Skip to main content

என்ரை முதல் அனுபவம்.





நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா,நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு.நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன்.விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா.நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது .

அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன்.எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான் கூட்டணி வேட்பாளர். லெக்சன் கிட்டிது. கண்ட றோட்டில எல்லாம் நோட்டிசும் பசைவாளியோடையும் நோட்டிஸ் ஒட்டிக் கொண்டிருந்திச்சினம் பேரவை அண்ணைமார். நாங்கள் சின்னப்பெடியள் எண்டபடியால விடுப்பு மட்டும் தான் பாப்பம். லவுஸ்பீக்கர் வேற வாத்தியாற்ரை பாட்டுகளை போட்டு சனங்களை குசி ஏத்தீச்சிது.சில பேர் கள்ளைப் போட்டிட்டு வாத்தியார் மாதிரி அபினயிச்சு பாடீச்சினம்.நான் வாயைப் பிளந்து கொண்டு நிண்டு லவுஸ்பீக்கறையும் கட்டின தோறணங்கள்,கடுதாசிப் பேப்பர் அலங்கரிப்புகளை எல்லாம் பிராக்கு பாத்தன்.லெக்சன் தொடங்க முதல் நாளைக்கு முதல் நாள் கோப்பாய் கந்தசாமி கோயலடியில பெரிய கூட்டம். செல்வநாயகம்,அமீர், யோகேஸ் எல்லாரும் வந்தீச்சினம்.மங்கையக்கா தமிழ்தாய் பாட்டு பாடி கையில பிளேட்டால வெட்டி அதால வந்த ரத்தத்தை அமீருக்கு பொட்டு வைச்சா. சனம் எல்லாம் உரு ஏறி ஏங்கடை வோட்டு உங்களக்குத் தான் எண்டு கத்தீச்சிது.பக்கத்தில நிண்ட அப்பாவும் சனத்தோடை சேந்து கத்தினார். எனக்கு ஒரு கோதாரியும் அந்த வயசில விளங்கேல.

பேந்து அங்கை இங்கை ஓடி எண்பத்தி ஆறில இங்கை வந்தன்.அப்பவும் எனக்கு உந்த சின்னப்பிள்ளை குணங்கள் போகேல.லெக்சன் எண்டால் கொஞ்சம் விளங்கத் தொடங்கீச்சுது. ஆனால் என்னால வோட் பண்ணேலாமல் போச்சு. ஒவ்வரு முறையும் இங்கை லெச்சனுக்கு முதல் கேக்கிற ரெண்டு பாட்டியளும் ரீவீயில நேரை வந்து ரீவி காறங்களின்ரை கேள்வியளுக்கு மறுமழி சொல்லுவீனம். நான் அப்பவும் விடுப்பு பாப்பன். ஆனால் லவுஸ்பீக்கர்,தோறணங்கள்,எடுபிடியள் இல்லாமல் போனது எனக்கு பெரிய குறையா போச்சுது.

இப்பிடியே போய் இண்டைக்கு முதல்தரம் கலியாணம் கட்டின மதிரி வோட்போட திறில்லங்கா இருக்கிறன். வேலையை கெதியா முடிச்சு கொண்டு ஒரே ஓட்டமாய் வந்து வீட்டுக்கு கிட்ட ஒரு பள்ளிகூடத்தடியல வோட் போடுற இடம் கிடந்திது. நான் அங்கை போனால் ஒரு அசுமாத்தத்தையும் காணேல.பாட்டுகள் தோறணங்களை காணேல. வேணுமெண்டு அட்ரசை மாறித் தந்து போட்டாளோ எண்டு எனக்கு மனிசீல ஐமிச்சம்.

வாசலில ஒரு கறுவல் உயரமாய் நிண்டான்.நான் அவனிட்டை வோட்டு போட வந்தன் எண்டு சொன்னன். அவன் என்ரை ஐடியை பாத்திட்டு உள்ளுக்கை விட்டான். நான் பதகளிச்சுக் கொண்டு உள்ளுக்கை உள்ளட்டன்.அங்கை ரெண்டு மூண்டு வெள்ளையள் இருந்தீச்சினம்.நான் அவையிட்டை பயந்து கொண்டு விசயத்தை சொன்னன்.அவை சார்கோசியின்ரை பேரையும் பிரான்ஸ்சுவா ஹோலண்ட் இன்ரை துண்டுகளையும் ஒரு என்வலப்பையம் தந்தீச்சினம். எனக்கு என்னன செய்யிறது எண்டு தெரியேல.பேந்து மற்றர சனத்தை பாத்தன்.அவை உடுப்பு மாத்தற அறை போல ஒண்டுக்குள்ளை போய் வெளியில வந்து அங்கால வோட்டு போடிற பெட்டிக்கு கிட்ட நிண்டீச்சினம். நான் அறைக்கை போய் சார்க்கோசியின்ரை பேர் துண்டை எடுத்து என்வலப்புக்குள்ளை வைச்சு துப்பலாலை ஒட்டினன்.அங்கால போனா ஒரு வெள்ளைப் பொம்பிளை என்ரை என்வல்ப்பை பெட்டிக்குமேலை வைக்கச்சொன்னா.நான் வைக்க ஒரு இரும்பு பிடியை பிறென்ஜ் சில "வோட்தே " எண்டு சொல்லி தன்ரை பக்கம் இழுத்தா.என்ரை என்வலப் பெட்டீக்கை போய் விழுந்திது.நான் பேந்தும் நிண்டன்.என்ன எனபது போல அவா பாத்தா. நீங்கள் எனக்கு கையில மை போடேல எண்டன். அவா சிரிச்சுக் கொண்டு சொன்னா,இங்கை அப்படியெல்லாம் செய்யிறேல போட்டு வா எண்டு. எனக்கு சப்பெண்டு போச்சிது.







May 06, 2012

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...