Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 10




இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் .

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் 2

வாழைக்காய் 2

சின்னவெங்காயம் 8 - 10

பச்சைமிளகாய் 7 - 8

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லிக் கீரை 4 - 5

கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக்கறண்டி 

பக்குவம் :

வெதுப்பியை 250 யில் சூடாக விடுங்கள் . கத்தரிக்காய் , வாழைக்கய் ஆகியவற்றின் மேல்ப் பக்கத்தையும் , கீழ் பக்கத்தையும் கத்தியால் வெட்டுங்கள் . இரண்டையும் ஈயப்பேப்பறால் சுற்றி , கத்தியால் ஈயப்பேப்பறை சிறு ஓட்டைகள் போடுங்கள் . வெதுப்பி சூடாகியதும் ஈயப்பேப்பறால் சுற்றிய கத்தரிக்காயையும் ,வாழைக்காயையும் 30 - 40 நிமிடங்கள் வரை கிறில் செய்யுங்கள் . பச்சைமிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் துப்பரவாக்கி குறுணியாக வெட்டி எடுங்கள் . கத்தரிக்காய் , வாழைக்காய் சூடாகியதும் சிறிது ஆறவிட்டு , இரண்டினதும் தோலை உரித்து எடுத்து , சிறய துண்டுகளாக வெட்டுங்கள் . வெட்டிய வெங்காயம் , பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வெட்டிய துண்டுகளுடன் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள் . கிறாம் பிறெஷ் ஐயும் சேர்த்து பிசைந்து உப்புச் சேருங்கள் . இறுதியாக சுவை சேர்க்க கொத்தமல்லிக் கீரையை நுள்ளி சம்பலில் சேர்த்து விடுங்கள் .

படிமானம் :

உபவசம் இருந்து போட்டு பொன்னி அரிசி சோறு அல்லது சம்பா அரிசிச் சோறு மரக்கறியோடை , இதையும் சாப்பிட்டுப் பாருங்கோ சொல்லிவேலையில்லை .



January 29, 2013

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...