Skip to main content

நெருடிய நெருஞ்சி – 04



மாலை 6 மணியானாலும். வெய்யிலின் அகோரம் அடங்கவில்லை. அந்த பஸ் குளீரூட்டிய சொகுசு வண்டியானாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மனைவி தந்த தேங்காய்ப்பூ சிறிய துவாய் வியர்வையில் தோய்ந்து ,சிறியதாக வியர்வை மணத்தது.

"இவங்கள் எப்ப வெளிக்கிடுவங்கள் " ?

"ஆக்கள் சேரத்தான் பஸ்சை எடுப்பினம்".

பஸ் போறணை மாதிரி இருந்தது. ஒருவாறு பஸ் வெளிக்கிடத் தொடங்கியதும் முகத்தில் அடித்த காற்று வெக்கைக்கு இதமாக இருந்தது . ஆனாலும் நல்ல வடிவாக இரவு 10 மணிவரையும் பஸ் கொழும்பைக் காட்டியது எனக்கு எரிச்சலாக வந்தது. பின்பு அது கண்டி வீதியில் வேகமெடுத்தது. இருட்டில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. மனைவி களைப்பின் மிகுதியால் எனது தோழில் நித்திரையாகி விட்டா. எனக்கு நித்திரை வரமறுத்தது. பஸ்சில் ஏறும் போதே மனைவி அழுத்தமாக சொல்லியிருந்தா

"யாரோடையும் தேவையில்லாமல் கதைக்கக் கூடது".

குறுகிய ஏ9 வீதியல் பஸ் இருளைக் கிழித்துப் பறந்தது. பல இடங்களில் புதிய சிறிய விகாரைகள் முளைத்து இருந்தன. புத்தரும் அகதியாகி இருக்க இடமில்லாமல் மீள்குடியேற்றப்பட்டுள்ளாரோ ? பஸ்டைறவரும் பஸ்சை நிப்பாட்டி நிப்பாட்டி எல்லாப் புத்தரையும் கும்பிட்டுக் கொண்டு வந்தார். பஸ்சில் நான் ஒருவன் தான் முழிப்பாக இருந்தேன், என்னடைய நிலையப்படி. என்வாழ்க்கையில் கால் நூற்றாண்டைத் துலைத்து புதிய ஐரோப்பிய முகத்துடன் வருவது மனதை பிழிந்தது. என்னுடன் கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் என்னை ஏற்றுக்கொள்வார்களா ? எப்படியாயினும் கண்ணரில் பங்காளியில்லாதவன் தானே. என்னால் கண்ணீரைத் தடுக்கமுடியவில்லை. இருபக்கமும் அடர்ந்த காடுகளின் எச்சசொச்சங்கள் கரைகட்டி நின்றன. இதில் தானே பரணி பாடினோம். தரணியைத் திரும்ப வைத்தோம். எத்தனை பேர் எங்களைப் பார்க்க வரிசையில் நின்றார்கள். அதில் சூது இருந்ததை எப்படி பகுத்தறியாது விட்டோம்? பஸ் வேகத்தைக் குறைத்தது. தூரத்தே இருளில் பல உருவங்களும், வீதியை மறைத்த வீதித்தடையும் தெரிந்தது. எந்த இடம் என்று சரியாகவும் தெரியவில்லை. நேரம் அதிகாலை 1.30 ஐக் காட்டியது. கலவரத்துடன மனைவியை எழுப்பினேன். மற்வர்களும் பரபரப்பானார்கள்.

"இது எந்த இடம்"?

"ஏன் பஸ் மெதுவாகப் போகின்றது"?

சற்றுமுற்றும் பார்த்த மனைவி,

" இதுதான் ஓமந்தைசோதனைச்சாவடி"

"நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் கதைக்கப்படாது".

எனக்குப் பயத்தில் வியர்த்துக்கொட்டியது.மனைவி நிதானமாகத் தனது இலங்கை அடையாள அட்டையையும் இருவரது கடவுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்துக்கொண்டா. எமது பஸ்சின் முன்னே பல வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. தூரத்தே ஐந்தாறு வரிசைகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் முற்றாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இடம் ஒரு நிரந்தர படைமுகாமைற்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் நிறதுத்தி சோதனையிட்டவாறே சாரதிகளை போய் தங்கள் விபரங்களைப் பதியுமாறு கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்கள் இராணுவச் சிப்பாய்கள். எமது பஸ்சில் ஏறிய சிப்பாய்கள் உள்ளூர் ஆட்களை இருக்கும்படியும் வெளிநாட்டவர்களைப் பதியும் இடத்திற்குப் போகும்படி சிங்களத்தில் சொன்னார்கள் . பஸ்சில் இருந்தவர்கள் எங்களை விரோதமாகப் பாரத்தது அப்பட்டமாகவே தெரிந்தது. எங்களால் தங்களுக்குத் தொந்தரவு வரும் என நினைத்தார்களோ? எங்களுடன் இருவருமாக 4 பேர் பஸ்சைவிட்டு இறங்கினோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னே வலிந்த புன்னகையுன் நின்று கொண்டேன். மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி.





June 04, 2011

தொடரும்

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...