ) ( grated cheese ) 100 கிறாம் .

கறுவாப் பட்டை தூள் தேவையான அளவு .

வெங்காயம் 1 - 2 .ஓலிவ் எண்ணை 3 - 4 மேசைக்கறண்டி.

பக்குவம் :

கிக்கினிக் காயைக் கழுவி வட்ட வடிவில் வெட்டவும் .உங்கள் வெதுப்பியை 200 c யில் விட்டு சூடேற்றவும் . உள்ளியை உடைத்து நசிக்கவும் . முட்டையை உடைத்து கிறாம் லிக்கியுட் உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும் . நசித்த உள்ளி , உப்பு , கறுவாத் தூள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அடியுங்கள் . வெங்காயத்தை துப்பரவு செய்து வெட்டவும் . ஒலிவ் எண்ணையை ஒரு தாச்சியில் விட்டு சூடாக்கவும் . சூடான எண்ணையில் வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும் . வதங்கிய வெங்காயத்துடன் வெட்டிய கிக்கினி காயையும் கொட்டி நீர் இறங்கும் வரை வதக்கவும் . வதங்கிய கலவையை வெதுப்பிக்குப் பாவிக்கும் பாத்திரத்தில் கொட்டி பரவவும் . முட்டையை சேர்த்து அடித்த கிறாம் லிக்கியுட்டை அதனுள் ஊற்றி நன்றாகக் கலக்கவும் . போர்மாஸ் துருவலை அதன் மேல் தூவவும் . வெதுப்பியில் 200 c யில் 30 நிமிடங்கள் கிறில் புறோகிறாமில் விட்டு மூடி விடவும் .

படிமானம் :

பெரிசாய் ஒண்டும் இல்லை . சின்ன ஆக்கள் நல்லா விரும்பி சாப்பிடுவினம் . பெரிய ஆக்களும் சாப்பிடலாம் , கொஞ்சமாய் சாப்பிடவேணும் . ஏனெண்டல் கொஞ்சம் விக்கினமான சாமான் கண்டியளோ .




January 30, 2013

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...