Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 11




என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன். செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் .

தேவையான பொருட்கள் :

கிக்கினி காய் 6 . 

உள்ளி 7 - 8 பல்லு .

கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl .

உப்பு தேவையான அளவு .

முட்டை 3 .

போர்மாஸ் துருவல் ( fromage rapé ) ( grated cheese ) 100 கிறாம் .

கறுவாப் பட்டை தூள் தேவையான அளவு .

வெங்காயம் 1 - 2 .ஓலிவ் எண்ணை 3 - 4 மேசைக்கறண்டி.

பக்குவம் :

கிக்கினிக் காயைக் கழுவி வட்ட வடிவில் வெட்டவும் .உங்கள் வெதுப்பியை 200 c யில் விட்டு சூடேற்றவும் . உள்ளியை உடைத்து நசிக்கவும் . முட்டையை உடைத்து கிறாம் லிக்கியுட் உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும் . நசித்த உள்ளி , உப்பு , கறுவாத் தூள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அடியுங்கள் . வெங்காயத்தை துப்பரவு செய்து வெட்டவும் . ஒலிவ் எண்ணையை ஒரு தாச்சியில் விட்டு சூடாக்கவும் . சூடான எண்ணையில் வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும் . வதங்கிய வெங்காயத்துடன் வெட்டிய கிக்கினி காயையும் கொட்டி நீர் இறங்கும் வரை வதக்கவும் . வதங்கிய கலவையை வெதுப்பிக்குப் பாவிக்கும் பாத்திரத்தில் கொட்டி பரவவும் . முட்டையை சேர்த்து அடித்த கிறாம் லிக்கியுட்டை அதனுள் ஊற்றி நன்றாகக் கலக்கவும் . போர்மாஸ் துருவலை அதன் மேல் தூவவும் . வெதுப்பியில் 200 c யில் 30 நிமிடங்கள் கிறில் புறோகிறாமில் விட்டு மூடி விடவும் .

படிமானம் :

பெரிசாய் ஒண்டும் இல்லை . சின்ன ஆக்கள் நல்லா விரும்பி சாப்பிடுவினம் . பெரிய ஆக்களும் சாப்பிடலாம் , கொஞ்சமாய் சாப்பிடவேணும் . ஏனெண்டல் கொஞ்சம் விக்கினமான சாமான் கண்டியளோ .




January 30, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...