Skip to main content

யார் இலக்கியப் போலிகள் ? அ.யேசுராசா என் மீது வைத்துள்ள அவதூறுக்கு எதிர் வினை



கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது :

” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக…….

கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர் பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ? நீங்கள், அலை,திசை,கவிதை,தெரிதல் மூலம் தமிழ் எழுத்துப்பரப்புக்கு ஆற்றிய பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை அதேவேளையில் நீங்கள் செய்வதெல்லாம் சரி என்றும் என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் என்னை பேசவும் கண்டிக்கவும் பூரண உரிமையுண்டு ஆனால் உங்கள் அறம் பிறழ்ந்த செய்கையை என்னால் ரசிக்க முடியவில்லை”.

பிற்குறிப்பு : இதனை நீங்கள் கருணாகரனுக்கான ஆதரவுப் பதிவு என்று எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை.

கோமகன்

000000000000000000000

எனது இந்தப் பதிவுக்கு அ. யேசுராசா எனது முகநூல் உட்பெட்டியில் இவ்வாறாகப் பதிலளித்திருந்தார் :

“எப்போதும், “கொளுவிவிட்டுக் கூத்துப் பார்க்க விரும்புகிற” உங்களுக்கெல்லாம், அறம்சார்ந்த நிலைப்பாடு என ஒன்றும் இருக்கிறதோ! நல்ல நகைச்சுவை. எனது நட்புப் பட்டியலில் இருக்கத் தகுதியற்றதால், உங்களை அதிலிருந்து நீக்குகிறேன்”!

என்னை அவர் நட்பாக வைத்திருப்பது, விடுவது அவரது சுதந்திரம். ஆனால் எனது கேள்விகள் நிலுவையில் நிற்கின்றது அய்யா. அத்துடன் புதிதாக என் மீதும் ஒரு அவதூறை கிளப்பியிருக்கின்றார் அ. யேசுராசா. அவரது சித்து விளையாட்டுகள் அம்பலமான நிலையில் தவறுக்கு மேல் தவறுகள் விடுகின்றார் என்றே எண்ண வேண்டியுள்ளது. இந்த எதிர்வினையின் மூலம் பொதுவெளியில் அ.யேசுராசாவிடம் 03 கேள்விகளை நான் முன் வைக்கின்றேன்.

01 கவிஞர் கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து உங்களுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ?

02 ஒருவர் உங்களை பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ?

03 அய்யா உங்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகியது . நான் எங்கே எப்பொழுது உங்கள் இருவரையும் கொளுவி விட்டு கூத்துப் பார்த்தேன் ?

அய்யா இறுதிக்கு கேள்வி மிகவும் முக்கியமானது. உங்களை நீங்கள் ‘புனிதப்படுத்துவதற்காக’ எதுவரைக்கும் இறங்கத்தயாராக உள்ளீர்கள் என்பதனை நீங்கள் எனது உள் பெட்டியில் எழுதி நிரூபணம் செய்து விட்டீர்கள். இத்தகைய ‘கீழ்மை இலக்கிய அரசியலால்’ இதுவரையில் ஈழத்து தமிழ் எழுத்துப் பரப்பிற்கு நீங்கள் வைத்த வைத்திருக்கின்ற வகிபாகம் கேள்விக்குறியாகின்றது. உங்கள் கீழ்மையான அறம்பாடலுக்கு நீங்கள் எழுதிய ‘நினைவுக்கு குறிப்புகள்’ நூலே தக்கசான்றாகும். அதில் ‘ஐயர்’ தவிர்ந்து நிலாந்தனில் இருந்து வயது பேதம் பாராது அனைத்து எழுத்தாளர்களையுமே நீங்கள் அறம்பாடி தள்ளியிருந்தீர்கள். அதாவது உங்களை புனிதப்படுத்தி சக எழுத்தாளர்களையும் அவர்களது உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி இருந்தீர்கள்.

அய்யா நீங்கள் தமிழையும் எழுத்தையும் உண்மையிலேயே நேசிப்பவராக இருந்தால் எனது 3 கேள்விகளுக்கும் பொதுவெளியில் பகிரங்கமாகப் பதில் தாருங்கள். நன்றி வணக்கம்.





கோமகன்

28 ஆடி 2019

Comments

Popular posts from this blog

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...