Skip to main content

யார் இலக்கியப் போலிகள் ? அ.யேசுராசா என் மீது வைத்துள்ள அவதூறுக்கு எதிர் வினை



கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது :

” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக…….

கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர் பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ? நீங்கள், அலை,திசை,கவிதை,தெரிதல் மூலம் தமிழ் எழுத்துப்பரப்புக்கு ஆற்றிய பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை அதேவேளையில் நீங்கள் செய்வதெல்லாம் சரி என்றும் என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் என்னை பேசவும் கண்டிக்கவும் பூரண உரிமையுண்டு ஆனால் உங்கள் அறம் பிறழ்ந்த செய்கையை என்னால் ரசிக்க முடியவில்லை”.

பிற்குறிப்பு : இதனை நீங்கள் கருணாகரனுக்கான ஆதரவுப் பதிவு என்று எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை.

கோமகன்

000000000000000000000

எனது இந்தப் பதிவுக்கு அ. யேசுராசா எனது முகநூல் உட்பெட்டியில் இவ்வாறாகப் பதிலளித்திருந்தார் :

“எப்போதும், “கொளுவிவிட்டுக் கூத்துப் பார்க்க விரும்புகிற” உங்களுக்கெல்லாம், அறம்சார்ந்த நிலைப்பாடு என ஒன்றும் இருக்கிறதோ! நல்ல நகைச்சுவை. எனது நட்புப் பட்டியலில் இருக்கத் தகுதியற்றதால், உங்களை அதிலிருந்து நீக்குகிறேன்”!

என்னை அவர் நட்பாக வைத்திருப்பது, விடுவது அவரது சுதந்திரம். ஆனால் எனது கேள்விகள் நிலுவையில் நிற்கின்றது அய்யா. அத்துடன் புதிதாக என் மீதும் ஒரு அவதூறை கிளப்பியிருக்கின்றார் அ. யேசுராசா. அவரது சித்து விளையாட்டுகள் அம்பலமான நிலையில் தவறுக்கு மேல் தவறுகள் விடுகின்றார் என்றே எண்ண வேண்டியுள்ளது. இந்த எதிர்வினையின் மூலம் பொதுவெளியில் அ.யேசுராசாவிடம் 03 கேள்விகளை நான் முன் வைக்கின்றேன்.

01 கவிஞர் கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து உங்களுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ?

02 ஒருவர் உங்களை பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ?

03 அய்யா உங்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகியது . நான் எங்கே எப்பொழுது உங்கள் இருவரையும் கொளுவி விட்டு கூத்துப் பார்த்தேன் ?

அய்யா இறுதிக்கு கேள்வி மிகவும் முக்கியமானது. உங்களை நீங்கள் ‘புனிதப்படுத்துவதற்காக’ எதுவரைக்கும் இறங்கத்தயாராக உள்ளீர்கள் என்பதனை நீங்கள் எனது உள் பெட்டியில் எழுதி நிரூபணம் செய்து விட்டீர்கள். இத்தகைய ‘கீழ்மை இலக்கிய அரசியலால்’ இதுவரையில் ஈழத்து தமிழ் எழுத்துப் பரப்பிற்கு நீங்கள் வைத்த வைத்திருக்கின்ற வகிபாகம் கேள்விக்குறியாகின்றது. உங்கள் கீழ்மையான அறம்பாடலுக்கு நீங்கள் எழுதிய ‘நினைவுக்கு குறிப்புகள்’ நூலே தக்கசான்றாகும். அதில் ‘ஐயர்’ தவிர்ந்து நிலாந்தனில் இருந்து வயது பேதம் பாராது அனைத்து எழுத்தாளர்களையுமே நீங்கள் அறம்பாடி தள்ளியிருந்தீர்கள். அதாவது உங்களை புனிதப்படுத்தி சக எழுத்தாளர்களையும் அவர்களது உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி இருந்தீர்கள்.

அய்யா நீங்கள் தமிழையும் எழுத்தையும் உண்மையிலேயே நேசிப்பவராக இருந்தால் எனது 3 கேள்விகளுக்கும் பொதுவெளியில் பகிரங்கமாகப் பதில் தாருங்கள். நன்றி வணக்கம்.





கோமகன்

28 ஆடி 2019

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...